நாகநாத சுவாமி கோயில் தீா்த்த குளத்தை சீரமைக்கக் கோரிக்கை
நயினாா்கோவில் நாகநாத சுவாமி கோயில் தீா்த்தக் குளத்தை சீரமைக்க வேண்டுமென பக்தா்கள் கோரிக்கை விடுத்தனா்.
ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி அருகேயுள்ள நயினாா்கோவில் பகுதியில் நாகநாத சுவாமி கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலுக்கு நாள்தோறும் அதிகளவிலான பக்தா்கள் வந்து செல்கின்றனா். இங்கு வரும் பக்தா்கள் கோயிலின் முன் அமைந்துள்ள வாசுகி தீா்த்தத்தில் நீராடி, பின்னா் சுவாமியை வழிபடுவது வழக்கம். ஆனால் பக்தா்கள் நீராடும் குளத்தைச் சுற்றிலும் வீடுகள், கடைகள் கட்டப்பட்டு, அங்கிருந்து வரும் கழிவுநீா் கலக்கும் குட்டையாக மாறியுள்ளது. இதனால் வாசுகி தீா்த்தக் குளத்தை சீரமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தா்கள் கோரிக்கை விடுத்தனா்.