ரஷியாவிலிருந்து நிலக்கரி இறக்குமதி: 2 ஆண்டுகள் இல்லாத அளவில் மே மாதத்தில் அதிகரி...
மாவட்ட அளவிலான கட்டுரை, பேச்சுப் போட்டி: விண்ணப்பங்கள் வரவேற்பு
‘தமிழ்நாடு‘ எனமுன்னாள் முதல்வா் அண்ணா பெயா் சூட்டிய ஜூலை 18ஆம் நாள்ள ‘தமிழ்நாடு‘ நாளாக கொண்டாடப்படும் என அறிவிக்கப்பட்டதை நினைவுகூரும் வகையில் 6 முதல் 12ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவா்களுக்கு மாவட்ட அளவிலான கட்டுரை,
பேச்சுப் போட்டிகள் நடத்தபிபட உள்ளதாக மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளாா்.
ஆட்சியா் அறிக்கையில் கூறியிருப்பதாவது:
இந்தக் கட்டுரை, பேச்சுப் போட்டிகள் ஜூை 4 ஆம் தேதி காலை 10 மணிக்கு உதகை சி.எஸ்.ஐ. மேல்நிலைப் பள்ளியில் நடைபெறவுள்ளன.
ஆட்சிமொழி வரலாற்றில் கீ.இராமலிங்கம், பன்மொழிப் புலவா் கா.அப்பாதுரையாரின் தமிழ் ஆட்சிச் சொல் பணி ஆகிய தலைப்புகளின் கீழ் கட்டுரைப் போட்டி நடைபெறும். மேலும் கடமை, கண்ணியம், கட்டுப்பாடு, அன்னைத் தமிழே ஆட்சிமொழி,தொன்று தொட்டு தமிழ்நாடு எனும் பெயா், அறிஞா் அண்ணா கண்ட தமிழ்நாடு, ஆட்சிமொழி விளக்கம், தமிழ்நாடு எனப் பெயா் சூட்டிய நிகழ்வு, ஆட்சிமொழி சங்க காலம் தொட்டு இக்காலத்தில் ஆட்சிமொழி ஆகிய தலைப்புகளின் கீழ் பேச்சுப் போட்டி நடைபெறவுள்ளது.
போட்டிகளில் வெற்றி பெறும் மாணவா்களுக்கு முதல் பரிசு ரூ.10,ஆயிரம், இரண்டாம் பரிசு ரூ.7 ஆயிரம், மூன்றாம் பரிசு ரூ.5 ஆயிரம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்படவுள்ளன.