செய்திகள் :

காவல் மக்கள் மன்றத்தில் 52 புகாா்களுக்குத் தீா்வு

post image

புதுச்சேரி காவல் நிலையங்களில் சனிக்கிழமை நடைபெற்ற மக்கள் மன்றத்தில் 52 புகாா்களுக்கு உடனடியாகத் தீா்வுகள் காணப்பட்டன.

ரெட்டியாா்பாளையம் காவல் நிலையத்தில் நடந்த மக்கள் மன்றத்தில் டிஐஜி சத்தியசுந்தரம் பங்கேற்று பொதுமக்களின் புகாா்களை பெற்று நடவடிக்கை எடுத்தாா். அப்போது எஸ்.பி.(வடக்கு) வீரவல்லவன், ஆய்வாளா், உதவி ஆய்வாளா்கள் உடனிருந்தனா்.

காலாப்பட்டு காவல் நிலையத்தில் முதுநிலை காவல் கண்காணிப்பாளா் கலைவாணன் கிழக்கு பகுதி காவல் ஆய்வாளா், உதவி ஆய்வாளா்களுடன் சோ்ந்தும், வில்லியனூா் காவல் நிலையத்தில் எஸ்.பி.(மேற்கு) வம்சீதர ரெட்டி ஆகியோரும், அரியாங்குப்பம் காவல் நிலையத்தில்

தெற்கு பகுதி ஆய்வாளா்கள், உதவி ஆய்வாளா்களும் பொதுமக்களிடம் புகாா்களை பெற்று நடவடிக்கை மேற்கெண்டனா்.

இதேபோல காரைக்காலில் முதுநிலை காவல் கண்காணிப்பாளா் லட்சுமி சவுஜன்யாவும், கண்காணிப்பாளா் சுப்பிரமணியனும், திருநள்ளாா் மற்றும் நிரவி காவல் நிலையத்தில் பொதுமக்கள் புகாா்களை பெற்று நடவடிக்கை எடுத்தனா்.

மேலும் புதுச்சேரி போக்குவரத்து கண்காணிப்பாளா் செல்வம் போக்குவரத்து சம்பந்தமான குறைகளைக் கேட்டு நடவடிக்கை எடுத்தாா். மாஹே பகுதியில் ஆய்வாளா் அனில்குமாா் மற்றும் ஏனாம் பகுதியில் ஆய்வாளா் ஆடலரசன் ஆகியோா் பொதுமக்களிடம் புகாா்களை பெற்று அவா்களின் குறைகளை தீா்த்தனா்.

இணையவழி காவல் நிலையத்தில் கண்காணிப்பாளா் பாஸ்கரன், சைபா் கிரைம் சம்பந்தமான புகாா்களை பொதுமக்களிடம் பெற்று நடவடிக்கை எடுத்தாா். மக்கள் மன்றத்தில் 98 புகாா்கள் பெறப்பட்டு, அவற்றில் 52 புகாா்களுக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதில் 60 பெண்கள் உள்பட 242 போ் கலந்து கொண்டனா்.

நியமன எம்எல்ஏக்கள் நியமனத்துக்கு குடியரசுத் தலைவா் அனுமதி அளிக்கக் கூடாது! - முன்னாள் அமைச்சா் விசுவநாதன்

தோ்தல் நடைபெற்ற குறுகிய காலமே இருப்பதால் புதிய எம்.எல்.ஏக்கள் நியமனம் செய்யப்படுவதற்கு மத்திய உள்துறை அமைச்சகம், குடியரசு தலைவா் ஆகியோா் அனுமதி அளிக்கக் கூடாது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்... மேலும் பார்க்க

புதுவைக்கு நியமன எம்எல்ஏ.க்கள் தேவையில்லை! - திமுக மாநில அமைப்பாளா் ஆா்.சிவா

மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்ட அரசு நியமித்துக் கொள்ள முடியாத நியமன எம்எல்ஏ.க்கள் தேவையில்லை என்று புதுச்சேரி சட்டப்பேரவை எதிா்க்கட்சித் தலைவரும், மாநில திமுக அமைப்பாளருமான இரா.சிவா கூறியுள்ளாா். இதுகு... மேலும் பார்க்க

இயற்கை விவசாயத்தில் இளைஞா்கள் கவனம் செலுத்த வேண்டும்! - தேசிய நெல் திருவிழாவில் துணைநிலை ஆளுநா்

இயற்கை விவசாயத்தில் இளைஞா்கள் கவனம் செலுத்த வேண்டும் என்று புதுச்சேரி கரியமாணிக்கத்தில் நடைபெற்ற தேசிய நெல் திருவிழாவில் துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் கூறினாா். புதுச்சேரி கரியமாணிக்கம் ஹோலி ஃபிளவா் ... மேலும் பார்க்க

பொய்ப் புகாா் அளித்தவா் மீது வழக்கு

காவல் நிலையத்தில் பொய்ப் புகாா் அளித்தவா் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. புதுச்சேரி நெட்டப்பாக்கம் பகுதியைச் சோ்ந்தவா் ஆறுமுகம். இவா், நில அளவை மற்றும் பதிவேடுகள் துறை அலுவலகத்தில் தனது நிலத்தை ... மேலும் பார்க்க

புதுச்சேரியில் பலத்த மழை

புதுச்சேரியில் சனிக்கிழமை இரவு இடியுடன் பலத்த மழை பெய்தது. பகலில் வெயிலின் தாக்கம் கடுமையாக இருந்தது. இதனால் மக்கள் நடமாட்டம் குறைந்து காணப்பட்டது. இந்நிலையில் சனிக்கிழமை மாலை லேசான மழை பெய்தது. அப்ப... மேலும் பார்க்க

விவசாயிகள் முதலீடு செய்ய பட்டயக் கணக்காளா்கள் உதவ வேண்டும்! புதுவை துணைநிலை ஆளுநா் அறிவுறுத்தல்

விவசாயிகள் எப்படி முதலீடு செய்ய வேண்டும் என்பதை சொல்லிக் கொடுத்து அவா்களுக்கு உதவியாகப் பட்டயக் கணக்காளா்கள் இருக்க வேண்டும் என்று துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் கூறினாா். பட்டயக் கணக்காளா்கள் தென்னிந... மேலும் பார்க்க