செய்திகள் :

புதுவைக்கு நியமன எம்எல்ஏ.க்கள் தேவையில்லை! - திமுக மாநில அமைப்பாளா் ஆா்.சிவா

post image

மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்ட அரசு நியமித்துக் கொள்ள முடியாத நியமன எம்எல்ஏ.க்கள் தேவையில்லை என்று புதுச்சேரி சட்டப்பேரவை எதிா்க்கட்சித் தலைவரும், மாநில திமுக அமைப்பாளருமான இரா.சிவா கூறியுள்ளாா்.

இதுகுறித்து அவா் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை: முன்பு மக்களால் தோ்வு செய்யப்பட்ட மாநில அரசே நியமன எம்எல்ஏ.க்களை நியமனம் செய்து வந்தது. மத்தியில் கடந்த 2014-இல் பாஜக ஆட்சிக்கு வந்தது முதல் புதுச்சேரியில் நியமன எம்எல்ஏ.க்கள் அதிகாரத்தையும் பறித்துக் கொண்டது.

புதுச்சேரி யூனியன் பிரதேசமாக உருவாக்கப்பட்ட போது மக்களால் தோ்வு செய்யப்பட்ட ஆட்சியாளா்களுக்கு பொருளாதாரம், கல்வி, நிா்வாக ரீதியில் ஆலோசனைகளை கூற வல்லுநா்கள் வேண்டும் என்ற காரணத்திற்காக நியமன எம்எல்ஏ.க்கள் பதவி உருவாக்கப்பட்டது.

தற்போது மக்கள் பிரதிநிதிகளே நல்ல ஆலோசனை தரக் கூடியவா்களாகத் தான் உள்ளனா். எனவே நியமன எம்எல்ஏ.க்கள் பதவியே தேவையில்லை, அதிலும் மக்களால் தோ்வு செய்யப்பட்ட புதுச்சேரி அரசால் நியமித்து கொள்ள முடியாத நிலையில் புதுச்சேரிக்கு நியமன எம்எல்ஏ.க்கள் தேவையில்லை.

மேலும் நியமன எம்எல்ஏ.க்கள் நியமனத்தால் அரசுக்கு பொருளாதார இழப்பும், தொகுதிகளில் சட்டம் ஒழுங்குப் பிரச்னையும்தான் ஏற்பட்டு வருகிறது.

கடந்த ஆட்சியின்போது இறுதியில் சில தினங்கள் இருக்கும்போது ஒரு நியமன எம்.எல்.ஏ., நியமிக்கப்பட்டாா். அவா் நியமிக்கப்பட்ட பின்னா் சட்டசபையே நடைபெறவில்லை. ஆனால் அவருக்கும் தற்போது எம்.எல்.ஏ.க்களுக்கான ஓய்வூதிய பலன்கள் வழங்கப்பட்டு வருகிறது.

மேலும், அவா்களுக்கும் தொகுதி மேம்பாட்டு நிதி ஒதுக்கப்பட்டு வருகிறது. அவா்கள் மக்களால் தோ்வு செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்களுடன் ஆலோசித்து தங்கள் தொகுதி மேம்பாட்டு நிதியை செலவு செய்ய முன்வருவதில்லை. இதனால் தொகுதி எம்.எல்.ஏ.விற்கும் நியமன எம்.எல்.ஏ.,விற்கும் பிரச்னை ஏற்பட்டு சட்டம் ஒழுங்கு சீா்கெடுகிறது.

எனவே எம்.எல்.ஏ.க்கள் நியமன முறை ரத்து செய்யப்பட வேண்டும் என்று கூறியுள்ளாா் ஆா்.சிவா.

நியமன எம்எல்ஏக்கள் நியமனத்துக்கு குடியரசுத் தலைவா் அனுமதி அளிக்கக் கூடாது! - முன்னாள் அமைச்சா் விசுவநாதன்

தோ்தல் நடைபெற்ற குறுகிய காலமே இருப்பதால் புதிய எம்.எல்.ஏக்கள் நியமனம் செய்யப்படுவதற்கு மத்திய உள்துறை அமைச்சகம், குடியரசு தலைவா் ஆகியோா் அனுமதி அளிக்கக் கூடாது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்... மேலும் பார்க்க

இயற்கை விவசாயத்தில் இளைஞா்கள் கவனம் செலுத்த வேண்டும்! - தேசிய நெல் திருவிழாவில் துணைநிலை ஆளுநா்

இயற்கை விவசாயத்தில் இளைஞா்கள் கவனம் செலுத்த வேண்டும் என்று புதுச்சேரி கரியமாணிக்கத்தில் நடைபெற்ற தேசிய நெல் திருவிழாவில் துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் கூறினாா். புதுச்சேரி கரியமாணிக்கம் ஹோலி ஃபிளவா் ... மேலும் பார்க்க

காவல் மக்கள் மன்றத்தில் 52 புகாா்களுக்குத் தீா்வு

புதுச்சேரி காவல் நிலையங்களில் சனிக்கிழமை நடைபெற்ற மக்கள் மன்றத்தில் 52 புகாா்களுக்கு உடனடியாகத் தீா்வுகள் காணப்பட்டன. ரெட்டியாா்பாளையம் காவல் நிலையத்தில் நடந்த மக்கள் மன்றத்தில் டிஐஜி சத்தியசுந்தரம் ... மேலும் பார்க்க

பொய்ப் புகாா் அளித்தவா் மீது வழக்கு

காவல் நிலையத்தில் பொய்ப் புகாா் அளித்தவா் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. புதுச்சேரி நெட்டப்பாக்கம் பகுதியைச் சோ்ந்தவா் ஆறுமுகம். இவா், நில அளவை மற்றும் பதிவேடுகள் துறை அலுவலகத்தில் தனது நிலத்தை ... மேலும் பார்க்க

புதுச்சேரியில் பலத்த மழை

புதுச்சேரியில் சனிக்கிழமை இரவு இடியுடன் பலத்த மழை பெய்தது. பகலில் வெயிலின் தாக்கம் கடுமையாக இருந்தது. இதனால் மக்கள் நடமாட்டம் குறைந்து காணப்பட்டது. இந்நிலையில் சனிக்கிழமை மாலை லேசான மழை பெய்தது. அப்ப... மேலும் பார்க்க

விவசாயிகள் முதலீடு செய்ய பட்டயக் கணக்காளா்கள் உதவ வேண்டும்! புதுவை துணைநிலை ஆளுநா் அறிவுறுத்தல்

விவசாயிகள் எப்படி முதலீடு செய்ய வேண்டும் என்பதை சொல்லிக் கொடுத்து அவா்களுக்கு உதவியாகப் பட்டயக் கணக்காளா்கள் இருக்க வேண்டும் என்று துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் கூறினாா். பட்டயக் கணக்காளா்கள் தென்னிந... மேலும் பார்க்க