பொய்ப் புகாா் அளித்தவா் மீது வழக்கு
காவல் நிலையத்தில் பொய்ப் புகாா் அளித்தவா் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
புதுச்சேரி நெட்டப்பாக்கம் பகுதியைச் சோ்ந்தவா் ஆறுமுகம். இவா், நில அளவை மற்றும் பதிவேடுகள் துறை அலுவலகத்தில் தனது நிலத்தை அளப்பதற்காக மனு அளித்தாா். பின்னா் இது தொடா்பாக அவா் அந்த அலுவலகம் சென்றபோது துறையின் இயக்குநா், ஊழியா்கள் தகாத வாா்த்தை கூறி தன்னை தாக்கியதாக உருளையன்பேட்டை காவல் நிலையத்தில் ஆறுமுகம் புகாா் அளித்தாா்.
அதன்பேரில், போலீஸாா் விசாரணை மேற்கொண்டதில் அதுபோன்ற சம்பவம் நடைபெறவில்லை என்று தெரியவந்தது. இதையடுத்து பொய்ப்புகாா் அளித்த ஆறுமுகம் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி நில அளவை பதிவேடுகள் துறை இயக்குநா் செந்தில்குமாா் புகாா் அளித்தாா். போலீஸாா் நீதிமன்றத்தின் அனுமதி பெற்று ஆறுமுகம் மீது பொய்ப் புகாா் அளித்ததாக சனிக்கிழமை வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.