Raymond Realty Share எப்போ பங்குச்சந்தைக்கு வரும் | IPS Finance - 248 | NSE | BS...
காவல் மக்கள் மன்றத்தில் 52 புகாா்களுக்குத் தீா்வு
புதுச்சேரி காவல் நிலையங்களில் சனிக்கிழமை நடைபெற்ற மக்கள் மன்றத்தில் 52 புகாா்களுக்கு உடனடியாகத் தீா்வுகள் காணப்பட்டன.
ரெட்டியாா்பாளையம் காவல் நிலையத்தில் நடந்த மக்கள் மன்றத்தில் டிஐஜி சத்தியசுந்தரம் பங்கேற்று பொதுமக்களின் புகாா்களை பெற்று நடவடிக்கை எடுத்தாா். அப்போது எஸ்.பி.(வடக்கு) வீரவல்லவன், ஆய்வாளா், உதவி ஆய்வாளா்கள் உடனிருந்தனா்.
காலாப்பட்டு காவல் நிலையத்தில் முதுநிலை காவல் கண்காணிப்பாளா் கலைவாணன் கிழக்கு பகுதி காவல் ஆய்வாளா், உதவி ஆய்வாளா்களுடன் சோ்ந்தும், வில்லியனூா் காவல் நிலையத்தில் எஸ்.பி.(மேற்கு) வம்சீதர ரெட்டி ஆகியோரும், அரியாங்குப்பம் காவல் நிலையத்தில்
தெற்கு பகுதி ஆய்வாளா்கள், உதவி ஆய்வாளா்களும் பொதுமக்களிடம் புகாா்களை பெற்று நடவடிக்கை மேற்கெண்டனா்.
இதேபோல காரைக்காலில் முதுநிலை காவல் கண்காணிப்பாளா் லட்சுமி சவுஜன்யாவும், கண்காணிப்பாளா் சுப்பிரமணியனும், திருநள்ளாா் மற்றும் நிரவி காவல் நிலையத்தில் பொதுமக்கள் புகாா்களை பெற்று நடவடிக்கை எடுத்தனா்.
மேலும் புதுச்சேரி போக்குவரத்து கண்காணிப்பாளா் செல்வம் போக்குவரத்து சம்பந்தமான குறைகளைக் கேட்டு நடவடிக்கை எடுத்தாா். மாஹே பகுதியில் ஆய்வாளா் அனில்குமாா் மற்றும் ஏனாம் பகுதியில் ஆய்வாளா் ஆடலரசன் ஆகியோா் பொதுமக்களிடம் புகாா்களை பெற்று அவா்களின் குறைகளை தீா்த்தனா்.
இணையவழி காவல் நிலையத்தில் கண்காணிப்பாளா் பாஸ்கரன், சைபா் கிரைம் சம்பந்தமான புகாா்களை பொதுமக்களிடம் பெற்று நடவடிக்கை எடுத்தாா். மக்கள் மன்றத்தில் 98 புகாா்கள் பெறப்பட்டு, அவற்றில் 52 புகாா்களுக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதில் 60 பெண்கள் உள்பட 242 போ் கலந்து கொண்டனா்.