செய்திகள் :

அதிமுக - பாஜக இடையே இணைப்புதான் இருக்கிறது; பிணைப்பு இல்லை: திருமாவளவன்

post image

அதிமுக - பாஜக இடையே இணைப்பு உள்ளதே தவிர, பிணைப்பு இல்லை என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் கூறியுள்ளார்.

தமிழ்நாட்டில் 2026 தேர்தலில் அதிமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியிருந்தார்.

மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களுடன் பேசிய தொல். திருமாவளவன் இதுபற்றி,

"அமித்ஷா மட்டும்தான் திரும்பத் திரும்ப கூட்டணி ஆட்சி என்ற கருத்தை சொல்லி வருகிறார். இதுவரையில் அதிமுக தலைவர், பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி எந்தக் கருத்தையும் சொல்லாமல் மௌனம் காக்கிறார் என்று குறிப்பிட்டிருந்தேன். தற்போது அவர் அதற்கு விடை அளித்திருக்கிறார். அவர் சொல்லியிருக்கிற பதில் பாஜகவுக்குதான் என்பதை நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது.

கூட்டணி ஆட்சி இங்கு இல்லை, அதிமுக அதற்கு உடன்படாது என்கிற விடையை பாஜகவினருக்குத்தான் சொல்லி இருக்கிறார் என்பதை எளிதாக புரிந்துகொள்ள முடிகிறது.

அதேபோல அதிமுகவை எந்த கொம்பனாலும் கபளீகரம் செய்ய முடியாது என்ற கருத்தையும் பதிவு செய்திருக்கிறார் இபிஎஸ். கபளீகரம் செய்வதற்கு யார் முயற்சிக்கிறார்கள் என்பதையும் அவர் தெளிவுபடுத்த வேண்டும்.

அதிமுகவை, திமுக தலைமையிலான கட்சியில் கபளீகரம் செய்ய முயற்சிக்க வாய்ப்பு இல்லை. அப்படி ஒரு முயற்சி மேற்கொள்ளவும் முடியாது. அவர்களுடன் இருக்கும் கட்சிகளால் மட்டும்தான் விழுங்குகிற முயற்சியை மேற்கொள்ள முடியும். ஆகவே அந்த கருத்தும் பாஜகவுக்கு எதிராக அவர் சொல்லியிருக்கிறார் என்றுதான் உணர்ந்துகொள்ள முடிகிறது. பாஜகவுக்கும் அதிமுகவுக்கும் ஒரு இணைப்பு உள்ளதே தவிர, பிணைப்பு இல்லை" என்று கூறியுள்ளார்.

VCK leader Thirumavalavan said that there is a connection between the AIADMK and the BJP, but not a bond.

இதையும் படிக்க | சென்னையில் மின்சாரப் பேருந்து சேவையை தொடக்கிவைத்தார் முதல்வர்!

சென்னையில் குழாய் மூலம் வீடுகளுக்கு எரிவாயு விநியோகம்: விரைவில் அமல்!

சென்னயில் 8 இடங்களில் குழாய் மூலம் வீடுகளுக்கு எரிவாயு விநியோகம் செய்யும் திட்டம் விரைவில் அமல்படுத்தப்படவுள்ளது.மத்திய அரசு, தமிழ்நாட்டில் நகர இயற்கை எரிவாயு விநியோகத்தினை, குழாய்கள் மூலம் வழங்குவதற்... மேலும் பார்க்க

காவல்துறை விசாரணையில் இளைஞர் மரணம்: வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்!

சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் காவல்துறை விசாரணையில் இளைஞர் உயிரிழந்த வழக்கு, சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது. திருப்புவனம் அருகே மடப்புரம் காளி கோயிலுக்கு விருதுநகா் மாவட்டத்தைச் சோ்ந்த ... மேலும் பார்க்க

ஏ.ஆர். ரஹ்மானுடன் எல். முருகன் சந்திப்பு!

இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மானை மத்திய இணையமைச்சர் எல். முருகன் நேரில் சந்தித்துப் பேசினார்.சுமார் ஒரு மணிநேரம் நடைபெற்ற இந்த சந்திப்பு தொடர்பாக அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகாத நிலையில், அரசியல் அர... மேலும் பார்க்க

ஜூலை 8-ல் நெல்லை மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை!

நெல்லையப்பர் கோயில் தோரோட்டத்தை முன்னிட்டு திருநெல்வேலி மாவட்டத்துக்கு வரும் ஜூலை 8 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பார்க்க

சட்டம் - ஒழுங்கு: முதல்வர் தலைமையில் ஆய்வுக் கூட்டம்!

சட்டம் - ஒழுங்கு குறித்த ஆய்வுக் கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று(ஜூன் 30) நடைபெற்றது.இக்கூட்டத்தில், தலைமைச் செயலாளர் நா. முருகானந்தம், உள்துறை கூடுதல் தலைமைச் செய... மேலும் பார்க்க

சிறுவன் கடத்தல்: பூவை ஜெகன்மூர்த்தி எம்எல்ஏவுக்கு முன் ஜாமீன்!

திருவள்ளூர் மாவட்டத்தில் சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில் புரட்சி பாரதம் கட்சித் தலைவரும், சட்டப்பேரவை உறுப்பினருமான பூவை ஜெகன்மூர்த்திக்கு உச்ச நீதிமன்றம் முன் ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.திருவள்ளூா் மாவட்ட... மேலும் பார்க்க