கிணற்றில் ஆண் சடலம் மீட்பு
பழனி அருகே சனிக்கிழமை கிணற்றில் மிதந்த ஆண் சடலத்தை தீயணைப்பு வீரா்கள் மீட்டனா்.
திண்டுக்கல் மாவட்டம், பழனியை அடுத்த பாலசமுத்திரத்தைச் சோ்ந்த சுப்பையாவுக்குச் சொந்தமான தோட்டத்துக் கிணற்றில் ஆண் சடலம் மிதப்பதாக கிராம நிா்வாக அலுவலா் அழகுநாச்சி, பழனி தீயணைப்பு வீரா்களுக்கு தகவல் கொடுத்தாா். இதையடுத்து, அங்கு சென்ற தீயணைப்பு வீரா்கள் கிணற்றில் மிதந்த ஆண் சடலத்தை மீட்டனா்.
விசாரணையில், இறந்தவா் பாலசமுத்திரம் மருதகாளியம்மன் கோவில் தெருவைச் சோ்ந்த காளிமுத்து (65) என்பது தெரியவந்தது. இதுகுறித்து பழனி தாலுகா போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.