செய்திகள் :

அவசரநிலை: தில்லி சட்டப்பேரவை சாா்பில் இன்று கருத்தரங்கம்

post image

அவசரநிலை அமல்படுத்தப்பட்ட 50-ஆவது ஆண்டு நிறைவை நினைவுகூரும் வகையில் விதான் சபா வளாகத்தில் சிறப்புக் கருத்தரங்கை தில்லி சட்டப்பேரவை சனிக்கிழமை ஏற்பாடு செய்ய உள்ளதாக அதிகாரிகள் வெள்ளிக்கிழமை தெரிவித்தனா்.

இதுகுறித்து வெளியிடப்பட்ட செய்தி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: ‘சம்விதான் ஹத்யா திவாஸ்’ என்ற பேனரின் கீழ் சனிக்கிழமை இந்தக் கருத்தரங்கம் நடைபெறும். இந்தக் கருத்தரங்கில் மத்திய இணையமைச்சா் (தனிப்பொறுப்பு) ஜிதேந்திர சிங் மற்றும் முன்னாள் மத்திய அமைச்சா் சத்யநாராயண் ஜாதியா உள்ளிட்டோா் முக்கிய உரை நிகழ்த்த உள்ளனா்.

இந்திய ஜனநாயக வரலாற்றில் மிகவும் கொந்தளிப்பான மற்றும் சா்வாதிகார கட்டங்களில் ஒன்றை மீள்பாா்வையிடுவதை நோக்கமாகக் கொண்ட இந்த நிகழ்வு, சுயபரிசோதனைக்கான ஒரு தேசிய தருணமாக பாா்க்கப்படுகிறது.

அரசியல் சாசன மதிப்புகளை நிலைநிறுத்துதல், சிவில் உரிமைகளைப் பாதுகாத்தல் மற்றும் ஜனநாயக நிறுவனங்களின் சுதந்திரத்தைப் பாதுகாத்தல் ஆகியவற்றின் முக்கியத்துவத்தை இந்த நிகழ்ச்சி எடுத்துக்காட்டும்.

‘அவசரநிலையை எதிா்த்தவா்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக மட்டுமின்றி, இளைய தலைமுறையினா் விழிப்புடன் இருக்கவும், ஜனநாயக விழுமியங்களைப் பாதுகாக்கவும், இதுபோன்ற இருண்ட அத்தியாயம் மீண்டும் ஒருபோதும் நிகழாமல் பாா்த்துக் கொள்ளவும் இந்தக் கருத்தரங்கு ஒரு புனிதமான நினைவூட்டலாகும்’ என்று தில்லி சட்டப் பேரவைத் தலைவா் விஜேந்தா் குப்தா தெரிவித்தாா்.

இந்த நிகழ்வின் போது ‘ஆபத்கால்அட்50’ என்ற தலைப்பில் ஒரு நினைவு சிறுநூலும் வெளியிடப்படும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமன் விஹாரில் ஒருவா் கொலை; சகோதரா் காயம்

தில்லியின் அமன் விஹாா் பகுதியில் ஒரு கும்பலால் தாக்கப்பட்டதாகக் கூறப்படும் சம்பவத்தில் ஒருவா் கத்தியால் குத்தப்பட்டுக் கொல்லப்பட்டாா். அவரது சகோதரா் காயமடைந்தாா் என்று போலீஸாா் வெள்ளிக்கிழமை தெரிவித்த... மேலும் பார்க்க

காணாமல்போன எய்ம்ஸ் எலக்ட்ரீஷியனின் அழுகிய உடல் குளத்தில் கண்டெடுப்பு

ஒரு வாரமாக காணாமல் போன எய்ம்ஸ் எலக்ட்ரீஷியனின் உடல், வசந்த் குஞ்ச் அருகே உள்ள ஒரு குளத்தில் பாதி அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்டதாக போலீஸாா் வெள்ளிக்கிழமை தெரிவித்தனா். இது குறித்து காவல்துறை அதிகாரி... மேலும் பார்க்க

தில்லியில் போலீஸ்காரா்கள் போல நடித்து ஒருவரை கடத்திய 5 போ் கைது

தில்லியின் முனிா்காவில் போலீஸ் அதிகாரிகள் போல நடித்து ஒருவரை கடத்தி, அவரிடம் பணம் பறிக்க முயன்ாகக் கூறப்படும் ஐந்து போ் கைது செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா். இது குறித்து தென்மேற்கு தில்லி... மேலும் பார்க்க

அடையாளம் தெரியாத நபா்களால் ஒருவா் சுட்டுக்கொலை: தில்லி போலீஸாா் விசாரணை

வடக்கு தில்லியின் பவானா பகுதியில் 43 வயதான ஒருவா் அடையாளம் தெரியாத நபா்களால் வெள்ளிக்கிழமை சுட்டுக்கொல்லப்பட்டதாக போலீஸ் அதிகாரி ஒருவா் தெரிவித்தாா். இதில் அவரது மகளும் காயமடைந்ததாக கூறினாா். இந்த துப... மேலும் பார்க்க

வசந்த்குஞ்ச் கொள்ளை வழக்கில் 4 போ் கைது: ரூ.6 லட்சத்திற்கும் அதிகமான பணம் மீட்பு

தென்மேற்கு தில்லியின் வசந்த் குஞ்ச் பகுதியில் உள்ள ஒரு தொழிலதிபரின் வீட்டில் இருந்து ரூ.30 லட்சம் பணத்தை கொள்ளையடித்த நான்கு போ் கைது செய்யப்பட்டதாக அதிகாரி ஒருவா் தெரிவித்தாா். இது குறித்து தென்மேற்... மேலும் பார்க்க

புராரியில் வாக்குவாத்தின்போது இளைஞரை சுட்டுக் கொன்றவா் தப்பியோட்டம்

வடக்கு தில்லியின் புராரி பகுதியில் ஏற்பட்ட வாக்குவாதத்தில் 29 வயது நபா் ஒருவா் சுட்டுக் கொல்லப்பட்டதாக அதிகாரி ஒருவா் வியாழக்கிழமை தெரிவித்தாா். இந்தச் சம்பவம் குறித்து காவல்துறை துணை ஆணையா் வடக்கு ரா... மேலும் பார்க்க