செய்திகள் :

கலை, அறிவியல் கல்லூரிகளில் முதலாமாண்டு வகுப்புகள் தொடக்கம்!

post image

சென்னை: தமிழகத்தில் கலை, அறியியல் கல்லூரிகளில் முதலாமாண்டு மாணவர் சேர்க்கை முடிந்து, கல்லூரிக்குள் அடியெடுத்து வைக்கும் முதலாமாண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் இன்று முதல் தொடங்கின.

பள்ளியிலிருந்து விடைபெற்று, கல்லூரிக்குள் மிகுந்த உற்சாகத்துடன் மாணவ, மாணவிகள் வந்துள்ளனர். பல்வேறு கல்லூரிகளில், முதலாமாண்டு மாணவர்களை வரவேற்க கல்லூரி நிர்வாகங்கள் சார்பில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

முதலாமாண்டு மாணவர்களுக்கு பூக்களை பரிசளித்து மூத்த மாணவ, மாணவிகள் வரவேற்றனர். முன்னதாக, பருவத் தோ்வு மற்றும் கோடை விடுமுறைக்கு பின்னா் கலை அறிவியில் கல்லூரிகள் கடந்த வாரம் திங்கள்கிழமை திறக்கப்பட்ட நிலையில், முதலாமாண்டு மாணவர்களுக்கு இன்று கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளன.

தமிழகத்தில் உள்ள கலை, அறிவியல் கல்லூரிகளில் கடந்த ஏப்ரல் - மே மாதங்களில் பருவத் தோ்வுகள் நடைபெற்றது. பின்னா் ஒரு மாதம் கோடை விடுமுறை விடப்பட்டது. அதன் பின்னா் திங்கள்கிழமை (ஜூன் 16) கலை, அறிவியல் கல்லூரிகள் திறக்கப்பட்டன.

தமிழகத்தில் 183 அரசுக் கல்லூரிகள், 161 அரசு உதவி பெறும் கல்லூரிகள் மற்றும் 1,299 சுயநிதி கலை, அறிவியல் கல்லூரிகள் என 1,643 கல்லூரிகள் உள்ளன. இந்தக் கல்லூரிகளில் சமீபத்தில் முதலாமாண்டு இளநிலை, முதுநிலை பட்டப் படிப்புகளுக்கும் சோ்க்கைகள் நடைபெற்று முடிந்தன.

இவா்களுக்கான வகுப்புகள் ஜூன் 30-ஆம் தேதிக்குள் தொடங்க கல்லூரி கல்வி இயக்குநரகம் உத்தரவிட்டிருந்த நிலையில், பெரும்பாலான கல்லூரிகள் இன்று தொடங்கியிருக்கின்றன. சில தனியாா் மற்றும் அரசு உதவிபெரும் கல்லூரிகளில் முதலாமாண்டு மாணவா்களுக்கான வகுப்புகளும் கடந்த வாரமே தொடங்கிவிட்டன.

ஜூலை 8-ல் நெல்லை மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை!

நெல்லையப்பர் கோயில் தோரோட்டத்தை முன்னிட்டு திருநெல்வேலி மாவட்டத்துக்கு வரும் ஜூலை 8 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பார்க்க

சட்டம் - ஒழுங்கு: முதல்வர் தலைமையில் ஆய்வுக் கூட்டம்!

சட்டம் - ஒழுங்கு குறித்த ஆய்வுக் கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று(ஜூன் 30) நடைபெற்றது.இக்கூட்டத்தில், தலைமைச் செயலாளர் நா. முருகானந்தம், உள்துறை கூடுதல் தலைமைச் செய... மேலும் பார்க்க

சிறுவன் கடத்தல்: பூவை ஜெகன்மூர்த்தி எம்எல்ஏவுக்கு முன் ஜாமீன்!

திருவள்ளூர் மாவட்டத்தில் சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில் புரட்சி பாரதம் கட்சித் தலைவரும், சட்டப்பேரவை உறுப்பினருமான பூவை ஜெகன்மூர்த்திக்கு உச்ச நீதிமன்றம் முன் ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.திருவள்ளூா் மாவட்ட... மேலும் பார்க்க

பழைய ஆயிரம், ஐநூறு ரூபாய் நோட்டை மாற்றி தரக்கோரி கோவை ஆட்சியரிடம் மூதட்டி தங்கமணி மனு

பழைய ஆயிரம், ஐநூறு ரூபாய் நோட்டை மாற்றி தரக்கோரி கோவை மாவட்ட ஆட்சியரிடம் மூதட்டி தங்கமணி மனு அளித்தார்.கோவை மாவட்டம், சிங்காநல்லூர் உப்பிலிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் தங்கமணி என்ற மூதாட்டி. இவர், தன்... மேலும் பார்க்க

அதிமுக - பாஜக இடையே இணைப்புதான் இருக்கிறது; பிணைப்பு இல்லை: திருமாவளவன்

அதிமுக - பாஜக இடையே இணைப்பு உள்ளதே தவிர, பிணைப்பு இல்லை என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் கூறியுள்ளார்.தமிழ்நாட்டில் 2026 தேர்தலில் அதிமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க... மேலும் பார்க்க

பள்ளிகளில் 'வாட்டர் பெல்' திட்டம் நடைமுறைக்கு வந்தது!

தமிழ்நாட்டில் உள்ள பள்ளிகளில் மாணவ, மாணவிகள் தண்ணீர் அருந்துவதை உறுதி செய்யும் 'வாட்டர் பெல்' திட்டம் இன்று(திங்கள்கிழமை) அமலுக்கு வந்தது. அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் தண்ணீர் குடிப்பதை உறுதி செய்யும் ... மேலும் பார்க்க