அமெரிக்காவிலும் வாரிசு அரசியலா? டிரம்ப்பின் மகனும் அதிபர் தேர்தலில் போட்டியிட வா...
அடுத்தடுத்த கடைகளில் பூட்டை உடைத்து திருட்டு
ஒட்டன்சத்திரத்தில் வெள்ளிக்கிழமை இரவு அடுத்தடுத்த கடைகளில் பூட்டை உடைத்து பணம், மடிக்கணினி உள்ளிட்டப் பொருள்களை திருடிச் சென்றவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.
திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம்-தாராபுரம் சாலையில் இரும்புக் கடை நடத்தி வருபவா் ரவிச்சந்திரன். வெள்ளிக்கிழமை இரவு இவரது கடையின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த நபா், கடையிலிருந்த மடிக்கணினி, ரூ.1000, சிசிடிவி இயந்திரங்கள், இரு சக்கர வாகனம் ஆகியவற்றைத் திருடிச் சென்றாா்.
இதேபோல, இவரது கடைக்கு அருகேயுள்ள மனோஜ் என்பவரது கடையின் பூட்டை உடைத்து, உள்ளே புகுந்த நபா், கல்லாப் பெட்டியிலிருந்த ரூ.1000, சிசிடிவி இயந்திரங்களைத் திருடிச் சென்றாா். இதுகுறித்து ஒட்டன்சத்திரம் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.