‘காந்தி கண்ணாடி’ - ஹீரோவாக சின்னதிரை நடிகர் பாலா! விடியோவில் இதையெல்லாம் கவனித்த...
ஏ.ஆர். ரஹ்மானுடன் எல். முருகன் சந்திப்பு!
இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மானை மத்திய இணையமைச்சர் எல். முருகன் நேரில் சந்தித்துப் பேசினார்.
சுமார் ஒரு மணிநேரம் நடைபெற்ற இந்த சந்திப்பு தொடர்பாக அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகாத நிலையில், அரசியல் அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகேவுள்ள அய்யர்கண்டிகையில் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் பிரம்மாண்ட ஸ்டுடியோ கட்டியுள்ளார்.
இந்த ஸ்டுடியோவை நேரில் பார்வையிட வருமாறு மத்திய இணையமைச்சர் எல். முருகனுக்கு ஏ.ஆர். ரஹ்மான் விடுத்த அழைப்பின்பேரில் ஞாயிற்றுக்கிழமை மாலை அவர் சென்றதாகக் கூறப்படுகிறது.
மேலும், இந்த சந்திப்பின்போது அரசியல் பேசப்படவில்லை என்றும், அண்மையில் மத்திய அரசின் குறும்படத்துக்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்து கொடுத்ததற்காக நன்றி தெரிவிக்கச் சென்றதாகவும் தகவல்கள் வெளியாகின.
இந்த நிலையில், ஏ.ஆர். ரஹ்மானை சந்தித்தது தொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பில் எல். முருகன் விளக்கம் அளித்துள்ளார்.
”உலகளவில் சிறந்த தொழில்நுட்பங்களுடன் கட்டப்பட்டுள்ள மிகப்பெரிய ஸ்டுடியோவை ஏ.ஆர். ரஹ்மான் கட்டியுள்ளார். மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சர் என்ற முறையில் நேரில் சென்று பார்த்தேன்” எனத் தெரிவித்துள்ளார்.
அண்மையில் தில்லியில் குடியரசுத் துணைத் தலைவரை நடிகை மீனா சந்தித்தது பேசுபொருளான நிலையில், இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான், மத்திய இணையமைச்சர் எல். முருகனின் சந்திப்பு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிக்க : கர்நாடக முதல்வர் மாற்றமா? விமர்சனத்துக்கு உள்ளான கார்கே பதில்!
Union Minister of State L. Murugan met and spoke to music composer A.R. Rahman in person.