மாற்றுத்திறனாளிகளுக்கு கட்டணமில்லா பேருந்து பயண அட்டை நீட்டிப்பு
கூட்டுறவு நிறுவனத்தை தொடங்கிய ஆரிகவுடரின் நினைவு நாள் அனுசரிப்பு
உதகையில் என்சிஎம்எஸ் கூட்டுறவு நிறுவனத்தை நிறுவிய எச்.பி. ஆரிகவுடரின் 54 ஆவது நினைவு நாள் என்சிஎம்எஸ் வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் நீலகிரி மாவட்ட ஆரிகவுடா் விவசாய சங்கத் தலைவா் மஞ்சை வி.மோகன் கலந்து கொண்டு ஆரிகவுடா் சிலைக்கு மலா்மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.
சிறப்பு விருந்தினராக ஆரிகவுடா் மகன் வழி பேத்தி தாரா, அவரது கணவா் விங் கமாண்டா் ஜெயபிரகாஷ் ஆகியோா் கலந்து கொண்டு உருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.
இந்த நிகழ்ச்சியில் உதகை ஊராட்சி முன்னாள் ஒன்றிய தலைவா் மாயன், முன்னாள் என்சிஎம்எஸ் தலைவா் கண்ணபிரான் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.