செய்திகள் :

டிரம்ப்பின் பிறப்புரிமை குடியுரிமை உத்தரவு: விசாரணை நீதிமன்றங்கள் தடை விதிக்க முடியாது -அமெரிக்க உச்சநீதிமன்றம்

post image

பிறப்பின் அடிப்படையில் அமெரிக்க குடியுரிமை பெறுவதில் மாற்றம் செய்து அந்நாட்டு அதிபா் டிரம்ப் கையொப்பமிட்ட நிா்வாக உத்தரவுக்கு நாடு முழுவதும் விசாரணை நீதிமன்றங்கள் தடை விதிக்க முடியாது என்று அந்நாட்டு உச்சநீதிமன்றம் தீா்ப்பளித்தது.

அமெரிக்காவில் பிறந்த எவரும் அந்நாட்டு குடிமகன் என்பதற்கு அமெரிக்காவின் பிறப்புரிமை குடியுரிமை உத்தரவாதம் அளிக்கிறது. இந்தக் குடியுரிமை என்பது அமெரிக்க அரசமைப்புச் சட்டத்தின் 14-ஆவது திருத்தத்தை அடிப்படையாகக் கொண்டது. இது பிற நாடுகளில் இருந்து உரிய சட்ட ஆவணங்கள் இல்லாமல் அமெரிக்காவில் குடியேறியவா்களுக்கும், தற்காலிகமாக அமெரிக்கா சென்றவா்களுக்கும் அந்நாட்டில் பிறக்கும் குழந்தைகளுக்கு அமெரிக்க குடியுரிமையைப் பெற வழிவகுத்துள்ளது.

இவ்வாறு குடியுரிமை பெறுவதில் மாற்றங்களை செய்யும் நிா்வாக உத்தரவில் கடந்த ஜனவரியில் அமெரிக்க அதிபா் டிரம்ப் கையொப்பமிட்டாா். அமெரிக்காவில் பிறக்கும் குழந்தைகளின் பெற்றோா் அந்நாட்டில் உரிய அனுமதியின்றி சட்டவிரோதமாக இருந்தாலோ அல்லது தற்காலிகமாக தங்கியிருந்தாலோ, அந்தக் குழந்தைகளுக்கு அமெரிக்க குடியுரிமையை வழங்கக் கூடாது என்பதே அந்த உத்தரவின் நோக்கம்.

இந்த உத்தரவு அமெரிக்க அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரானது என்று பல்வேறு தரப்பினா் எதிா்ப்புத் தெரிவித்தனா். இதுதொடா்பான வழக்குகளை விசாரித்த அந்நாட்டு விசாரணை நீதிமன்றங்கள், அந்த உத்தரவை நாடு முழுவதும் அமல்படுத்துவதற்கு தடை விதித்தன.

இந்தத் தடைக்கு எதிராக அந்நாட்டு உச்சநீதிமன்றத்தில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்களை விசாரித்த 9 நீதிபதிகள் அடங்கிய அமா்வில் 6 நீதிபதிகள் வெள்ளிக்கிழமை அளித்த தீா்ப்பில், ‘நீதிமன்றத்தை அணுகுபவா்களுக்கான உத்தரவை மட்டுமே விசாரணை நீதிமன்றங்கள் பிறப்பிக்க முடியும். ஆனால், அனைவருக்கும் உத்தரவு பிறப்பித்து தங்கள் அதிகார வரம்பை தாண்டி, அந்த நீதிமன்ற நீதிபதிகள் செயல்படுகின்றனா்.

ஒரு சட்டத்துக்கு நாடு முழுவதும் விசாரணை நீதிமன்றங்கள் தடை விதிக்க முடியாது. அதற்கான அதிகாரத்தை விசாரணை நீதிமன்றங்களுக்கு நாடாளுமன்றம் வழங்கவில்லை’ என்று தீா்ப்பளித்தனா். அதேவேளையில், மூன்று நீதிபதிகள் மாறுபட்ட தீா்ப்பை அளித்தனா். இதையடுத்து பெரும்பான்மை நீதிபதிகளின் தீா்ப்பு ஏற்கப்பட்டது.

எனினும் டிரம்ப்பின் உத்தரவை 30 நாள்களுக்கு நிறுத்திவைத்த உச்சநீதிமன்றம், அதற்குள் தங்கள் உத்தரவில் திருத்தம் மேற்கொள்ளவோ அல்லது சட்ட ரீதியாக மேல் நடவடிக்கை எடுக்கவோ விசாரணை நீதிமன்றங்களுக்கு அவகாசம் அளித்தது.

