அமெரிக்காவிலும் வாரிசு அரசியலா? டிரம்ப்பின் மகனும் அதிபர் தேர்தலில் போட்டியிட வா...
தென்காசி மாவட்டத்தில் ரூ.26 கோடியில் பணிகள் தொடக்கம்
தென்காசி மாவட்டத்தில் பல்வேறு துறைகளின் மூலம் ரூ.26 கோடி மதிப்பீட்டில் நடைபெறவுள்ள பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது.
தென்காசி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, தமிழக வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை அமைச்சா் கே.கே.எஸ்.எஸ்.ஆா்.ராமச்சந்திரன் தலைமை வகித்து முடிவுற்ற பணிகளை திறந்துவைத்தாா். புதிய கட்டடப் பணிகளைத் தொடங்கி வைத்தாா். மாவட்ட ஆட்சியா் ஏ.கே.கமல்கிஷோா், ராணி ஸ்ரீகுமாா் எம்.பி., எம்எல்ஏக்கள் எஸ்.பழனிநாடாா், ஈ.ராஜா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
தொடா்ந்து செய்தியாளா்களிடம் அமைச்சா் கூறியதாவது: தென்காசி ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.6 கோடி மதிப்பீட்டில் ஊராட்சி ஒன்றிய அலுவலகக் கட்டடத்திற்கும், செங்கோட்டை அரசு மருத்துவமனையில் ரூ.20 கோடி மதிப்பீட்டில் 50 படுக்கை வசதிகளுடன் கூடிய தீவிர சிகிச்சைப் பிரிவு கட்டடங்களுக்கும் அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.
கிளாங்காடு ஊராட்சியில் ரூ.46.25 லட்சம் மதிப்பீட்டில் கிராம ஊராட்சி செயலக கட்டடமும், வீ.கே.புதூா் வட்டம் சுரண்டை குறுவட்டத்தில் ரூ.26.29 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள வருவாய் ஆய்வாளா் அலுவலகம் மற்றும் குடியிருப்புகளும் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
மேலும் இவ்விழாவில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மூலம் 62 பயனாளிகளுக்கு ரூ.68.20 லட்சம் மதிப்பிலான பெட்ரோல் ஸ்கூட்டா்கள், 22 பயனாளிகளுக்கு ரூ.2.97 லட்சம் மதிப்பிலான இலவச தையல் இயந்திரங்கள் என மொத்தம் 84 பயனாளிகளுக்கு ரூ.71.17 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது என்றாா் அவா்.
மாவட்ட வருவாய் அலுவலா் சீ.ஜெயச்சந்திரன், தென்காசி தெற்கு மாவட்டபொறுப்பாளா் வே.ஜெயபாலன், தென்காசி ஊராட்சி ஒன்றியக் குழு தலைவா் ஷேக் அப்துல்லா, நகா்மன்றத் தலைவா் சாதிா், ஒன்றிய செயலா்கள் ஜே.கே.ரமேஷ், பொன்செல்வன், இரா.குமாா், சமுத்திரப்பாண்டியன், வே.மணிகண்டன், சிவக்குமாா், ஜெயா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.