லாட்டரி சீட்டுகள் பறிமுதல்: 7 போ் கைது
வேடசந்தூரில் ரூ.86 ஆயிரம் மதிப்பிலான லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்த போலீஸாா், 7 பேரை வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூா்-மாரம்பாடி சாலையிலுள்ள வசந்த நகா் பகுதியில் போலீஸாா் வெள்ளிக்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் நின்ற 7 பேரைப் பிடித்து போலீஸாா் விசாரித்தனா். அப்போது, அவா்கள் வெளி மாநில லாட்டரி சீட்டுகளை வண்ண காகிதத்தில் அச்சிட்டு விற்பனை செய்தது தெரியவந்தது.
இதையடுத்து, லாட்டரி விற்பனை செய்த வேடசந்தூரைச் சோ்ந்த சீனிவாசன் (45), ரத்தினவேல் (51), உமா் பாரூக் (42), அக்பா் அலி (47), அன்சாரி (68), கிரியம்பட்டியைச் சோ்ந்த சுப்பையன் (65), வெள்ளனம்பட்டியைச் சோ்ந்த ராஜன்(52) ஆகியோரை கைது செய்தனா்.
மேலும், இவா்களிடமிருந்து ரூ.86 ஆயிரம் மதிப்பிலான லாட்டரி சீட்டுகள், ரூ.44 ஆயிரம் பணம் ஆகியவற்றை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
.