செய்திகள் :

ஏ.ஆர். ரஹ்மானுடன் எல். முருகன் சந்திப்பு!

post image

இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மானை மத்திய இணையமைச்சர் எல். முருகன் நேரில் சந்தித்துப் பேசினார்.

சுமார் ஒரு மணிநேரம் நடைபெற்ற இந்த சந்திப்பு தொடர்பாக அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகாத நிலையில், அரசியல் அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகேவுள்ள அய்யர்கண்டிகையில் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் பிரம்மாண்ட ஸ்டுடியோ கட்டியுள்ளார்.

இந்த ஸ்டுடியோவை நேரில் பார்வையிட வருமாறு மத்திய இணையமைச்சர் எல். முருகனுக்கு ஏ.ஆர். ரஹ்மான் விடுத்த அழைப்பின்பேரில் ஞாயிற்றுக்கிழமை மாலை அவர் சென்றதாகக் கூறப்படுகிறது.

மேலும், இந்த சந்திப்பின்போது அரசியல் பேசப்படவில்லை என்றும், அண்மையில் மத்திய அரசின் குறும்படத்துக்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்து கொடுத்ததற்காக நன்றி தெரிவிக்கச் சென்றதாகவும் தகவல்கள் வெளியாகின.

இந்த நிலையில், ஏ.ஆர். ரஹ்மானை சந்தித்தது தொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பில் எல். முருகன் விளக்கம் அளித்துள்ளார்.

”உலகளவில் சிறந்த தொழில்நுட்பங்களுடன் கட்டப்பட்டுள்ள மிகப்பெரிய ஸ்டுடியோவை ஏ.ஆர். ரஹ்மான் கட்டியுள்ளார். மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சர் என்ற முறையில் நேரில் சென்று பார்த்தேன்” எனத் தெரிவித்துள்ளார்.

அண்மையில் தில்லியில் குடியரசுத் துணைத் தலைவரை நடிகை மீனா சந்தித்தது பேசுபொருளான நிலையில், இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான், மத்திய இணையமைச்சர் எல். முருகனின் சந்திப்பு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிக்க : கர்நாடக முதல்வர் மாற்றமா? விமர்சனத்துக்கு உள்ளான கார்கே பதில்!

Union Minister of State L. Murugan met and spoke to music composer A.R. Rahman in person.

பெரிய வணிக நிறுவனங்களுக்கு மின் கட்டண உயர்வு!

பெரிய தொழில் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு 3.16 சதவீதத்திற்கு மிகாமல், மின் கட்டண உயர்த்தப்படவுள்ளதாக போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் சிவசங்கர் இன்று (ஜூன் 30) தெரிவித்துள்ளார். சிறு வணிகர... மேலும் பார்க்க

அடுத்த 3 மணி நேரத்துக்கு சென்னை, 16 மாவட்டங்களில் மழை!

தமிழ்நாட்டில் அடுத்த 3 மணிநேரத்துக்கு சென்னை உள்பட 17 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தளப் பக்க... மேலும் பார்க்க

அரசியல், கொள்கை எதிரியைத்தவிர யார் வந்தாலும் அரவணைப்போம்: தவெக

அரசியல் எதிரி, கொள்கை எதிரியைத்தவிர யார் வந்தாலும் அரவணைப்போம் என தமிழக வெற்றிக்கழக மாநில கொள்கைப் பரப்பு பொதுச்செயலாளர் அருண்ராஜ் தெரிவித்துள்ளார்.தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பிறந்தநாளை ஒட்... மேலும் பார்க்க

அடுத்த 2 மணி நேரத்துக்கு சென்னை, 12 மாவட்டங்களில் மழை!

அடுத்த 2 மணி நேரத்துக்கு சென்னை உள்ளிட்ட 12 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் இன்று(ஜூன் 30) ஒருசி... மேலும் பார்க்க

நீதியை நிலைநாட்ட வேண்டும்: காவல்துறையினருக்கு முதல்வர் அறிவுறுத்தல்!

காவல் நிலையங்களுக்குப் புகார் கொடுக்க வரும் மக்களிடம் கண்ணியத்தோடு நடந்து கொண்டு அவர்களின் புகார்கள் மீது நடவடிக்கை எடுத்து நீதியை நிலைநாட்ட வேண்டும் என்று காவல்துறையினருக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் அ... மேலும் பார்க்க

சென்னையில் குழாய் மூலம் வீடுகளுக்கு எரிவாயு விநியோகம்: விரைவில் அமல்!

சென்னயில் 8 இடங்களில் குழாய் மூலம் வீடுகளுக்கு எரிவாயு விநியோகம் செய்யும் திட்டம் விரைவில் அமல்படுத்தப்படவுள்ளது.மத்திய அரசு, தமிழ்நாட்டில் நகர இயற்கை எரிவாயு விநியோகத்தினை, குழாய்கள் மூலம் வழங்குவதற்... மேலும் பார்க்க