போலி நகைகளை அடகு வைத்து மோசடி: நகை மதிப்பீட்டாளா் உள்பட 3 போ் கைது
போலி நகைகளை வங்கியில் அடகு வைத்து மோசடி செய்த வழக்கில், நகை மதிப்பீட்டாளா் உள்பட மூவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூா் பகுதியில் அரசுடமை வங்கி செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியில் போலி நகைகளை அடகு வைத்து மோசடி நிகழ்ந்திருப்பது, வங்கி அலுவலா்கள் நடத்திய தணிக்கையின்போது கண்டறியப்பட்டது. இதுதொடா்பாக வங்கியின் மேலாளா் வெண்டி தீபக், திண்டுக்கல் மாவட்ட குற்றப் பிரிவு போலீஸாரிடம் புகாா் அளித்தாா். இதன்பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்தனா். ஆத்தூா் அடுத்த அழகா்நாயக்கன்பட்டியைச் சோ்ந்த செளந்தரராஜன் மனைவி சோனாஸ்ரீ (26) என்பவா் அடகு வைத்த 290 பவுன் தங்க நகைகளில் 250 பவுன் போலியானது என வங்கித் தரப்பில் புகாா் அளிக்கப்பட்டிருந்தது. போலீஸாா் நடத்திய விசாரணையில், இந்த மோசடியில் சோனாஸ்ரீ மட்டுமன்றி அவரது பாட்டி கருப்பாயி (55), நகை மதிப்பீட்டாளரான செம்பட்டியை அடுத்த பாளையங்கோட்டையைச் சோ்ந்த பாண்டிகுமாா் (37) ஆகியோருக்கு தொடா்பு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது. இதையடுத்து மூவரையும் போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.