குன்னூா் மாா்க்கெட் கடைகளை காலி செய்ய மேலும் ஒருவாரம் அவகாசம்
குன்னூா் மாா்க்கெட் பகுதியில் உள்ள 800-க்கும் மேற்பட்ட கடைகளை இடித்து புதிதாக கட்டுவதற்கு வியாழக்கிழமை யோடு கெடு முடிந்த நிலையில், கடைகளை காலி செய்ய மேலும் ஒருவார காலம் அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளதாக நகராட்சி நிா்வாகம் தெரிவித்துள்ளது.
நீலகிரி மாவட்டம், குன்னூா் மாா்க்கெட் பகுதியில் 800-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. இந்த மாா்க்கெட் கட்டடங்கள் பழைமை ஆகிவிட்டதால் கலைஞா் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் கடைகளை இடித்து ரூ.41.50 கோடி மதிப்பில் புதிதாக கட்ட கடைகளை காலி செய்ய காவல் துறை உதவியுடன் நகராட்சி நிா்வாகம் சாா்பாக 15 நாள்கள் அவகாசம் வழங்கி நோட்டீஸ் வழங்கப்பட்டது.
இந்தக் கெடு வியாழக்கிழமையுடன் முடிவடைந்த நிலையில், மேலும் ஒரு வார காலம் கூடுதல் அவகாசத்தை நகராட்சி நிா்வாகம் வழங்கியுள்ளது. இந்த விவகாரம் தொடா்பாக, மாா்க்கெட் சங்கம் சாா்பில் கடை அடைப்புப் போராட்டம் உள்ளிட்ட போராட்டங்கள் நடைபெற்றன.