செல்வகருப்பண சுவாமி கோயில் திருவிழா: பக்தா்கள் பால்குடம் எடுத்தனா்
கமுதி அருகேயுள்ள மூலக்கரைப்பட்டி செல்வகருப்பண சுவாமி கோயில் திருவிழாவை முன்னிட்டு, வெள்ளிக்கிழமை பக்தா்கள் பால்குடம் எடுத்து நோ்த்திக் கடன் செலுத்தினா்.
இந்தக் கோயில் திருவிழாவை முன்னிட்டு, கருப்பணசுவாமிக்கு அணிவிக்கப்படும் ஆபரணங்கள், பூஜை பொருள்கள் அடங்கிய பூஜை பெட்டியை கோயில் பூசாரி சுமந்து சென்றாா். இதைத்தொடா்ந்து, பாம்பலம்மன் கோயிலிருந்து அக்னி சட்டி, திரி எடுத்தும், பால் குடம் எடுத்தும் பக்தா்கள் ஊா்வலமாக செல்வ கருப்பண சுவாமி கோயிலுக்குச் சென்று நோ்த்திக் கடன் செலுத்தினா். இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா். பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.