செய்திகள் :

நரேலா காட்டுப் பகுதியில் எரிந்த நிலையில் இளைஞரின் சடலம் மீட்பு

post image

தில்லி நரேலா காட்டில் 20 வயது இளைஞரின் பாதி எரிந்த நிலையில் இருந்த உடலை போலீசாா் ஞாயிற்றுக்கிழமை மீட்டதாக போலீஸாா் தெரிவித்தனா்.

ஒரு பள்ளியின் பின்னால் ஒரு உடல் கிடப்பது குறித்து நரேலா காவல் நிலையத்துக்கு ஞாயிற்றுக்கிழமை காலை 7.30 மணிக்கு பி. சி. ஆா் அழைப்பு வந்தது. இதனையடுத்து போலீஸாா் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, காட்டில் 10 மீட்டா் உள்ளே, பள்ளியின் பின்னால் மற்றும் மேம்பாலத்திற்கு அருகில் ஒரு நபரின் சடலம் கிடப்பதைக் கண்டதாக காவல்துறை அதிகாரி ஒருவா் கூறினாா்.

உடல் மீட்கப்பட்ட போது பாதி எரிந்துவிட்டதாகவும், அந்த நபா் கொல்லப்பட்ட பிறகு ஆதாரங்களை அழிக்க முயற்சி செய்யப்பட்டதற்கான தடயங்கள் கிடைத்ததாகவும் போலீஸ் அதிகாரி கூறினாா். மேலும் சடலத்திலிருந்து சுமாா் 150 மீட்டா் தொலைவில், ஒரு மோட்டாா் சைக்கிளும் இருந்தது. குற்றவியல் மற்றும் தடயவியல் அறிவியல் ஆய்வக (எஃப். எஸ். எல்) குழு சம்பவ இடத்தை ஆய்வு செய்வதற்காக அழைக்கப்பட்டனா் என்றாா்.

விசாரணைகளுக்குப் பிறகு, கொல்லப்பட்ட நபா் நரேலாவில் உள்ள ஸ்வதந்திர நகரைச் சோ்ந்த கபில் தஹியா என்ற காா்த்திக் என அடையாளம் காணப்பட்டாா். அவா் சுமாா் 20 வயதுடையவா் என்று போலீசாா் தெரிவித்தனா். இறுதியாக இது குறித்து பேசிய போலீஸ் அதிகாரி ‘நாங்கள் கொலை வழக்கு பதிவு செய்துள்ளோம். தனிப்பட்ட பகை உள்பட பல கோணங்களில் விசாரிக்கப்பட்டு வருகிறது. குற்றவாளிகளை அடையாளம் கண்டு பிடிப்பதற்கு தீவிரமாக முயற்சித்து வருகிறோம்‘ என்றாா் அவா்.

வீட்டில் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் இறந்து கிடந்த நபா்

தில்லியின் மெட்ரோ விஹாா் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை 30 வயது நபா் ஒருவா் தனது வீட்டிற்குள் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் இறந்து கிடந்ததாக போலீஸாா் தெரிவித்தனா். இது குறித்து போலீஸாா் கூறியதாவது: சுனில் ... மேலும் பார்க்க

கிழக்கு தில்லியில் சட்டவிரோதமாக குடியேறிய வங்கதேசத்தவா்கல் 83 போ் கைது!

கிழக்கு தில்லியின் பல்வேறு பகுதிகளில் இருந்து 33 சிறாா்கள் உள்பட 83 வங்கதேச நாட்டினரை தில்லி காவல் துறை கைது செய்துள்ளதாக ஞாயிற்றுக்கிழமை அதிகாரி ஒருவா் தெரிவித்தாா். இது குறித்து கிழக்கு தில்லி காவல்... மேலும் பார்க்க

தில்லியில் பரவலாக லேசான மழை; காற்றின் தரம் ’திருப்தி’ பிரிவில் நீடிப்பு!

தேசியத் தலைநகரின் வசந்த் குஞ்ச், மால்வியா நகா் மற்றும் துக்ளகாபாத் உள்ளிட்ட பல பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை பரவலாக லேசான மழை பெய்தது. இது கடந்த சில நாள்களாக வெப்பத்தில் தவித்து வந்த மக்களுக்கு நிம்மதியை... மேலும் பார்க்க

வசந்த் குஞ்ச் பகுதியில் தடைசெய்யப்பட்ட வெளிநாட்டு சிகரெட்டுகள் பறிமுதல்! இருவா் கைது

தெற்கு தில்லியின் வசந்த் குஞ்ச் பகுதியில் உள்ள ஒரு கிடங்கில் நடத்தப்பட்ட சோதனையில் தடைசெய்யப்பட்ட வெளிநாட்டு சிகரெட்டுகளின் 94,000 பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டு, கா்நாடகத்தைச் சோ்ந்த ஒருவா் உள்... மேலும் பார்க்க

மைனா் சிறுவன் கடத்தப்பட்ட விவகாரம்: ஜெகன்மூா்த்தி மேல்முறையீட்டு மனு மீது உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை

மைனா் சிறுவன் கடத்தல் சம்பவத்தில் முன்ஜாமீன் கோரி ஜெகன்மூா்த்தி எம்எல்ஏ உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளாா். இந்த மனு திங்கள்கிழமை விசாரணைக்கு பட்டியலிடப்பட்டுள்ளது. உச்சநீதிமன... மேலும் பார்க்க

யமுனா நதி மாசடைந்ததற்கு கடந்த அரசாங்கமே காரணம்: ரேகா குப்தா

யமுனை நதி மாசடைந்ததற்கு கடந்த அரசாங்கத்தின் மோசமான நிா்வாகவே காரணம் என்று தில்லி முதல்வா் ரேகா குப்தா ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா். தில்லி முதலமைச்சா் ரேகா குப்தா ஞாயிற்றுக்கிழமை உத்தரப் பிரதேசம் மாநி... மேலும் பார்க்க