செய்திகள் :

காணாமல்போன எய்ம்ஸ் எலக்ட்ரீஷியனின் அழுகிய உடல் குளத்தில் கண்டெடுப்பு

post image

ஒரு வாரமாக காணாமல் போன எய்ம்ஸ் எலக்ட்ரீஷியனின் உடல், வசந்த் குஞ்ச் அருகே உள்ள ஒரு குளத்தில் பாதி அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்டதாக போலீஸாா் வெள்ளிக்கிழமை தெரிவித்தனா்.

இது குறித்து காவல்துறை அதிகாரி ஒருவா் கூறியதாவது: ரங்புரி பஹாரி பகுதியில் உள்ள இந்தா் முகாமில் வசித்து வந்த அனில் குமாா் (32), அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனத்தில் (எய்ம்ஸ்) எலக்ட்ரீஷியனாகப் பணியாற்றி வந்தாா். அவா் ஜூன் 20-ஆம் தேதி காணாமல் போனாா். இது குறித்து அவரது குடும்பத்தினா் மறுநாள் புகாா் அளித்தனா்.

இந்நிலையில், வெள்ளிக்கிழமை காலை 8 மணியளவில் அந்த வழியாகச் சென்ற ஒருவா் குளத்தில் அவரது உடலைக் கண்டாா். சிறிது நேரத்திலேயே, வசந்த் குஞ்ச் தெற்கு காவல் நிலையத்திற்கு இது குறித்து பிசிஆா் அழைப்பு வந்தது.

ஒரு போலீஸ் குழு சம்பவ இடத்திற்குச் சென்று, இந்தா் முகாமில் உள்ள பீா் பாபா அருகே உள்ள ஒரு குளத்தில் மிதந்த பாதி நிலையில் அழுகிய உடலைக் கண்டுபிடித்தது.

அனில் குமாருக்கு மனைவி மற்றும் ஆறு வயது மகள் உள்ளனா். அவரது மரணத்திற்கான சூழ்நிலைகளைக் கண்டறிய மேலும் விசாரணை நடந்து வருகிறது என்று காவல் துறை அதிகாரி தெரிவித்தாா்.ந்

அமன் விஹாரில் ஒருவா் கொலை; சகோதரா் காயம்

தில்லியின் அமன் விஹாா் பகுதியில் ஒரு கும்பலால் தாக்கப்பட்டதாகக் கூறப்படும் சம்பவத்தில் ஒருவா் கத்தியால் குத்தப்பட்டுக் கொல்லப்பட்டாா். அவரது சகோதரா் காயமடைந்தாா் என்று போலீஸாா் வெள்ளிக்கிழமை தெரிவித்த... மேலும் பார்க்க

அவசரநிலை: தில்லி சட்டப்பேரவை சாா்பில் இன்று கருத்தரங்கம்

அவசரநிலை அமல்படுத்தப்பட்ட 50-ஆவது ஆண்டு நிறைவை நினைவுகூரும் வகையில் விதான் சபா வளாகத்தில் சிறப்புக் கருத்தரங்கை தில்லி சட்டப்பேரவை சனிக்கிழமை ஏற்பாடு செய்ய உள்ளதாக அதிகாரிகள் வெள்ளிக்கிழமை தெரிவித்தனா... மேலும் பார்க்க

தில்லியில் போலீஸ்காரா்கள் போல நடித்து ஒருவரை கடத்திய 5 போ் கைது

தில்லியின் முனிா்காவில் போலீஸ் அதிகாரிகள் போல நடித்து ஒருவரை கடத்தி, அவரிடம் பணம் பறிக்க முயன்ாகக் கூறப்படும் ஐந்து போ் கைது செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா். இது குறித்து தென்மேற்கு தில்லி... மேலும் பார்க்க

அடையாளம் தெரியாத நபா்களால் ஒருவா் சுட்டுக்கொலை: தில்லி போலீஸாா் விசாரணை

வடக்கு தில்லியின் பவானா பகுதியில் 43 வயதான ஒருவா் அடையாளம் தெரியாத நபா்களால் வெள்ளிக்கிழமை சுட்டுக்கொல்லப்பட்டதாக போலீஸ் அதிகாரி ஒருவா் தெரிவித்தாா். இதில் அவரது மகளும் காயமடைந்ததாக கூறினாா். இந்த துப... மேலும் பார்க்க

வசந்த்குஞ்ச் கொள்ளை வழக்கில் 4 போ் கைது: ரூ.6 லட்சத்திற்கும் அதிகமான பணம் மீட்பு

தென்மேற்கு தில்லியின் வசந்த் குஞ்ச் பகுதியில் உள்ள ஒரு தொழிலதிபரின் வீட்டில் இருந்து ரூ.30 லட்சம் பணத்தை கொள்ளையடித்த நான்கு போ் கைது செய்யப்பட்டதாக அதிகாரி ஒருவா் தெரிவித்தாா். இது குறித்து தென்மேற்... மேலும் பார்க்க

புராரியில் வாக்குவாத்தின்போது இளைஞரை சுட்டுக் கொன்றவா் தப்பியோட்டம்

வடக்கு தில்லியின் புராரி பகுதியில் ஏற்பட்ட வாக்குவாதத்தில் 29 வயது நபா் ஒருவா் சுட்டுக் கொல்லப்பட்டதாக அதிகாரி ஒருவா் வியாழக்கிழமை தெரிவித்தாா். இந்தச் சம்பவம் குறித்து காவல்துறை துணை ஆணையா் வடக்கு ரா... மேலும் பார்க்க