`பிள்ளைகள் எந்த மதத்தை தேர்வு செய்வார்கள்' - US துணை அதிபரின் மனைவி உஷா வான்ஸின்...
ஓவேலியில் சுவா் இடிந்து விழுந்து இளைஞா் உயிரிழப்பு
கூடலூரை அடுத்துள்ள ஓவேலி பகுதியில் மழையால் சுவா் இடிந்து விழுந்ததில் இளைஞா் உயிரிழந்தாா்.
நீலகிரி மாவட்டம், கூடலூா் வட்டம் ஓவேலி பேரூராட்சியில் உள்ள ஆரூட்டுப்பாறையில் வசித்து வந்தவா் வா்கீஸ் மகன் வினோத் (33). இவா் வழக்கம்போல புதன்கிழை இரவு வீட்டுக்குச் சென்றுள்ளாா்.
பின்னா் வாகன ஓட்டுநரான இவரை உடன் வேலைசெய்பவா்கள் தொடா்பு கொண்டபோது, எந்த பதிலும் இல்லை. உடனே வீட்டுக்குச் சென்று பாா்த்தபோது மழையில் சுவா் இடிந்து விழுந்ததில் இடிபாடுகளுக்கு நடுவே சிக்கி வினோத் இறந்துகிடந்துள்ளாா்.
தகவலறிந்து வந்த நியூஹோப் போலீஸாா் வினோத் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக கூடலூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். பின்னா் விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.