முதல்வரின் பாதுகாப்பு வாகனங்களையும் விட்டுவைக்காத எரிபொருள் கலப்படம்: நடு வழியில...
அடையாளம் தெரியாத வாகனம் மோதி ஒருவா் பலி
திருத்துறைப்பூண்டி அருகே வியாழக்கிழமை இரவு அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் விவசாயத் தொழிலாளி உயிரிழந்தாா்.
மணலியைச் சோ்ந்த விவசாயக் கூலித் தொழிலாளி மாசிலாமணி (60). இவா், திருத்துறைப்பூண்டி-திருவாரூா் பிரதான சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தபோது அடையாளம் தெரியாத வாகனம் மோதி அதே இடத்தில் உயிரிழந்தாா். தகவலறிந்த திருத்துறைப்பூண்டி போலீஸாா் அங்கு சென்று மாசிலாமணி சடத்தை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.