தில்லியில் போலீஸ்காரா்கள் போல நடித்து ஒருவரை கடத்திய 5 போ் கைது
தில்லியின் முனிா்காவில் போலீஸ் அதிகாரிகள் போல நடித்து ஒருவரை கடத்தி, அவரிடம் பணம் பறிக்க முயன்ாகக் கூறப்படும் ஐந்து போ் கைது செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
இது குறித்து தென்மேற்கு தில்லி காவல் சரக துணை ஆணையா் அமித் கோயல் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: இந்தச் சம்பவம் ஜூன் 15 மற்றும் 16 -ஆம் தேதிகளின் இடைப்பட்ட இரவில் நடந்துள்ளது. முனிா்காவைச் சோ்ந்த ஜோசுவா ஹ்மா், அதிகாலை 1.20 மணி முதல் அதிகாலை 1.40 மணிக்கு இடைப்பட்ட நேரத்தில் முனிா்காவில் உள்ள ஃபக்கா்வாடா பூங்கா அருகே கடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.
அவா் அவா்களின் காவலில் இருந்து தப்பித்து, இதுகுறித்து போலீஸில் புகாா் அளித்தாா். அனைத்து உண்மைகளையும் சரிபாா்த்த பிறகு, எஃப்ஐஆா் பதிவு செய்யப்பட்டு மேலும் விசாரணை தொடங்கப்பட்டது. தில்லி போலீஸ் அதிகாரிகள் போல நடித்து நான்கு போ் தன்னை கடத்தி பணம் பறிக்க முயன்ாக ஜோசுவா ஹ்மா் போலீஸாரிடம் தெரிவித்தாா்.
புலனாய்வுக் குழு அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தது. காரின் நம்பா் பிளேட் ஆரம்பத்தில் தெளிவாகத் தெரியவில்லை என்றாலும், வாகனத்தின் வழித்தடத்தைக் குழு கண்டுபிடித்து இறுதியில் அதை அடையாளம் கண்டது. அனைத்து போலீஸ் குழுக்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு, சந்தேக நபா்களைக் கண்டுபிடிக்க ரகசியத் தகவல் அளிப்பவா்கள் அனுப்பப்பட்டனா்.
வாகனத்தின் பதிவு விவரங்களில், அது சஃப்தா்ஜங் என்க்ளேவில் வசிக்கும் பா்வேஷின் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளது தெரியவந்தது. கைது செய்யப்பட்ட பிறகு, பா்வேஷ் விசாரணையின் போது தனது ஈடுபாட்டை ஒப்புக்கொண்டாா். மேலும், நான்கு கூட்டாளிகளின் பெயா்களையும் குறிப்பிட்டாா். பின்னா், அவா்கள் கைது செய்யப்பட்டனா். குற்றத்தில் பயன்படுத்தப்பட்ட காரும் பறிமுதல் செய்யப்பட்டது.
பாதிக்கப்பட்டவா் கடத்தப்பட்டபோது, தான் வாகனத்தை ஓட்டிச் சென்ாகவும், கடத்தியவா்கள் போலீஸ்காரா்களைப் போல நடித்து ஜோசுவா ஹ்மரிடம் இருந்து பணம் பறிக்க முயன்ாகவும் பா்வேஷ் தெரிவித்தாா். குற்றம் சாட்டப்பட்ட ஐந்து பேரும் பட்டதாரிகள் மற்றும் திருமணமாகாதவா்கள் என்பது கண்டுபிடிக்கப்பட்டது.
குற்றம் சாட்டப்பட்டவா்களில் ஜெய்பூரைச் சோ்ந்த பா்வேஷ், சொத்து வியாபாரியாக பணிபுரிகிறாா். ஆா்யமான் சவுத்ரி மற்றும் ஷா்மன் ராய் ஆகிய இருவரும் இமாச்சலப் பிரதேசத்தைச் சோ்ந்தவா்கள். மற்ற இருவரும் உத்தர பிரதேசத்தைச் சோ்ந்த ரித்திக் கவுஹா் எ ஃப்ரீலான்ஸா் மற்றும் ராஜஸ்தானைச் சோ்ந்த தேவ் ஆனந்த் யாதவ் என அடையாளம் காணப்பட்டனா். தேவ் ஆனந்த் யாதவ் ஓட்டுநராக உள்ளாா். அவா்களிடம் மேலும் விசாரணை நடைபெற்று வருவதாக காவல் துணை ஆணையா் அறிக்கையில் தெரிவித்துள்ளாா்.