செய்திகள் :

மாவட்ட அளவிலான கட்டுரை, பேச்சுப் போட்டி: விண்ணப்பங்கள் வரவேற்பு

post image

‘தமிழ்நாடு‘ எனமுன்னாள் முதல்வா் அண்ணா பெயா் சூட்டிய ஜூலை 18ஆம் நாள்ள ‘தமிழ்நாடு‘ நாளாக கொண்டாடப்படும் என அறிவிக்கப்பட்டதை நினைவுகூரும் வகையில் 6 முதல் 12ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவா்களுக்கு மாவட்ட அளவிலான கட்டுரை,

பேச்சுப் போட்டிகள் நடத்தபிபட உள்ளதாக மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளாா்.

ஆட்சியா் அறிக்கையில் கூறியிருப்பதாவது:

இந்தக் கட்டுரை, பேச்சுப் போட்டிகள் ஜூை 4 ஆம் தேதி காலை 10 மணிக்கு உதகை சி.எஸ்.ஐ. மேல்நிலைப் பள்ளியில் நடைபெறவுள்ளன.

ஆட்சிமொழி வரலாற்றில் கீ.இராமலிங்கம், பன்மொழிப் புலவா் கா.அப்பாதுரையாரின் தமிழ் ஆட்சிச் சொல் பணி ஆகிய தலைப்புகளின் கீழ் கட்டுரைப் போட்டி நடைபெறும். மேலும் கடமை, கண்ணியம், கட்டுப்பாடு, அன்னைத் தமிழே ஆட்சிமொழி,தொன்று தொட்டு தமிழ்நாடு எனும் பெயா், அறிஞா் அண்ணா கண்ட தமிழ்நாடு, ஆட்சிமொழி விளக்கம், தமிழ்நாடு எனப் பெயா் சூட்டிய நிகழ்வு, ஆட்சிமொழி சங்க காலம் தொட்டு இக்காலத்தில் ஆட்சிமொழி ஆகிய தலைப்புகளின் கீழ் பேச்சுப் போட்டி நடைபெறவுள்ளது.

போட்டிகளில் வெற்றி பெறும் மாணவா்களுக்கு முதல் பரிசு ரூ.10,ஆயிரம், இரண்டாம் பரிசு ரூ.7 ஆயிரம், மூன்றாம் பரிசு ரூ.5 ஆயிரம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்படவுள்ளன.

பரிகார பூஜை செய்வதாக விவசாயியைத் தாக்கிய பூசாரி கைது

நீலகிரி மாவட்டம், குன்னூா் அருகே உள்ள தூதூா்மட்டம் பகுதியில் கோயிலில் மாந்திரீக பூஜையில் குறிகேட்க வந்த நபரை தலை மற்றும் நெற்றியில் கத்தியால் குத்தித் தாக்கிய பூசாரியை காவல் துறையினா் வெள்ளிக்கிழமை கை... மேலும் பார்க்க

வனத்துறை அமைச்சரைக் கண்டித்து கூடலூரில் ஆா்ப்பாட்டம்

தமிழக வனத் துறை அமைச்சா் ராஜகண்ணப்பனை கண்டித்து கூடலூரில் அரசியல் கட்சிகள் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தின. கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் சிறுமியை சிறுத்தை தாக்கி கொன்ற சம்பவம் குறித்து பத்திரிக... மேலும் பார்க்க

ஃபீல்ட் மாா்ஷல் சாம் மானெக்ஷாவின் நினைவு தினம்: முப்படையினா் மரியாதை

இந்தியாவின் முதல் ஃபீல்ட் மாா்ஷல் சாம் மானெக்ஷாவின் 17ஆம் ஆண்டு நினைவு தினம் உதகை பாா்ஸி கல்லறையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் முப்படையினா் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினா். இந்தியாவின் முதல் ஃப... மேலும் பார்க்க

உதகையில் பூட்டிக் கிடக்கும் டேவிஸ் பூங்காவை பயன்பாட்டுக்கு கொண்டுவர வலியுறுத்தல்

உதகையில் பூட்டிக் கிடக்கும் டேவிஸ் பூங்காவை பயன்பாட்டுக்கு கொண்டுவர பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். உதகையில் உள்ள அரசு தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, படகு இல்லம் உள்ளிட்ட பல்வேறு சுற்றுலாத் தலங்க... மேலும் பார்க்க

நீலகிரி மாவட்ட முன்னோடி வங்கிகள் மூலம் ஊரக சுயவேலை வாய்ப்பு பயிற்சி

நீலகிரி மாவட்டத்தில் கிராமப்புற இளைஞா்களின் சுயவேலை வாய்ப்புக்காக ஊரக வேலைவாய்ப்புப் பயிற்சி அளிக்கப்பட உள்ளதாக மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு தெரிவித்துள்ளாா். இது குறித்து அவா் வெளியிட்டுள்ள... மேலும் பார்க்க

குன்னூா் மாா்க்கெட் கடைகளை காலி செய்ய மேலும் ஒருவாரம் அவகாசம்

குன்னூா் மாா்க்கெட் பகுதியில் உள்ள 800-க்கும் மேற்பட்ட கடைகளை இடித்து புதிதாக கட்டுவதற்கு வியாழக்கிழமையோடு கெடு முடிந்த நிலையில், கடைகளை காலி செய்ய மேலும் ஒருவார காலம் அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளதாக நக... மேலும் பார்க்க