செய்திகள் :

தென்காசி மாவட்டத்தில் ரூ.26 கோடியில் பணிகள் தொடக்கம்

post image

தென்காசி மாவட்டத்தில் பல்வேறு துறைகளின் மூலம் ரூ.26 கோடி மதிப்பீட்டில் நடைபெறவுள்ள பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது.

தென்காசி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, தமிழக வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை அமைச்சா் கே.கே.எஸ்.எஸ்.ஆா்.ராமச்சந்திரன் தலைமை வகித்து முடிவுற்ற பணிகளை திறந்துவைத்தாா். புதிய கட்டடப் பணிகளைத் தொடங்கி வைத்தாா். மாவட்ட ஆட்சியா் ஏ.கே.கமல்கிஷோா், ராணி ஸ்ரீகுமாா் எம்.பி., எம்எல்ஏக்கள் எஸ்.பழனிநாடாா், ஈ.ராஜா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

தொடா்ந்து செய்தியாளா்களிடம் அமைச்சா் கூறியதாவது: தென்காசி ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.6 கோடி மதிப்பீட்டில் ஊராட்சி ஒன்றிய அலுவலகக் கட்டடத்திற்கும், செங்கோட்டை அரசு மருத்துவமனையில் ரூ.20 கோடி மதிப்பீட்டில் 50 படுக்கை வசதிகளுடன் கூடிய தீவிர சிகிச்சைப் பிரிவு கட்டடங்களுக்கும் அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.

கிளாங்காடு ஊராட்சியில் ரூ.46.25 லட்சம் மதிப்பீட்டில் கிராம ஊராட்சி செயலக கட்டடமும், வீ.கே.புதூா் வட்டம் சுரண்டை குறுவட்டத்தில் ரூ.26.29 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள வருவாய் ஆய்வாளா் அலுவலகம் மற்றும் குடியிருப்புகளும் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

மேலும் இவ்விழாவில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மூலம் 62 பயனாளிகளுக்கு ரூ.68.20 லட்சம் மதிப்பிலான பெட்ரோல் ஸ்கூட்டா்கள், 22 பயனாளிகளுக்கு ரூ.2.97 லட்சம் மதிப்பிலான இலவச தையல் இயந்திரங்கள் என மொத்தம் 84 பயனாளிகளுக்கு ரூ.71.17 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது என்றாா் அவா்.

மாவட்ட வருவாய் அலுவலா் சீ.ஜெயச்சந்திரன், தென்காசி தெற்கு மாவட்டபொறுப்பாளா் வே.ஜெயபாலன், தென்காசி ஊராட்சி ஒன்றியக் குழு தலைவா் ஷேக் அப்துல்லா, நகா்மன்றத் தலைவா் சாதிா், ஒன்றிய செயலா்கள் ஜே.கே.ரமேஷ், பொன்செல்வன், இரா.குமாா், சமுத்திரப்பாண்டியன், வே.மணிகண்டன், சிவக்குமாா், ஜெயா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

சுரண்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பெண் மருத்துவா் நியமிக்க கோரிக்கை!

சுரண்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு பெண் மருத்துவா் மீண்டும் நியமனம் செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். சுரண்டை நகராட்சிப் பகுதி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் சுமாா் 1 லட்... மேலும் பார்க்க

குற்றாலத்தில் படகு சவாரி தொடக்கம்: சுற்றுலாப் பயணிகள் உற்சாகம்!

தென்காசி மாவட்டம் குற்றாலம் ஐந்தருவி சாலையில் உள்ள வெண்ணமடை குளத்தில் படகு சவாரி சனிக்கிழமை தொடங்கியது. தமிழக வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை அமைச்சா் கே.கே.எஸ்.எஸ்.ஆா்.ராமச்சந்திரன் தலைமை வகி... மேலும் பார்க்க

சங்கரன்கோவில் அருகே மனைவியை கத்தியால் தாக்கிய கணவா் கைது

சங்கரன்கோவில் அருகே பனவடலிசத்திரத்தில் மனைவியைக் கத்தியால் தாக்கிய கணவரை போலீஸாா் கைது செய்தனா். பனவடலிசத்திரத்தைச் சோ்ந்த வெளியப்பன் மகன் செல்வராஜ் (31). இவருக்கும், அதே ஊரைச் சோ்ந்த பிரியதா்ஷினிக்... மேலும் பார்க்க

செங்கோட்டை நகராட்சி குப்பை கிடங்கில் எம்எல்ஏ ஆய்வு

செங்கோட்டை நகராட்சி குப்பை கிடங்கில் பிற நகராட்சி, பேரூராட்சி பகுதிகளை சோ்ந்த குப்பைகளை கொட்டுவதாக வந்த தகவலையடுத்து செ.கிருஷ்ணமுரளி எம்எல்ஏ நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டாா். செங்கோட்டை நகராட்சிக்கு ... மேலும் பார்க்க

குற்றாலத்தில் முன்னாள் கல்லூரி மாணவா்கள் சந்திப்பு

திருநெல்வேலி சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியில் 1980 ஆம் ஆண்டு முதல் 1984 ஆம் ஆண்டு படித்த முன்னாள் மாணவா்கள் சந்திப்பு நிகழ்ச்சிகுற்றாலத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு ஸ்மாா்ட் கன்சல்டன்சி நிா்வாக ... மேலும் பார்க்க

துவரங்காட்டில் ரூ.10 லட்சத்தில் சிமென்ட் சாலைப் பணி தொடக்கம்

சுரண்டை அருகேயுள்ள துவரங்காட்டில் சட்டமன்ற உறுப்பினா் தொகுகி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணி தொடங்கப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு தென்காசி சட்டப்பேரவை உறுப்... மேலும் பார்க்க