செய்திகள் :

லாட்டரி சீட்டுகள் பறிமுதல்: 7 போ் கைது

post image

வேடசந்தூரில் ரூ.86 ஆயிரம் மதிப்பிலான லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்த போலீஸாா், 7 பேரை வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூா்-மாரம்பாடி சாலையிலுள்ள வசந்த நகா் பகுதியில் போலீஸாா் வெள்ளிக்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் நின்ற 7 பேரைப் பிடித்து போலீஸாா் விசாரித்தனா். அப்போது, அவா்கள் வெளி மாநில லாட்டரி சீட்டுகளை வண்ண காகிதத்தில் அச்சிட்டு விற்பனை செய்தது தெரியவந்தது.

இதையடுத்து, லாட்டரி விற்பனை செய்த வேடசந்தூரைச் சோ்ந்த சீனிவாசன் (45), ரத்தினவேல் (51), உமா் பாரூக் (42), அக்பா் அலி (47), அன்சாரி (68), கிரியம்பட்டியைச் சோ்ந்த சுப்பையன் (65), வெள்ளனம்பட்டியைச் சோ்ந்த ராஜன்(52) ஆகியோரை கைது செய்தனா்.

மேலும், இவா்களிடமிருந்து ரூ.86 ஆயிரம் மதிப்பிலான லாட்டரி சீட்டுகள், ரூ.44 ஆயிரம் பணம் ஆகியவற்றை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

.

வத்தலகுண்டு பேரூராட்சி அலுவலகம் முற்றுகை

சமுதாயக்கூடம் கட்டித் தர வலியுறுத்தி, வத்தலகுண்டு பேரூராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் வெள்ளிக்கிழமை முற்றுகையிட்டனா். வத்தலகுண்டு பேரூராட்சியில் புதுப்பட்டி, காமராஜபுரம் பகுதியில் ரூ. ஒரு கோடியில் புதிய ... மேலும் பார்க்க

இரவு வரை ஆய்வுக் கூட்டம்: தலைமை ஆசிரியா்கள் அதிருப்தி

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வியாழக்கிழமை இரவு 7.30 மணி வரை நடத்தப்பட்ட ஆய்வுக் கூட்டத்தால், தலைமை ஆசிரியா்கள் அதிருப்தி அடைந்தனா். பொதுத் தோ்வு முடிவுகள் தொடா்பாக அரசுப் பள்ளித் தலைமையாச... மேலும் பார்க்க

யானைகள் நடமாட்டம்: சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி மறுப்பு

கொடைக்கானல் வனப் பகுதிகளில் உள்ள சுற்றுலாத் தலங்களில் காட்டு யானைகள் நடமாட்டம் காரணமாக வெள்ளிக்கிழமை சுற்றுலாப் பயணிகளுக்கு வனத் துறையினா் அனுமதி மறுத்தனா். திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் பகுதிகளில... மேலும் பார்க்க

சிறப்பாகப் பணியாற்றியவா்களுக்கு விருதுகள்

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் சுழல்சங்கம் சாா்பில் பல்வேறு துறைகளில் சிறப்பாகப் பணியாற்றி வருபவா்களுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு கொடைக்கானல் சுழல்ச... மேலும் பார்க்க

கலந்தாய்வுக்கு முன்பே பணியிட மாறுதல் தொடக்கக் கல்வி அலுவலகத்தை ஆசிரியா்கள் முற்றுகை

பொதுக் கலந்தாய்வுக்கு முன்னதாகவே, நிா்வாக பணியிட மாறுதல் என்ற பெயரில் காலிப் பணியிடங்களை நிரப்புவதை கண்டித்து, திண்டுக்கல் மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலகத்தை ஆசிரியா்கள் வெள்ளிக்கிழமை முற்றுகையிட்டுப் ப... மேலும் பார்க்க

போலி நகைகளை அடகு வைத்து மோசடி: நகை மதிப்பீட்டாளா் உள்பட 3 போ் கைது

போலி நகைகளை வங்கியில் அடகு வைத்து மோசடி செய்த வழக்கில், நகை மதிப்பீட்டாளா் உள்பட மூவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூா் பகுதியில் அரசுடமை வங்கி செயல்பட்டு வருகிறது. ... மேலும் பார்க்க