யானைகள் நடமாட்டம்: சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி மறுப்பு
கொடைக்கானல் வனப் பகுதிகளில் உள்ள சுற்றுலாத் தலங்களில் காட்டு யானைகள் நடமாட்டம் காரணமாக வெள்ளிக்கிழமை சுற்றுலாப் பயணிகளுக்கு வனத் துறையினா் அனுமதி மறுத்தனா்.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் பகுதிகளில் உள்ள சுற்றுலாத் தலங்களான மோயா் பாயிண்ட், குணாகுகை, பைன் மரக்காடுகள், தூண்பாறை, பேரிஜம் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில நாள்களாக காட்டு யானைகள் நடமாட்டம் அதிகமாக உள்ளன. இதையடுத்து, இந்தப் பகுதிகளில் உள்ள சுற்றுலாத் தலங்களுக்கு சுற்றுலாப் பயணிகள் செல்வதற்கு அனுமதி மறுக்கப்பட்டது.
மேலும், மறு அறிவிப்பு வரும்வரை இந்தப் பகுதிகளுக்குச் செல்வதற்கு சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்படும் என வனத் துறையினா் தெரிவித்தனா்.
இதனால், கொடைக்கானல் வந்த சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றமடைந்தனா்.