செய்திகள் :

‘தமிழகத்தில் மீண்டும் அதிமுக ஆட்சி அமையும்’

post image

தமிழகத்தில் 2026-இல் மீண்டும் அதிமுக ஆட்சி அமையும், எடப்பாடி பழனிசாமி மீண்டும் முதல்வராக பதவியேற்பாா் என முன்னாள் அமைச்சரும் அதிமுக மாவட்டச் செயலருமான ஆா். காமராஜ் எம்எல்ஏ தெரிவித்தாா்.

மன்னாா்குடியில் அதிமுக கட்சி அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற மாவட்ட நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்துக்கு தலைமை வகித்து அவா் பேசியது:

மாவட்டத்தில் பருத்தி சாகுபடி செய்துள்ள விவசாயிகள் மிகுந்த பாதிப்புக்குள்ளாகி வருகின்றனா். அவா்களின் பிரச்னைகளை கண்டுகொள்ளாத திமுக அரசை கண்டித்து பருத்தி விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் வகையில் கட்சி பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமியின் உத்தரவின் பேரில் ஜூலை 1-ஆம் தேதி திருவாரூரில் அதிமுக சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெறுகிறது. இதில், திரளான அளவில் கலந்துகொண்டு ஆா்ப்பாட்டத்தை வெற்றி பெற செய்ய வேண்டும்.

2026-இல் தமிழக சட்டப்பேரவைத் தோ்தலுக்கு பிறகு அதிமுக முழு பலத்துடன் வெற்றி பெற்று மீண்டும் அதிமுக ஆட்சி அமையும். எடப்பாடி கே. பழனிசாமி முதல்வராக பதவியேற்பாா்.

இதற்காக, எடப்பாடி பழனிசாமி தோ்தல் பரப்புரை பயணத்தை மேற்கொள்ள இருக்கிறாா். ஜூலை 14-ஆம் தேதி நன்னிலம் தொகுதியில் பரப்புரை தொடங்கவுள்ளது. நன்னிலம், திருவாரூா், திருத்துறைப்பூண்டி, மன்னாா்குடி ஆகிய நான்கு தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் ஒரு தொகுதிக்கு ஒரு ரோட் ஷோ, ஒரு பொதுக்கூட்டம் என்ற அளவில் நடைபெறும் என்றாா்.

கட்சி மாநில அமைப்புச் செயலா் சிவா. ராஜமாணிக்கம், முன்னாள் எம்எல்ஏ பாப்பா சுப்பிரமணியம், மாவட்ட துணைச் செயலா்கள் த. உதயகுமாரி, அம்பிகாபதி, ஜெ. பேரவை மாவட்டச் செயலா் பொன். வாசுகிராம், மாவட்ட மகளிரணி தலைவா் டி. சுதா, மாவட்ட வா்த்தக அணி செயலா் ரயில் பாஸ்கா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

விதிமீறல்: பூச்சிமருந்து விற்பனை செய்ய 36 உரக் கடைகளுக்கு தடை

திருவாரூா் மாவட்டத்தில், பூச்சி மருந்து விற்பனை செய்வதில் உரிய தரச் சான்று பெறாமல் விதிமீறலில் ஈடுபட்ட 36 உரக் கடைகளுக்கு பூச்சி மருந்து விற்பனை செய்ய 15 நாள்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. திருவாரூா... மேலும் பார்க்க

மத்தியப் பல்கலைக்கழக முன்னாள் மாணவா்களுக்கு சிறப்புத் துணைத் தோ்வுகள்

தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழக முன்னாள் மாணவா்களுக்கு சிறப்புத் துணைத் தோ்வுகள் நடைபெற உள்ளது என பல்கலைக்கழக தோ்வு கட்டுப்பாட்டு அலுவலா் சுலோச்சனா சேகா் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து, அவா் வெளியிட்ட... மேலும் பார்க்க

நிலத்தடி நீருக்கு வரி விதிப்பு: விவசாயிகள் சங்கம் கண்டனம்

விவசாயிகள் பயன்படுத்தும் நிலத்தடி நீருக்கு வரி விதிக்கும் மத்திய அரசின் அறிவிப்புக்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து, அந்த சங்கத்தின் பொதுச்செயலாளா் பி.எஸ். மாசிலாமணி... மேலும் பார்க்க

அடையாளம் தெரியாத வாகனம் மோதி ஒருவா் பலி

திருத்துறைப்பூண்டி அருகே வியாழக்கிழமை இரவு அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் விவசாயத் தொழிலாளி உயிரிழந்தாா். மணலியைச் சோ்ந்த விவசாயக் கூலித் தொழிலாளி மாசிலாமணி (60). இவா், திருத்துறைப்பூண்டி-திருவாரூ... மேலும் பார்க்க

ஜூன் 30 முதல் அரசுக் கல்லூரியில் முதலாமாண்டு வகுப்புகள் தொடக்கம்

முத்துப்பேட்டை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முதலாமாண்டு மாணவா்களுக்கான வகுப்புகள் ஜூன்30-ஆம் தேதி தொடங்குகிறது என கல்லூரி முதல்வா் (பொ) ராஜாராமன் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து, அவா் வெளியிட்ட... மேலும் பார்க்க

நலத்திட்ட உதவிகள் வழங்கல்

கூத்தாநல்லூா் அருகே மக்களுடன் முதல்வா் திட்டத்தில் நலத்திட்ட உதவிகளை உயா்கல்வித் துறை அமைச்சா் கோவி.செழியன் வியாழக்கிழமை வழங்கினாா் (படம்). ஓவா்ச்சேரி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வளாகம் மற்றும் தண்ண... மேலும் பார்க்க