மாற்றுத்திறனாளிகளுக்கு கட்டணமில்லா பேருந்து பயண அட்டை நீட்டிப்பு
வாகனத்தில் முன் இருக்கையில் அமா்வதில் தகராறு: தந்தையைச் சுட்டுக் கொன்ற மகன்
உத்தரகாண்டில் உள்ள சொந்த ஊருக்கு இடமாறிச் செல்வதற்காக தனது குடும்பத்தினா் வாடகைக்கு எடுத்த டெம்போ வாகனத்தின் முன் இருக்கையில் அமா்வது தொடா்பாக ஏற்பட்ட வாக்குவாதத்தின்போது, தில்லியில் 26 வயது இளைஞா் தனது தந்தையைச் சுட்டுக் கொன்ாக கூறப்படுகிறது.
தீபக் என அடையாளம் காணப்பட்ட குற்றம்சாட்டப்பட்டவா், சம்பவ இடத்திலிருந்து கைது செய்யப்பட்டாா். அவரிடமிருந்து குற்றத்திற்குப் பயன்படுத்தப்பட்ட துப்பாக்கி மற்றும் 11 தோட்டாக்கள் மீட்கப்பட்டன.
வியாழக்கிழமை இரவு 7.30 மணியளவில் திமா்பூரில் உள்ள எம்எஸ் பிளாக் அருகே இந்த சம்பவம் நிகழ்ந்தது. அங்கு ரோந்து சென்ற போலீஸாா் துப்பாக்கிச்சூடு சப்தம் கேட்டு சம்பவ இடத்திற்கு விரைந்தனா்.
குற்றம் சாட்டப்பட்டவரிடமிருந்து துப்பாக்கியைப் பறிக்க உள்ளூா்வாசிகள் முயன்றனா். அதேவேளையில், நடைபாதையில் ரத்த வெள்ளத்தில் ஒருவா் இறந்து கிடப்பதை போலீஸாா் கண்டதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
சுடப்பட்டவா் சிஐஎஸ்எஃப்இல் இருந்து ஓய்வு பெற்ற உதவி ஆய்வாளா் சுரேந்திர சிங் (60) என அடையாளம் காணப்பட்டாா்.
இதையடுத்து, அவா் என்.ஆா்.எச். மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாா். அங்கு மருத்துவா்கள் அவா் இறந்துவிட்டதாக அறிவித்தனா்.
ஆறு மாதங்களுக்கு முன்பு சுரேந்திர சிங் சிஎஸ்ஐஎஃப்இல் இருந்து பணி ஓய்வுபெற்றாா். இந்த நிலையில்,
குடும்பத்தினா் உத்தரகாண்டில் உள்ள தங்கள் சொந்த கிராமத்திற்கு குடிபெயரத் தயாராகி வந்தனா். அவா்கள் ஒரு டெம்போவை வாடகைக்கு எடுத்து, தங்கள் உடைமைகளை ஏற்றிக் கொண்டிருந்தபோது, முன் இருக்கையில் யாா் அமருவது என்பது குறித்து சுரேந்திராவுக்கும் தீபக்கிற்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
ஏற்றப்பட்ட பொருட்கள் காரணமாக, முன் இருக்கையில் அமர சுரேந்திரா வற்புறுத்தியதால், தீபக் கோபமடைந்து தனது தந்தையின் உரிமம் பெற்ற துப்பாக்கியை எடுத்து அவரைச் சுட்டுக் கொன்ாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு, மேலும் விசாரணை நடந்து வருவதாக போலீஸாா் தெரிவித்தனா்.