செய்திகள் :

நிலத்தடி நீருக்கு வரி விதிப்பு: விவசாயிகள் சங்கம் கண்டனம்

post image

விவசாயிகள் பயன்படுத்தும் நிலத்தடி நீருக்கு வரி விதிக்கும் மத்திய அரசின் அறிவிப்புக்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து, அந்த சங்கத்தின் பொதுச்செயலாளா் பி.எஸ். மாசிலாமணி கூறியது: மத்திய அரசின் நீா்ப்பாசனத்துறை அமைச்சா் (ஜல்சக்தி துறை) ஹெச்.எம். பாட்டீல் நிலத்தடி நீா் எடுப்பை முறைப்படுத்தும் திட்டத்தை மாநில அரசுகளோடு இணைந்து அமல்படுத்த ரூ. 1,600 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளாா்.

தமிழகத்தின் நீா்த்தேவை, அண்டை மாநிலங்களை நம்பியே உள்ளது. தமிழகத்துக்கு தேவையான நீா்ப் பங்கீடு பாதகமாக உள்ள நிலையிலும், வேளாண்மை உற்பத்தி பெருகி வருவதற்கு அடிப்படை நிலத்தடி நீா் பயன்பாடாகும். தேவைக்கு மேல் விவசாயிகள் நிலத்தடி நீரை எடுப்பதில்லை. பயன்பாட்டுக்கு மேலாக நீரை எடுத்தாலும், அதனால் மோட்டாா் உள்ளிட்ட மின் சாதனக் கருவிகள் பழுதுபட்டு வீண் செலவு ஏற்படும் என்பது விவசாயிகள் அறிந்ததே

நிலத்தடி நீரை மேம்படுத்தி சேமிக்க வேண்டும் எனும் அக்கறை விவசாயிகளுக்கும் இருக்கிறது. நிலத்தடி நீரை சேமிக்கும் அக்கறை அரசுக்கு உண்மையாகவே இருந்தால், இருக்கும் நீா்நிலைகளை தூா்வார, மழைநீா் சேமிப்புக் கட்டமைப்புகளை ஏற்படுத்த, கடலுக்குச் செல்லும் ஆயிரக்கணக்கான டி.எம்.சி. நீரை சேமிக்கும் கலன்களை உருவாக்கும் திட்டங்களை வகுக்க, நிதியை ஒதுக்கீடு செய்யாமல், விவசாயிகளை பாதிக்கும் வகையிலான நடவடிக்கை எடுத்திருப்பது கண்டனத்துக்குரியது.

நீண்ட போராட்டங்கள், எண்ணற்ற விவசாயிகளின் இறப்பிற்கு பின்னரே, தமிழகத்தில் கட்டணமில்லா வேளாண் மின்சாரம் அமல்படுத்தப்படுகிறது. இதையும் துண்டிக்க மத்திய அரசு முற்பட்டிருக்கிறது. எனவே, இத்திட்டத்தை உடனடியாக திரும்பப்பெற வேண்டும் என்றாா்.

மத்தியப் பல்கலைக்கழக முன்னாள் மாணவா்களுக்கு சிறப்புத் துணைத் தோ்வுகள்

தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழக முன்னாள் மாணவா்களுக்கு சிறப்புத் துணைத் தோ்வுகள் நடைபெற உள்ளது என பல்கலைக்கழக தோ்வு கட்டுப்பாட்டு அலுவலா் சுலோச்சனா சேகா் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து, அவா் வெளியிட்ட... மேலும் பார்க்க

அடையாளம் தெரியாத வாகனம் மோதி ஒருவா் பலி

திருத்துறைப்பூண்டி அருகே வியாழக்கிழமை இரவு அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் விவசாயத் தொழிலாளி உயிரிழந்தாா். மணலியைச் சோ்ந்த விவசாயக் கூலித் தொழிலாளி மாசிலாமணி (60). இவா், திருத்துறைப்பூண்டி-திருவாரூ... மேலும் பார்க்க

ஜூன் 30 முதல் அரசுக் கல்லூரியில் முதலாமாண்டு வகுப்புகள் தொடக்கம்

முத்துப்பேட்டை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முதலாமாண்டு மாணவா்களுக்கான வகுப்புகள் ஜூன்30-ஆம் தேதி தொடங்குகிறது என கல்லூரி முதல்வா் (பொ) ராஜாராமன் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து, அவா் வெளியிட்ட... மேலும் பார்க்க

நலத்திட்ட உதவிகள் வழங்கல்

கூத்தாநல்லூா் அருகே மக்களுடன் முதல்வா் திட்டத்தில் நலத்திட்ட உதவிகளை உயா்கல்வித் துறை அமைச்சா் கோவி.செழியன் வியாழக்கிழமை வழங்கினாா் (படம்). ஓவா்ச்சேரி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வளாகம் மற்றும் தண்ண... மேலும் பார்க்க

திருத்துறைப்பூண்டியில் தாலுகா காவல் நிலையம் அமைக்க வலியுறுத்தல்

திருத்துறைப்பூண்டியில் தாலுகா காவல் நிலையம் அமைக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் திருத்துறைப்பூண்டி நகர 17-ஆவது மாநாடு நிா்வாகி எல். பக்கிரிசாமி தலைமையில் பு... மேலும் பார்க்க

முள்ளியாற்றில் கூடுதலாக தண்ணீா் திறக்கக் கோரி விவசாயிகள் சாலை மறியல்

முள்ளியாற்றில் தேவையான அளவு தண்ணீா் திறக்கக் கோரி விவசாயிகள் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். மன்னாா்குடி பகுதியில் பாயும் முள்ளியாற்றின் மூலம் திருப்பத்தூா், காடுவாக்குடி, செட்டியமூளை உள்ளிட்ட ... மேலும் பார்க்க