செய்திகள் :

ஹைதராபாத்தில் தெலுங்கு பெண் பத்திரிக்கையாளர் சடலமாக மீட்பு

post image

தெலங்கானாவில் பிரபல தெலுங்கு பெண் பத்திரிகையாளர் ஸ்வேசா அவரது வீட்டில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முதற்கட்ட விசாரணையின்படி, 35 வயதான அவர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கின்றனர். ஸ்வேசா தனது தாய் மற்றும் மகளுடன் சிக்கட்பள்ளியில் வசித்து வந்தார். ஆரம்பகட்ட தகவல்களின்படி, அவரது மகள் நேற்று மாலையில் பள்ளியிலிருந்து திரும்பியபோது, படுக்கையறை பூட்டப்பட்டிருப்பதைக் கண்டார்.

பலமுறை தட்டியும் எந்த பதிலும் கிடைக்காததால், உடனே அவர் அண்டை வீட்டாருக்கு தகவல் கொடுத்தார். அக்கம்பக்கத்தினர் கதவை உடைத்து திறந்து பார்த்தபோது, அறைக்குள் ஸ்வேசா மயக்கமடைந்திருப்பதைக் கண்டனர். ஆனால் மருத்துவ உதவியாளர்கள் அவர் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டதாக அறிவித்தனர்.

பிறகு உடல் மீட்கப்பட்டு உடற்கூராய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. போலீஸார் வழக்குப் பதிவு செய்து, இறப்பிற்கான சரியான காரணத்தைக் கண்டறிய விசாரணையைத் தொடங்கியுள்ளனர். இச்சம்பவம் ஹைதராபாத் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Summary

A woman journalist named Swetcha, working as a news presenter in Hyderabad, was found dead at her residence in Chikkadpally on June 27 in a suspected suicide case.

மெஸ்ஸி, ரொனால்டோ சாதனையை முறியடித்த எர்லிங் ஹாலண்ட்!

' ரா' உளவுப்பிரிவின் தலைவராக பராக் ஜெயின் நியமனம்

இந்தியாவின் 'ரா ' உளவுப்பிரிவின் தலைவராக பராக் ஜெயின் நியமிக்கப்பட்டு உள்ளார். தற்போது தலைவராக உள்ள ரவி சின்ஹாவின் பதவிக்காலம் வரும் 30ஆம் தேதியுடன் நிறைவு பெறவுளள்து. இதனையடுத்து அந்த பதவிக்கு புதிய ... மேலும் பார்க்க

இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லாவுடன் பிரதமர் மோடி உரையாடல்

சர்வதேச விண்வெளி நிலையத்தில் உள்ள இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லாவுடன் பிரதமர் மோடி கலந்துரையாடியுள்ளார். இதுகுறித்து பிரதமர் அலுவலகம் வெளியிட்ட எக்ஸ் தளப் பதிவில், "சர்வதேச விண்வெளி நிலையத்தில்... மேலும் பார்க்க

பாலிவுட் நடிகை மாரடைப்பால் உயிரிழப்பு! மரணத்தில் சந்தேகம்? -போலீஸ் விசாரணை

பிரபல நடிகை ஷேஃபாலி ஜரீவாலா(42) வெள்ளிக்கிழமை இரவு மரணமடைந்தார். மும்பையிலுள்ள தமது வீட்டில் இரவு மயங்கிக்கிடந்த ஷேஃபாலி ஜரீவாலாவை அவரது குடும்பத்தார் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்க... மேலும் பார்க்க

சட்டவிரோத குடியேற்றம்: தில்லியில் 18 வங்கதேசத்தினர் கைது!

தில்லியில் சட்டவிரோதமாகத் தங்கியிருந்த பதினெட்டு வங்கதேச நட்டவர்கள் 18 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களின் ஐந்து பேர் திருநங்கைகள்போல் மாறுவேடமிட்டு வசித்து வந்ததாகப் போலீஸார் தெரிவ... மேலும் பார்க்க

மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை: கொல்கத்தா கல்லூரி பாதுகாவலர் கைது

மேற்கு வங்கத் தலைநகா் கொல்கத்தாவில் அரசு சட்டக் கல்லூரிக்குள் முதலாம் ஆண்டு மாணவி ஒருவா் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவத்தில் கல்லூரி பாதுகாவலர் கைது செய்யப்பட்டுள்ளார்.இந்த சம்பவத்... மேலும் பார்க்க

ஜெய்ஷ் பயங்கரவாதிகள் எங்கே? ட்ரோன்.. மோப்ப நாய்கள்.. 3வது நாளாகத் தொடரும் தேடுதல் வேட்டை!

ஜம்மு - காஷ்மீரின் வனப்பகுதியில் பதுங்கியுள்ள 3 ஜெய்ஷ்-இ-முஹமது பயங்கரவாதிகளைத் தேடும் பணியில் பாதுகாப்புப் படையினர் 3-வது நாளாக இன்று (ஜூன் 28) ஈடுபட்டுள்ளனர். உதம்பூர் மாவட்டத்தின் பசந்த்கார் வனப்பக... மேலும் பார்க்க