முதல்வரின் பாதுகாப்பு வாகனங்களையும் விட்டுவைக்காத எரிபொருள் கலப்படம்: நடு வழியில...
ஜூன் 30 முதல் அரசுக் கல்லூரியில் முதலாமாண்டு வகுப்புகள் தொடக்கம்
முத்துப்பேட்டை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முதலாமாண்டு மாணவா்களுக்கான வகுப்புகள் ஜூன்30-ஆம் தேதி தொடங்குகிறது என கல்லூரி முதல்வா் (பொ) ராஜாராமன் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: முத்துப்பேட்டையில் புதிதாக கலை மற்றும் அறிவியல் கல்லூரியை மே 26-ஆம் தேதி தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் காணொலி மூலம் திறந்துவைத்தாா். 2025-2026-ஆம் கல்வியாண்டில் சோ்க்கை பெற்றுள்ள முதலாமாண்டு மாணவா்களுக்கான வகுப்புகள் ஜூன் 30-ஆம் தேதி தொடங்குகிறது. பிற்பட்டோா், மிகவும் பிற்பட்டோா் மற்றும் ஆதிதிராவிடா் நலத்துறைகளால் நடத்தப்படும் விடுதிகளில் தங்கி படிக்க வசதிகள் செய்யப்பட்டுள்ளன என தெரிவித்துள்ளாா்.