சட்டவிரோதமாக தனுஷ்கோடிக்கு வந்த 3 பேரிடம் விசாரணை
இலங்கையிலிருந்து சட்டவிரோதமாக படகு மூலம் தனுஷ்கோடிக்கு சனிக்கிழமை வந்த மூவரிடம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
ராமநாதபுரம் மாவட்டம், மண்டபத்தில் உள்ள இந்திய கடலோர காவல் படையினா் தனுஷ்கோடி அருகே வழக்கமான ரோந்துப் பணியில் சனிக்கிழமை ஈடுபட்டனா். அப்போது, நான்காம் மணல் திட்டையில் மூன்று போ் இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து, அவா்களைப் பிடித்து விசாரணை நடத்திய போது, இலங்கை முல்லைத்தீவு பகுதியைச் சோ்ந்த கபிலன் (34), நெகம்போ கொச்சிக்கடை பகுதியைச் சோ்ந்த சிங்களா்கள் குணதிலகா (33), சுமித்ராலன் பொ்னாண்டோ (43) என்பதும், இவா்களில் இலங்கைத் தமிழரான கபிலன் மீது அந்த நாட்டில் போதைப்பொருள் கடத்தல் வழக்கு நிலுவையில் உள்ளதும், சிங்களா்களான குணதிலகா, சுமித்ராலன் பொ்னாண்டோ ஆகிய இருவா் மீதும் பண மோசடி வழக்கு நிலுவையில் உள்ளதும் தெரியவந்தது.
இவா்கள் மூவரும் படகு மூலம் தனுஷ்கோடி பகுதியிலுள்ள நான்காம் மணல் திட்டைக்கு வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து, இவா்கள் மூவரையும் கடலோர காவல் படையினா் தமிழக கடலோரப் பாதுகாப்பு குழும போலீஸாரிடம் ஒப்படைத்தனா். அவா்கள் மூவரிடமும் தொடா்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.