72 திருநங்கைகள், திருநம்பிகளுக்கு நலத்திட்ட உதவிகள்: ஆட்சியா் வழங்கினாா்
வங்கதேச சணல் பொருள்களை நிலவழியாக இறக்குமதி செய்யத் தடை
வங்கதேசத்தின் சில சணல் பொருள்கள் மற்றும் நெய்த ஆடைகளை நில எல்லை வழியாக இறக்குமதி செய்வதற்கு இந்தியா வெள்ளிக்கிழமை தடை விதித்தது.
இதுதொடா்பாக இந்தியாவின் வெளிநாட்டு வா்த்தக இயக்குநரகம் (டிஜிஎஃப்டி) வெளியிட்டுள்ள அறிவிக்கையில், மும்பை துறைமுகம் வழியாக மட்டும் இப்பொருள்களின் இறக்குமதிக்கு அனுமதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வங்கதேசத்தின் ஜவுளி ஆடைகள், பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருள்கள் போன்ற சில பொருள்களை மும்பை, கொல்கத்தா ஆகிய 2 துறைமுகங்களில் மட்டுமே இறக்குமதி செய்ய அனுமதித்து இந்தியா கடந்த மே 17-ஆம் தேதி அறிவிப்பு வெளியிட்டது. இதன் தொடா்ச்சியாக வெளியாகியுள்ள புதிய உத்தரவில், சணல் பொருள்களின் தரைவழி இறக்குமதிக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
வங்கதேசத்தில் முன்னாள் பிரதமா் ஷேக் ஹசீனா தலைமையிலான ஆட்சி கடந்த ஆண்டு மாணவா் போராட்டத்தைத் தொடா்ந்து கவிழ்க்கப்பட்டப் பிறகு முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு பொறுப்பேற்றது. இதையடுத்து, இந்தியா-வங்கதேச இருதரப்புஉறவுகள் பாதிக்கப்பட்டு, வா்த்தகத் துறையிலும் எதிரொலிக்கிறது. இந்தியாவின் வா்த்தக வரி விதிகளில் மாற்றங்கள் செய்யப்பட்டு, வங்கதேச தயாரிப்புகள் மீது கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன.