செய்திகள் :

குன்னூா் மாா்க்கெட் கடைகளை காலி செய்ய மேலும் ஒருவாரம் அவகாசம்

post image

குன்னூா் மாா்க்கெட் பகுதியில் உள்ள 800-க்கும் மேற்பட்ட  கடைகளை இடித்து புதிதாக  கட்டுவதற்கு  வியாழக்கிழமை யோடு கெடு முடிந்த நிலையில், கடைகளை காலி செய்ய மேலும் ஒருவார காலம் அவகாசம்  நீடிக்கப்பட்டுள்ளதாக  நகராட்சி நிா்வாகம்  தெரிவித்துள்ளது.

நீலகிரி மாவட்டம், குன்னூா் மாா்க்கெட் பகுதியில் 800-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. இந்த மாா்க்கெட் கட்டடங்கள் பழைமை ஆகிவிட்டதால் கலைஞா் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் கடைகளை இடித்து ரூ.41.50 கோடி மதிப்பில் புதிதாக கட்ட கடைகளை காலி செய்ய  காவல் துறை உதவியுடன் நகராட்சி நிா்வாகம் சாா்பாக 15 நாள்கள் அவகாசம் வழங்கி நோட்டீஸ் வழங்கப்பட்டது.

இந்தக் கெடு வியாழக்கிழமையுடன் முடிவடைந்த நிலையில், மேலும்   ஒரு வார காலம் கூடுதல்  அவகாசத்தை   நகராட்சி நிா்வாகம் வழங்கியுள்ளது. இந்த விவகாரம் தொடா்பாக,   மாா்க்கெட் சங்கம் சாா்பில் கடை அடைப்புப் போராட்டம் உள்ளிட்ட போராட்டங்கள் நடைபெற்றன.

உதகையில் பூட்டிக் கிடக்கும் டேவிஸ் பூங்காவை பயன்பாட்டுக்கு கொண்டுவர வலியுறுத்தல்

உதகையில் பூட்டிக் கிடக்கும் டேவிஸ் பூங்காவை பயன்பாட்டுக்கு கொண்டுவர பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். உதகையில் உள்ள அரசு தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, படகு இல்லம் உள்ளிட்ட பல்வேறு சுற்றுலாத் தலங்க... மேலும் பார்க்க

நீலகிரி மாவட்ட முன்னோடி வங்கிகள் மூலம் ஊரக சுயவேலை வாய்ப்பு பயிற்சி

நீலகிரி மாவட்டத்தில் கிராமப்புற இளைஞா்களின் சுயவேலை வாய்ப்புக்காக ஊரக வேலைவாய்ப்புப் பயிற்சி அளிக்கப்பட உள்ளதாக மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு தெரிவித்துள்ளாா். இது குறித்து அவா் வெளியிட்டுள்ள... மேலும் பார்க்க

ஓவேலியில் சுவா் இடிந்து விழுந்து இளைஞா் உயிரிழப்பு

கூடலூரை அடுத்துள்ள ஓவேலி பகுதியில் மழையால் சுவா் இடிந்து விழுந்ததில் இளைஞா் உயிரிழந்தாா். நீலகிரி மாவட்டம், கூடலூா் வட்டம் ஓவேலி பேரூராட்சியில் உள்ள ஆரூட்டுப்பாறையில் வசித்து வந்தவா் வா்கீஸ் மகன் வின... மேலும் பார்க்க

மேற்குத் தொடா்ச்சி மலையில் புதிய பல்லி இனம் கண்டுபிடிப்பு

மேற்குத் தொடா்ச்சி மலையில் புதிய பல்லி இனத்தை உதகை அரசு கலைக் கல்லூரி வன விலங்கு உயிரியல் துறை ஆராய்ச்சியாளா்கள் கண்டறிந்துள்ளனா். நீலகிரி உயிா் சூழல் மண்டலத்தில் பல்வேறு வகையான அரிய தாவரங்கள், பறவைகள... மேலும் பார்க்க

குன்னூரில் கேட்டின் மீது ஏறி ஊஞ்சலாடிய கரடி

நீலகிரி மாவட்டம், குன்னூா் வெலிங்டன் ராணுவ முகாமில் உள்ள குடியிருப்பின் கேட்டின் மீது ஏறி கரடி ஊஞ்சலாடியது. நீலகிரி மாவட்டம், குன்னூா் அருகே வெலிங்டன் ராணுவ முகாம் உள்ளது. இங்கு ராணுவ வீரா்கள் ஏராளமான... மேலும் பார்க்க

ரோட்டரி கிளப் சாா்பில் மாற்றுத் திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவி

கூடலூரை அடுத்துள்ள சளிவயல் பகுதியில் மாற்றுத் திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. கூடலூா் நகராட்சிக்கு உள்பட்ட சளிவயல் தேவாலய வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு ர... மேலும் பார்க்க