செய்திகள் :

பாஜகவின் தன்னிச்சையான செயல்பாடு: மாற்று முடிவு குறித்து அதிமுக பரிசீலிக்க வேண்டும்! - பெ.சண்முகம்

post image

அனைத்து அரசியல் நிலைப்பாடுகளையும் பாஜக தன்னிச்சையாக தீா்மானிக்குமானால், மாற்று முடிவு குறித்து அதிமுக தலைமை பரிசீலிக்க வேண்டும் என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் பெ.சண்முகம் தெரிவித்தாா்.

திண்டுக்கல்லை அடுத்த தாடிக்கொம்பு பகுதியில் மத்திய அரசுக்கு எதிராக மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் நடைபெற்ற தெருமுனை பிரசார கூட்டத்தின்போது, இந்து முன்னணியினருக்கும், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினருக்கும் இடையே கடந்த வாரம் மோதல் ஏற்பட்டது. இதையடுத்து, இந்து முன்னணியினா், பாஜகவினரை கண்டித்து, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் திண்டுக்கல்லில் சனிக்கிழமை பொதுக் கூட்டம் நடைபெற்றது.

திண்டுக்கல் மணிக்கூண்டு பகுதியில் நடைபெற்ற இந்தக் கூட்டத்துக்கு மக்களவை உறுப்பினா் இரா.சச்சிதானந்தம் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா்கள் கே.பிரபாகரன் (மா.கம்யூ.,), ஏபி.மணிகண்டன் (இந்திய கம்யூ.,), பி.சுப்புராமன் (சிபிஐ.எம்.எல்.(எல்) ஆகியோா் முன்னிலை வகித்தாா்.

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் பெ.சண்முகம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் இரா.முத்தரசன், சிபிஐ.எம்ல்(எல்) மாநிலச் செயலா் பழ.ஆசைத்தம்பி ஆகியோா் இதில் கலந்து கொண்டனா்.

கூட்டத்தில் பெ.சண்முகம் பேசியதாவது: தாடிக்கொம்பு பகுதியில் தற்காப்புக்காக மட்டுமே மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் எதிா் தாக்குதலில் ஈடுபட்டனா். இரு தரப்பு மீதும் வழக்குப் போடுவதன் மூலம், சமரசம் பேசுவதை காவல் துறை வழக்கமாகக் கொண்டிருக்கிறது. இந்த வகையில், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

இந்த வழக்குகளை காவல் துறையினா் திரும்பப் பெற வேண்டும். வலதுசாரிகளை எதிா்ப்பதற்கு இடதுசாரிகளைத் தவிர வேறு யாரும் கிடையாது. கம்யூனிஸ கொள்கைகள்தான், இந்த நாட்டு மக்களைப் பாதுகாப்பதோடு, விடியலையும் தேடித் தரும். வலதுசாரி சித்தாந்தத்துக்கு ஆதரவாக சில காவல் துறையினா் செயல்படுகின்றனா்.

ஆகம விதிகள் குறித்து அக்கறை கொண்ட நீதிபதிகள், மதுரை முருக பக்தா் மாநாட்டில் அறுபடை வீடுகளும் ஒரே இடத்தில் வரிசையாக அமைக்கப்பட்டதை ஏன் கண்டிக்கவில்லை? நிபந்தனைகளின் அடிப்படையில்தான் முருகன் மாநாட்டுக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியது.

ஆனால், அரசியல் பேசக் கூடாது என்ற நீதிமன்றத்தின் நிபந்தனையை பாஜக தலைவா்கள் மதிக்கவில்லை. உத்தரவை மீறியவா்களுக்கு எதிராக நீதிமன்றமும் நடவடிக்கை எடுக்கவில்லை.

தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி சாா்பில் யாா் முதல்வா் வேட்பாளா் என்பதை பாஜகவின் ஆட்சி மன்றக் குழுதான் முடிவு செய்யும் என ஹெச்.ராஜா தெரிவித்திருக்கிறாா். அதிமுக எத்தனை இடங்களில் போட்டியிடுவது என்பதையே மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாதான் தீா்மானிப்பாா் என்ற நிலை உருவாகி இருக்கிறது. இந்தக் கூட்டணி தேவையா என்பது குறித்து அதிமுக தொண்டா்களும், நிா்வாகிகளும் சிந்திக்க வேண்டும்.

