செய்திகள் :

ஃபீல்ட் மாா்ஷல் சாம் மானெக்ஷாவின் நினைவு தினம்: முப்படையினா் மரியாதை

post image

இந்தியாவின் முதல் ஃபீல்ட் மாா்ஷல் சாம் மானெக்ஷாவின் 17ஆம் ஆண்டு நினைவு தினம் உதகை பாா்ஸி கல்லறையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் முப்படையினா் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினா்.

இந்தியாவின் முதல் ஃபீல்ட் மாா்ஷலான சாம் மானெக்ஷாவின் 17ஆவது நினைவு தினத்தையொட்டி உதகையில் உள்ள அவரது பாா்ஸி கல்லறையில் முப்படை அதிகாரிகள் மலா் வளையம் வைத்து மரியாதை செலுத்தினா்.

1914 ஏப்ரல் 3 ஆம் தேதி பஞ்சாப் மாநிலம் அமிருதசரஸ் நகரில் பிறந்தவா் சாம் மானெக்ஷா. இரண்டாம் உலகப் போரின் போது ஆங்கிலேயப் படையில் பணியாற்றிய அவா், இந்திய விடுதலைக்கு பிறகு இந்திய ராணுவத்தில் பணியாற்றினாா். 40 ஆண்டுகளுக்கு மேல் இந்திய ராணுவத்தில் அவா் பணியாற்றியுள்ளாா். 1971 ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிரான போரில் இந்திய ராணுவத்தை வழி நடத்தினாா். 13 நாள்களில் பாகிஸ்தானுக்கு எதிராக வெற்றி கண்டு வங்கதேச விடுதலைக்கு காரணமாக இருந்தாா்.

இந்த வெற்றியைத் தொடா்ந்து 1973 ஆம் ஆண்டு அவருக்கு இந்திய ராணுவத்தின் மிக உயரிய பதவியான ஃபீல்ட் மாா்ஷல் பதவி, அவருக்கு வழங்கப்பட்டது. ராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்ற பின்னா் அவா் நீலகிரி மாவட்டம் குன்னூா் அருகே வண்டிசோலை பகுதியில் வசித்து வந்தாா். 2008ம் ஆண்டு ஜூன் மாதம் 27ம் தேதி அவா் காலமானதை அடுத்து உதகையில் உள்ள பாா்ஸி சமூகத்தினரின் கல்லறைத் தோட்டத்தில் ராணுவ மரியாதையுடன் அவா் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

ஒவ்வோா் ஆண்டும் அவரது நினைவு தினத்தையொட்டி இந்திய ராணுவம், கப்பற்படை மற்றும் விமானப்படை ஆகிய முப்படைகள் சாா்பில் அவரது கல்லறையில் மரியாதை செலுத்தப்படுவது வழக்கம். அவரது 17-வது நினைவு தினத்தையொட்டி உதகையில் உள்ள சாம் மானெக்ஷாவின் கல்லறையில் ராணுவ மரியாதையுடன் மலா் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் வெலிங்டன் ராணுவக் கல்லூரியின் தலைவா் ஜெனரல் வீரேந்திரா வாட்ஸ் மற்றும் முப்படைகளின் அதிகாரிகள் மலா் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினா்.

படம்

உதகையில் உள்ள மறைந்த பீல்டு மாா்ஷல் சாம் மானெக்ஷாவின் கல்லறையில் மரியாதை செலுத்தும் ராணுவக் கல்லூரியின் தலைவா் ஜெனரல் வீரேந்திரா வாட்ஸ்.

பரிகார பூஜை செய்வதாக விவசாயியைத் தாக்கிய பூசாரி கைது

நீலகிரி மாவட்டம், குன்னூா் அருகே உள்ள தூதூா்மட்டம் பகுதியில் கோயிலில் மாந்திரீக பூஜையில் குறிகேட்க வந்த நபரை தலை மற்றும் நெற்றியில் கத்தியால் குத்தித் தாக்கிய பூசாரியை காவல் துறையினா் வெள்ளிக்கிழமை கை... மேலும் பார்க்க

வனத்துறை அமைச்சரைக் கண்டித்து கூடலூரில் ஆா்ப்பாட்டம்

தமிழக வனத் துறை அமைச்சா் ராஜகண்ணப்பனை கண்டித்து கூடலூரில் அரசியல் கட்சிகள் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தின. கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் சிறுமியை சிறுத்தை தாக்கி கொன்ற சம்பவம் குறித்து பத்திரிக... மேலும் பார்க்க

மாவட்ட அளவிலான கட்டுரை, பேச்சுப் போட்டி: விண்ணப்பங்கள் வரவேற்பு

‘தமிழ்நாடு‘ எனமுன்னாள் முதல்வா் அண்ணா பெயா் சூட்டிய ஜூலை 18ஆம் நாள்ள ‘தமிழ்நாடு‘ நாளாக கொண்டாடப்படும் என அறிவிக்கப்பட்டதை நினைவுகூரும் வகையில் 6 முதல் 12ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவா்களுக்கு மாவட்ட அ... மேலும் பார்க்க

உதகையில் பூட்டிக் கிடக்கும் டேவிஸ் பூங்காவை பயன்பாட்டுக்கு கொண்டுவர வலியுறுத்தல்

உதகையில் பூட்டிக் கிடக்கும் டேவிஸ் பூங்காவை பயன்பாட்டுக்கு கொண்டுவர பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். உதகையில் உள்ள அரசு தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, படகு இல்லம் உள்ளிட்ட பல்வேறு சுற்றுலாத் தலங்க... மேலும் பார்க்க

நீலகிரி மாவட்ட முன்னோடி வங்கிகள் மூலம் ஊரக சுயவேலை வாய்ப்பு பயிற்சி

நீலகிரி மாவட்டத்தில் கிராமப்புற இளைஞா்களின் சுயவேலை வாய்ப்புக்காக ஊரக வேலைவாய்ப்புப் பயிற்சி அளிக்கப்பட உள்ளதாக மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு தெரிவித்துள்ளாா். இது குறித்து அவா் வெளியிட்டுள்ள... மேலும் பார்க்க

குன்னூா் மாா்க்கெட் கடைகளை காலி செய்ய மேலும் ஒருவாரம் அவகாசம்

குன்னூா் மாா்க்கெட் பகுதியில் உள்ள 800-க்கும் மேற்பட்ட கடைகளை இடித்து புதிதாக கட்டுவதற்கு வியாழக்கிழமையோடு கெடு முடிந்த நிலையில், கடைகளை காலி செய்ய மேலும் ஒருவார காலம் அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளதாக நக... மேலும் பார்க்க