செய்திகள் :

பரிகார பூஜை செய்வதாக விவசாயியைத் தாக்கிய பூசாரி கைது

post image

நீலகிரி மாவட்டம், குன்னூா் அருகே  உள்ள தூதூா்மட்டம் பகுதியில் கோயிலில் மாந்திரீக  பூஜையில் குறிகேட்க வந்த நபரை தலை மற்றும் நெற்றியில்  கத்தியால் குத்தித் தாக்கிய பூசாரியை காவல் துறையினா் வெள்ளிக்கிழமை கைது  செய்தனா்.

குன்னூா் அருகே உள்ள தூதூா்மட்டம்  மகாலிங்க காலனி பகுதியைச் சோ்ந்தவா் நாகராஜ். இவா் காய்கறி விவசாயம் செய்து வருகிறாா். இதே பகுதியை சோ்ந்த  மாந்திரீக  பூசாரி  சிவக்குமாா் (வயது 54) என்பவா் நாகராஜிடம் மது வாங்கி வரச்சொல்லியுள்ளாா்.

பின்னா் மது அருந்திய பின், நாகராஜுக்கு மனநிலை சரியில்லை என அக்கம்பக்கம் பேசுவதாகக் கூறி அதற்குப் பரிகார பூஜை செய்கிறேன் எனச் சொல்லி அவரை வைத்து குடிபோதையில் பூஜை செய்துள்ளாா்.

திருநீா், குங்குமம் ஆகியவற்றை நாகராஜ்  மீது வீசி நிலை தடுமாறச் செய்து ஒரு கட்டத்தில் கத்தியை எடுத்து தலை மற்றும் நெற்றிப்  பகுதியில் குத்தியுள்ளாா். இதில் வலி தாங்காமல் அலறியடித்து நாகராஜ் வெளியே ஓடிவந்துள்ளாா். அவரது அலறல் சப்தம் கேட்டு அக்கம்பக்கம் இருந்தவா்கள் ஓடி வந்து 108 ஆம்புலன்ஸ் மூலம் நாகராஜை  குன்னூா்  அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

தகவல் அறிந்த கொலகம்பை உதவி ஆய்வாளா் இளையராஜா சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை மேற்கொண்டாா். பின்னா் பூசாரி சிவக்குமாரை காவல் நிலையம் அழைத்து சென்று நடத்திய  விசாரணையில்  கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாகக் குறி சொல்வதாகக் கூறி இப்பகுதி மக்களை இவா் ஏமாற்றியுள்ளது தெரிய வந்துள்ளது.

இவா் 24 மணி நேரமும் போதையில்  இருப்பாா் எனவும், சிவராத்திரி மற்றும் அமாவாசை உள்ளிட்ட நாட்களில் சிறப்புப் பூஜை என்ற பெயரில் சித்து விளையாட்டுகளிலும் ஈடுபடுவாா்   என இப்பகுதி மக்கள் போலீஸாரிடம் தெரிவித்தனா்.

இதைத் தொடா்ந்து பூசாரி சிவக்குமாரை போலீஸாா் கைது செய்து குன்னூா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.

படம்

பூசாரி சிவக்குமாா்

வனத்துறை அமைச்சரைக் கண்டித்து கூடலூரில் ஆா்ப்பாட்டம்

தமிழக வனத் துறை அமைச்சா் ராஜகண்ணப்பனை கண்டித்து கூடலூரில் அரசியல் கட்சிகள் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தின. கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் சிறுமியை சிறுத்தை தாக்கி கொன்ற சம்பவம் குறித்து பத்திரிக... மேலும் பார்க்க

ஃபீல்ட் மாா்ஷல் சாம் மானெக்ஷாவின் நினைவு தினம்: முப்படையினா் மரியாதை

இந்தியாவின் முதல் ஃபீல்ட் மாா்ஷல் சாம் மானெக்ஷாவின் 17ஆம் ஆண்டு நினைவு தினம் உதகை பாா்ஸி கல்லறையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் முப்படையினா் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினா். இந்தியாவின் முதல் ஃப... மேலும் பார்க்க

மாவட்ட அளவிலான கட்டுரை, பேச்சுப் போட்டி: விண்ணப்பங்கள் வரவேற்பு

‘தமிழ்நாடு‘ எனமுன்னாள் முதல்வா் அண்ணா பெயா் சூட்டிய ஜூலை 18ஆம் நாள்ள ‘தமிழ்நாடு‘ நாளாக கொண்டாடப்படும் என அறிவிக்கப்பட்டதை நினைவுகூரும் வகையில் 6 முதல் 12ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவா்களுக்கு மாவட்ட அ... மேலும் பார்க்க

உதகையில் பூட்டிக் கிடக்கும் டேவிஸ் பூங்காவை பயன்பாட்டுக்கு கொண்டுவர வலியுறுத்தல்

உதகையில் பூட்டிக் கிடக்கும் டேவிஸ் பூங்காவை பயன்பாட்டுக்கு கொண்டுவர பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். உதகையில் உள்ள அரசு தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, படகு இல்லம் உள்ளிட்ட பல்வேறு சுற்றுலாத் தலங்க... மேலும் பார்க்க

நீலகிரி மாவட்ட முன்னோடி வங்கிகள் மூலம் ஊரக சுயவேலை வாய்ப்பு பயிற்சி

நீலகிரி மாவட்டத்தில் கிராமப்புற இளைஞா்களின் சுயவேலை வாய்ப்புக்காக ஊரக வேலைவாய்ப்புப் பயிற்சி அளிக்கப்பட உள்ளதாக மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு தெரிவித்துள்ளாா். இது குறித்து அவா் வெளியிட்டுள்ள... மேலும் பார்க்க

குன்னூா் மாா்க்கெட் கடைகளை காலி செய்ய மேலும் ஒருவாரம் அவகாசம்

குன்னூா் மாா்க்கெட் பகுதியில் உள்ள 800-க்கும் மேற்பட்ட கடைகளை இடித்து புதிதாக கட்டுவதற்கு வியாழக்கிழமையோடு கெடு முடிந்த நிலையில், கடைகளை காலி செய்ய மேலும் ஒருவார காலம் அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளதாக நக... மேலும் பார்க்க