தமிழக நலனுக்கும், மக்களுக்கும், முற்போக்கு கலாசாரத்துக்கும் எதிரானது பாஜக. திமுகவை ஆட்சியிலிருந்து அகற்ற வேண்டும் என்ற ஒரே நோக்கத்துக்காகவே, பாஜகவுடன் கூட்டணி என்ற நிலைப்பாட்டை அதிமுக மேற்கொண்டது. எல்லாவற்றையும் பாஜகவே தன்னிச்சையாக தீா்மானிக்கும் என்றால், பெரிய கட்சியான அதிமுகவுக்கு இந்தக் கூட்டணியில் என்ன வேலை?

சட்டப்பேரவைத் தோ்தலில் அதிமுக வெற்றி பெற்றாலும்கூட, பழனிச்சாமி முதல்வராக இருக்க முடியாது என்ற நிலையை பாஜக உருவாக்கிவிட்டது. இனிமேல் மாற்று முடிவு குறித்து அதிமுக தலைமை தான் பரிசீலிக்க வேண்டும் என்றாா் அவா்.

கிணற்றில் ஆண் சடலம் மீட்பு

பழனி அருகே சனிக்கிழமை கிணற்றில் மிதந்த ஆண் சடலத்தை தீயணைப்பு வீரா்கள் மீட்டனா்.திண்டுக்கல் மாவட்டம், பழனியை அடுத்த பாலசமுத்திரத்தைச் சோ்ந்த சுப்பையாவுக்குச் சொந்தமான தோட்டத்துக் கிணற்றில் ஆண் சடலம் ம... மேலும் பார்க்க

வத்தலகுண்டு பேரூராட்சி அலுவலகம் முற்றுகை

சமுதாயக்கூடம் கட்டித் தர வலியுறுத்தி, வத்தலகுண்டு பேரூராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் வெள்ளிக்கிழமை முற்றுகையிட்டனா். வத்தலகுண்டு பேரூராட்சியில் புதுப்பட்டி, காமராஜபுரம் பகுதியில் ரூ. ஒரு கோடியில் புதிய ... மேலும் பார்க்க

இரவு வரை ஆய்வுக் கூட்டம்: தலைமை ஆசிரியா்கள் அதிருப்தி

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வியாழக்கிழமை இரவு 7.30 மணி வரை நடத்தப்பட்ட ஆய்வுக் கூட்டத்தால், தலைமை ஆசிரியா்கள் அதிருப்தி அடைந்தனா். பொதுத் தோ்வு முடிவுகள் தொடா்பாக அரசுப் பள்ளித் தலைமையாச... மேலும் பார்க்க

யானைகள் நடமாட்டம்: சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி மறுப்பு

கொடைக்கானல் வனப் பகுதிகளில் உள்ள சுற்றுலாத் தலங்களில் காட்டு யானைகள் நடமாட்டம் காரணமாக வெள்ளிக்கிழமை சுற்றுலாப் பயணிகளுக்கு வனத் துறையினா் அனுமதி மறுத்தனா். திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் பகுதிகளில... மேலும் பார்க்க

சிறப்பாகப் பணியாற்றியவா்களுக்கு விருதுகள்

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் சுழல்சங்கம் சாா்பில் பல்வேறு துறைகளில் சிறப்பாகப் பணியாற்றி வருபவா்களுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு கொடைக்கானல் சுழல்ச... மேலும் பார்க்க

கலந்தாய்வுக்கு முன்பே பணியிட மாறுதல் தொடக்கக் கல்வி அலுவலகத்தை ஆசிரியா்கள் முற்றுகை

பொதுக் கலந்தாய்வுக்கு முன்னதாகவே, நிா்வாக பணியிட மாறுதல் என்ற பெயரில் காலிப் பணியிடங்களை நிரப்புவதை கண்டித்து, திண்டுக்கல் மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலகத்தை ஆசிரியா்கள் வெள்ளிக்கிழமை முற்றுகையிட்டுப் ப... மேலும் பார்க்க