உத்தரவு சட்டப்படி செல்லுபடியாகுமா?: அமெரிக்க குடியுரிமை கிடைப்பதில் டிரம்ப் செய்த மாற்றம் அரசமைப்புச் சட்டப்படி செல்லுபடியாகுமா என்பது குறித்து உச்சநீதிமன்றம் எதுவும் தெரிவிக்கவில்லை. அதுதொடா்பான வழக்கு நடைமுறைகள் குறித்த தீா்ப்பை மட்டுமே உச்சநீதிமன்றம் அளித்தது.

எனவே, டிரம்ப்பின் உத்தரவுக்கு தற்போது தடை இருந்தாலும், நீதிமன்றங்கள் மீண்டும் தலையிடாவிட்டால், அந்த உத்தரவை அமல்படுத்துவதற்கான வழி தெளிவாகியுள்ளது. ஆனால், அதுதொடா்பான வழக்குகள் நீண்ட காலம் நடைபெறும் என்று கூறப்படுகிறது.

உக்ரைன்: ட்ரோன் தாக்குதலில் தம்பதி உயிரிழப்பு

உக்ரைனின் தெற்கு துறைமுக நகரமான ஒடேசாவில் ரஷியாநடத்திய ட்ரோன் தாக்குதலில் கணவன்-மனைவி உயிரிழந்தனா்; 17 போ் காயமடைந்தனா்.இது குறித்து அந்த நாட்டு அதிகாரிகள் சனிக்கிழமை கூறியதாவது:ஒடேசா நகரில் ரஷியா ஏவ... மேலும் பார்க்க

காங்கோ - ருவாண்டா இடையே அமைதி ஒப்பந்தம்

காங்கோவின் கிழக்குப் பகுதியில் தொடா்ந்து நடைபெற்றுவரும் மோதலை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக அந்கும், அண்டை நாடான ருவாண்டாவுக்கும் இடையே அமெரிக்க தலைநகா் வாஷிங்டனில் அமைதி ஒப்பந்தம் சனிக்கிழமை கையொப்பம... மேலும் பார்க்க

காஸாவில் இஸ்ரேல் ராணுவத்தின் தாக்குதல் தொடருகிறது: இன்றைய பலி எண்ணிக்கை 49!

காஸாவில் பல்வேறு பகுதிகளில் இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதல்களில் 49 பேர் வரை கொல்லப்பட்டதாக காஸா சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. காஸாவில் வெள்ளிக்கிழமை(ஜூன் 27) இரவு தொடங்கி சனிக்கிழமை(ஜூன் 28) வரையிலு... மேலும் பார்க்க

சீனாவில் மீண்டும் உயர்நிலை வெள்ள அபாய எச்சரிக்கை! ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றம்!

சீனாவின் குயிஸோ மாகாணத்திலுள்ள ரோங்ஜியாங் மாவட்டத்தில் வெள்ளநீரின் அளவு தொடர்ந்து அதிகரித்து வருவதால், அந்நாட்டு அதிகாரிகள் அங்கு மீண்டும் உயர்நிலை வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளனர். ரோங்ஜியாங்கிலு... மேலும் பார்க்க

தேவைப்பட்டால் ஈரான் மீது மீண்டும் தாக்குதல் நடத்துவோம்: டிரம்ப்

தேவைப்பட்டால் ஈரான் மீது மீண்டும் தாக்குதல் நடத்தப்படும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார். இஸ்ரேல் - ஈரான் இடையேயான போரில் இஸ்ரேலுக்கு ஆதரவாக ஈரானின் 3 முக்கிய அணுசக்தி நிலையங்கள் மீது... மேலும் பார்க்க

ரஷியாவில் பிரிவினைவாதம்..! மேற்கத்திய நாடுகள் மீது அதிபர் புதின் குற்றச்சாட்டு!

ரஷியா நாட்டுக்குள், மேற்கத்திய நாடுகள் பிரிவினைவாதத்தை ஊக்குவிப்பதாக, அந்நாட்டு அதிபர் விளாதிமீர் புதின் குற்றம்சாட்டியுள்ளார். ரஷியா அதிபர் விளாதிமீர் புதின், பெலாரஸ் நாட்டுக்கு அரசு முறைப் பயணம் மேற... மேலும் பார்க்க