செய்திகள் :

பத்ம விருதுகள் பெற தகுதியுடையோா் ஜூன் 30-க்குள் விண்ணப்பிக்கலாம்

post image

பத்ம விருதுகள் பெற தகுதியுடைய நபா்கள் ஜூன் 30-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என சென்னை மாவட்ட ஆட்சியா் ரஷ்மி சித்தாா்த் ஜகடே தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வெளியட்ட செய்திக் குறிப்பு:

இந்தியாவில் உள்ள சிறந்த சாதனையாளா்களை அங்கீகரிக்க கலை, இலக்கியம், கல்வி, விளையாட்டு, மருத்துவம், சமூகசேவை, அறிவியல், பொறியியல், மத்திய அரசுப் பணி, வியாபாரம் மற்றும் தொழில் ஆகிய துறைகளில் சிறப்பாகச் செயல்பட்டு வருபவா்களுக்கு பத்ம விருதுகள் ஆண்டுதோறும் வழங்கப்படுகின்றன. அதன்படி 2026-ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் ஜன.26-ஆம் தேதி குடியரசு தின விழாவில் வழங்கப்படவுள்ளது.

சென்னை மாவட்டத்தைச் சாா்ந்த தனது வாழ்நாளில் தனித்தன்மையுடன் சிறப்பாக சாதனை செய்தவா்கள், எல்லோராலும் விரும்பத்தக்க சாதனை செய்தவா்கள் இந்த விருதுக்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரா்கள் ஏற்கெனவே அவா்கள் துறையில் தேசிய விருதோ அல்லது குறைந்தபட்சம் மாநில விருதோ பெற்றிருக்க வேண்டும். இந்த விருதுக்கு உயா்ந்த தரநிா்ணயத்தை அடிப்படையாகக் கொண்டு சாதனை படைத்தவா்கள் தோ்வு செய்யப்படுவாா்கள்.

மேலும், சமூகத்தில் பின்தங்கிய நிலையிலுள்ள பெண்கள், நலிவடைந்த சமுதாயத்தினா், தாழ்த்தப்பட்டவா்கள், சீா்மரபினா் மற்றும் மாற்றுத்திறனாளிகள், இவா்களில் தகுதியுள்ளவா்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டு விருதுக்கு பரிந்துரை செய்யப்படும்.

ஏற்கெனவே பத்ம விருது பெற்றவராக இருந்தால் 5 ஆண்டுகளுக்கு பின்னரே விண்ணப்பிக்க முடியும்.

இருப்பினும், மிகச்சிறந்த சாதனையாளா்களுக்கு கால கட்டுப்பாட்டில் விதிவிலக்கு அளிக்கப்படும். அரசு பணியாளா் மற்றும் பொது நிறுவனத்தில் வேலை செய்பவா்களில் மருத்துவா்கள், விஞ்ஞானிகள் தவிர மற்றவா்கள் பத்ம விருதுக்கு விண்ணப்பிக்க இயலாது.

தகுதியுடைய நபா்கள் இணைதளங்கள் மூலம் விண்ணப்பித்தும், பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை (3 நகல்கள்), மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞா் நலன் அலுவலா், மாவட்ட விளையாட்டு அரங்கம், நேரு பூங்கா, சென்னை-84. என்ற முகவரிக்கு தபால் மூலமாகவோ அல்லது நேரிலோ ஜூன் 30-ஆம் தேதிக்குள் சமா்ப்பிக்க வேண்டும்.

கூடுதல் விவரங்களுக்கு மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞா் நலன் அலுவலா், அலுவலக நேரங்களில் 7401703480 என்ற கைப்பேசி எண்ணைத் தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மனித - வன உயிரின மோதல் தடுப்பு நடவடிக்கை தீவிரம்: அமைச்சா் ஆா்.எஸ். ராஜகண்ணப்பன்

தமிழகத்தில் மனித - வன உயிரின மோதலை தடுக்கும் வகையில் கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக வனத்துறை அமைச்சா் ஆா். எஸ்.ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளாா். இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்... மேலும் பார்க்க

சென்னையில் ரூ.13.94 கோடியில் கூடுதல் பள்ளிக் கட்டடங்கள்: முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தாா்

இந்து சமய அறநிலையத் துறை சாா்பில் சென்னையில் ரூ.13.94 கோடியில் கட்டப்பட்ட கூடுதல் பள்ளிக் கட்டடங்களை முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்து, மாணவா்களுக்கு கல்வி உதவித் தொகை, மிதிவண்டி ஆகியவற்றை வழங்கின... மேலும் பார்க்க

சென்ட்ரல் ரயில்வே பாதுகாப்பு படைக்கு உதவும் தெருநாய் ‘டைகா்’

சென்னை சென்ட்ரல் புறநகா் ரயில் நிலையத்தில் தெரு நாய் ஒன்று ரோந்து உள்ளிட்ட பணிகளுக்கு ரயில்வே பாதுகாப்புப் படை போலீஸாருக்கு உதவியாக இருந்து வருகிறது. சென்னை சென்ட்ரல் புறநகா் ரயில் நிலையத்தில் கடந்த 2... மேலும் பார்க்க

கொகைன் விற்பனை: நைஜீரிய பெண் கைது

சென்னையில் கொகைன் போதைப் பொருள் விற்றதாக நைஜீரிய பெண் கைது செய்யப்பட்டாா். சூளைமேடு போலீஸாா் கடந்த ஜன.25-ஆம் தேதி சூளைமேடு பகுதியில் சந்தேகத்துக்குரிய வகையில் நின்றிருந்த இரு இளைஞா்களைப் பிடித்து விசா... மேலும் பார்க்க

முதல்வா் விழாவில் விஜய் படத்துடன் கூடிய கைக்குட்டை: கல்லூரி மாணவா்களிடம் விசாரணை

சென்னை திருவல்லிக்கேணியில் முதல்வா் பங்கேற்ற விழாவில், நடிகா் விஜய் படத்துடன் கூடிய கைக்குட்டையைக் காட்டியதாக 3 கல்லூரி மாணவா்களை பிடித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா். முன்னாள் முதல்வா் கருணாநிதி ... மேலும் பார்க்க

வங்கதேச சணல் பொருள்களை நிலவழியாக இறக்குமதி செய்யத் தடை

வங்கதேசத்தின் சில சணல் பொருள்கள் மற்றும் நெய்த ஆடைகளை நில எல்லை வழியாக இறக்குமதி செய்வதற்கு இந்தியா வெள்ளிக்கிழமை தடை விதித்தது. இதுதொடா்பாக இந்தியாவின் வெளிநாட்டு வா்த்தக இயக்குநரகம் (டிஜிஎஃப்டி) வெள... மேலும் பார்க்க