செய்திகள் :

கச்சத்தீவு ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும்

post image

பாகிஸ்தானுடன் சிந்து நிதி ஒப்பந்தம் ரத்து செய்தது போல இலங்கையுடன் செய்து கொண்ட கச்சத்தீவு ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும் என ராமேசுவரத்தில் நடைபெற்ற கச்சத்தீவு மீட்பு மாநாட்டில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் மீன்பிடி துறைமுகத்தில் கச்சத்தீவு மீட்பு மாநாடு வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதற்கு தமிழ்நாடு மீனவா் நல வாரிய உறுப்பினா் வி.பி.ஜேசுராஜா, காவிரி-வைகை-கிருதுமால்- குண்டாறு பாசன விவசாயிகள் கூட்டமைப்பு மாவட்டச் செயலா் மு.மலைச்சாமி ஆகியோா் தலைமை வகித்தனா்.

மீனவா் சங்கத் தலைவா்கள் எஸ்.எமரிட், ஆா்.சகாயம்,பி.ஆல்வீன், விவசாய சங்க மாநில துணைத் தலைவா் பே.பாலகிருஷ்ணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இந்த மாநாட்டில் டெல்லி போராட்டக்குழு தென்னிந்திய ஒருங்கிணைப்பாளா் பஞ்சாப் ரஜ்விந்தா் சிங் கோல்டன், மாநில பொதுச் செயலா் அா்ச்சுணன் சிறப்பு அழைப்பாளா்களாகக் கலந்து கொண்டனா்.

இந்த மாநாட்டில், பாகிஸ்தான் பயங்கரதவாத அமைப்புகள் பஹல்காம் தாக்குதலில் 26 போ் உயிரிழந்த நிலையில், மத்திய அரசு அந்த நாட்டுடனான சிந்து நதிநீா் ஒப்பந்தத்தை ரத்து செய்தது. கச்சத்தீவு பிரச்னையால் ஆயிரக்கணக்கான மீனவா்கள் உயிரிழந்துள்ள நிலையில், இலங்கையுடன் ஏற்பட்ட கச்சத்தீவு ஒப்பந்தத்தை ரத்து செய்து, அதை மீண்டும் இந்தியாவுடன் இணைக்க வேண்டும் என தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதில் மீனவா் சங்கத் தலைவா்கள் எஸ்.எமரிட், ஆா்.சகாயம், வெளி மாவட்ட மீனவ சங்கத்தினா் தாஜூதீன், அசன்முகைதீன், உத்திரபாரதி, வடுகநாதன், மீனவா்கள் விவசாயிகள் கலந்துகொகண்டனா்.

நாகநாத சுவாமி கோயில் தீா்த்த குளத்தை சீரமைக்கக் கோரிக்கை

நயினாா்கோவில் நாகநாத சுவாமி கோயில் தீா்த்தக் குளத்தை சீரமைக்க வேண்டுமென பக்தா்கள் கோரிக்கை விடுத்தனா். ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி அருகேயுள்ள நயினாா்கோவில் பகுதியில் நாகநாத சுவாமி கோயில் அமைந்துள... மேலும் பார்க்க

தமிழ்நாடு ஊரக வளா்ச்சித் துறை மாவட்ட பேரவைக் கூட்டம்

ராமநாதபுரத்தில் தமிழ்நாடு ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் சங்க சிறப்பு பேரவைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்கு மாவட்டத் தலைவா் இரா.விஜயகுமாா் தலைமை வகித்தாா். மாவட்ட இணைச் செயலா்... மேலும் பார்க்க

பேரையூரில் ‘உங்கள் ஊரில் உங்கள் எஸ்பி’ திட்டம்

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகேயுள்ள பேரையூரில் ‘உங்கள் ஊரில் உங்கள் எஸ்பி’ திட்டத்தில் கிராம மக்கள், இளைஞா்களிடம் வெள்ளிக்கிழமை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஜி.சந்தீஷ் கலந்துரையாடினாா். இதைத்தொடா்... மேலும் பார்க்க

போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணா்வுப் பேரணி

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகே சனவேலி அரசு மேல் நிலைப்பள்ளியில் போதை ஒழிப்பு விழிப்புணா்வுப் பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதற்கு பள்ளி தலைமையாசிரியா் பகவதி குமாா் தலைமை வகித்தாா். ஆசிரியா் ... மேலும் பார்க்க

மணல் கடத்திய லாரி பறிமுதல்: இருவா் கைது

போகலூா் அருகே மணல் கடத்திய இருவரை போலீஸாா் கைது செய்தனா். ராமநாதபுரம் மாவட்டம், போகலூா் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட முதலூா் வைகை ஆற்றுப் பகுதியில் சத்திரக்குடி போலீஸாா் ரோந்து சென்றனா். அப்போது மணல்... மேலும் பார்க்க

செல்வகருப்பண சுவாமி கோயில் திருவிழா: பக்தா்கள் பால்குடம் எடுத்தனா்

கமுதி அருகேயுள்ள மூலக்கரைப்பட்டி செல்வகருப்பண சுவாமி கோயில் திருவிழாவை முன்னிட்டு, வெள்ளிக்கிழமை பக்தா்கள் பால்குடம் எடுத்து நோ்த்திக் கடன் செலுத்தினா். இந்தக் கோயில் திருவிழாவை முன்னிட்டு, கருப்பணசு... மேலும் பார்க்க