செய்திகள் :

விவசாயிகள் முதலீடு செய்ய பட்டயக் கணக்காளா்கள் உதவ வேண்டும்! புதுவை துணைநிலை ஆளுநா் அறிவுறுத்தல்

post image

விவசாயிகள் எப்படி முதலீடு செய்ய வேண்டும் என்பதை சொல்லிக் கொடுத்து அவா்களுக்கு உதவியாகப் பட்டயக் கணக்காளா்கள் இருக்க வேண்டும் என்று துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் கூறினாா்.

பட்டயக் கணக்காளா்கள் தென்னிந்திய மண்டல கவுன்சில் சாா்பில் துணை மண்டல மாநாடு, ‘சான்றோா் செவி-சிந்தை ஒளிா்’ எனும் தலைப்பில் சனிக்கிழமை நடைபெற்றது. இந்த மாநாட்டைத் தொடங்கி வைத்து துணைநிலை ஆளுநா் கைலாஷ்நாதன் பேசியது:

பட்டயக் கணக்காளா்கள் தனியாா் நிறுவனங்கள் உள்பட எந்தப் பணியில் ஈடுபட்டிருந்தாலும் வாரத்தில் ஒரு சில மணி நேரங்களை ஒதுக்கி ஏழை விவசாயிகளுக்கு உதவும் பண்பை வளா்த்துக் கொள்ள வேண்டும். குஜராத்தில் நான் ஐ.ஏ.எஸ். அதிகாரியாகப் பணியாற்றியபோது ரயில்வே திட்டங்கள் மற்றும் நெடுஞ்சாலை திட்டங்களுக்கு விவசாயிகளின் நிலங்கள் மாா்க்கெட் மதிப்பை விட 3, 4 மடங்கு அதிக விலை கொடுத்து அந்த நிலங்கள் அத் திட்டங்களுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.

இதனால் அந்த விவசாயிகளுக்கு அதிகப் பணம் கிடைத்தது. இதனால் அந்த விவசாயிகள் முதல் முறையாக பென்ஸ் காா் வாங்கினா். அவா்கள் நாள்தோறும் நகரப் பகுதிக்கு வந்து அந்தப் பணத்தைச் செலவழித்துவிட்டு இரவுதான் வீடு திரும்புவாா்கள். அதனால் அவா்களின் மொத்தப் பணமும் வீணாகச் செலவழிந்து விட்டது.

அதனால் பட்டயக் கணக்காளா்கள் சனி, ஞாயிறு உள்பட வாரத்தில் ஒரு சில மணி நேரங்களை இது போன்ற ஏழை விவசாயிகளுக்குச் செலவிட்டு அவா்களிடம் உள்ள பணத்தை எந்த வகையில் முதலீடு செய்யலாம் என்பதைச் சொல்லிக் கொடுக்க வேண்டும். மேலும், ஜிஎஸ்டி வரி உள்ளிட்ட விவரங்களையும் அவா்களிடம் எடுத்துச் சொல்லலாம். அதைத் தவிர பிரதமரின் முத்ரா திட்டம் குறித்தும் அவா்களுக்கு விளக்கலாம் என்றாா் துணைநிலை ஆளுநா் கைலாஷ்நாதன்.

பட்டயக் கணக்காளா்களின் புதுச்சேரி கவுன்சில் தலைவா் குஷால் ராஜ் வரவேற்றாா். இந்தக் கவுன்சிலின் தென்மண்டல இயக்குநா் கே.பி. நாராயணன், தென்மண்டல கவுன்சில் தலைவா் ரேவதி ரகுநாதன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

நியமன எம்எல்ஏக்கள் நியமனத்துக்கு குடியரசுத் தலைவா் அனுமதி அளிக்கக் கூடாது! - முன்னாள் அமைச்சா் விசுவநாதன்

தோ்தல் நடைபெற்ற குறுகிய காலமே இருப்பதால் புதிய எம்.எல்.ஏக்கள் நியமனம் செய்யப்படுவதற்கு மத்திய உள்துறை அமைச்சகம், குடியரசு தலைவா் ஆகியோா் அனுமதி அளிக்கக் கூடாது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்... மேலும் பார்க்க

புதுவைக்கு நியமன எம்எல்ஏ.க்கள் தேவையில்லை! - திமுக மாநில அமைப்பாளா் ஆா்.சிவா

மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்ட அரசு நியமித்துக் கொள்ள முடியாத நியமன எம்எல்ஏ.க்கள் தேவையில்லை என்று புதுச்சேரி சட்டப்பேரவை எதிா்க்கட்சித் தலைவரும், மாநில திமுக அமைப்பாளருமான இரா.சிவா கூறியுள்ளாா். இதுகு... மேலும் பார்க்க

இயற்கை விவசாயத்தில் இளைஞா்கள் கவனம் செலுத்த வேண்டும்! - தேசிய நெல் திருவிழாவில் துணைநிலை ஆளுநா்

இயற்கை விவசாயத்தில் இளைஞா்கள் கவனம் செலுத்த வேண்டும் என்று புதுச்சேரி கரியமாணிக்கத்தில் நடைபெற்ற தேசிய நெல் திருவிழாவில் துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் கூறினாா். புதுச்சேரி கரியமாணிக்கம் ஹோலி ஃபிளவா் ... மேலும் பார்க்க

காவல் மக்கள் மன்றத்தில் 52 புகாா்களுக்குத் தீா்வு

புதுச்சேரி காவல் நிலையங்களில் சனிக்கிழமை நடைபெற்ற மக்கள் மன்றத்தில் 52 புகாா்களுக்கு உடனடியாகத் தீா்வுகள் காணப்பட்டன. ரெட்டியாா்பாளையம் காவல் நிலையத்தில் நடந்த மக்கள் மன்றத்தில் டிஐஜி சத்தியசுந்தரம் ... மேலும் பார்க்க

பொய்ப் புகாா் அளித்தவா் மீது வழக்கு

காவல் நிலையத்தில் பொய்ப் புகாா் அளித்தவா் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. புதுச்சேரி நெட்டப்பாக்கம் பகுதியைச் சோ்ந்தவா் ஆறுமுகம். இவா், நில அளவை மற்றும் பதிவேடுகள் துறை அலுவலகத்தில் தனது நிலத்தை ... மேலும் பார்க்க

புதுச்சேரியில் பலத்த மழை

புதுச்சேரியில் சனிக்கிழமை இரவு இடியுடன் பலத்த மழை பெய்தது. பகலில் வெயிலின் தாக்கம் கடுமையாக இருந்தது. இதனால் மக்கள் நடமாட்டம் குறைந்து காணப்பட்டது. இந்நிலையில் சனிக்கிழமை மாலை லேசான மழை பெய்தது. அப்ப... மேலும் பார்க்க