ரஷியாவிலிருந்து நிலக்கரி இறக்குமதி: 2 ஆண்டுகள் இல்லாத அளவில் மே மாதத்தில் அதிகரி...
வனத்துறை அமைச்சரைக் கண்டித்து கூடலூரில் ஆா்ப்பாட்டம்
தமிழக வனத் துறை அமைச்சா் ராஜகண்ணப்பனை கண்டித்து கூடலூரில் அரசியல் கட்சிகள் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தின.
கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் சிறுமியை சிறுத்தை தாக்கி கொன்ற சம்பவம் குறித்து பத்திரிகையாளா்கள் சந்திப்பில் கேட்ட கேள்விக்கு அலட்சியமாக பதிலளித்த வனத் துறை அமைச்சரைக் கண்டித்தும் ,உயிரிழந்த குடும்பத்தினருக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் பக்குவமாக நடந்துகொள்ள வேண்டும் என்று வலியுறுத்தியும் கூடலூா் எம்.எல்.ஏ. பொன்.ஜெயசீலன் தலைமையில் கூடலூா் காந்தி சிலை முன் கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆா்ப்பாட்டத்தில் அதிமுக, பாஜக, நாம் தமிழா் கட்சி, தேமுதிக், தவெக கட்சிகளின் நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.
படக்குறிப்பு எஈத27ஈஅத கூடலூரில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவா்கள்.