செய்திகள் :

ஈரான், ஜோர்டான், லெபனான், சிரியாவுக்கு மீண்டும் விமான சேவை: கத்தார்!

post image

போர் நடைபெற்று வந்த ஈரானுக்கு மீண்டும் விமான சேவையைத் தொடங்குவதாக கத்தார் ஏர்வேஸ் அறிவித்துள்ளது. இதன்படி இன்று முதல் (ஜூன் 30) விமான சேவை மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.

இதேபோன்று, மத்திய கிழக்கில் உள்ள ஜோர்டான், லெபனான் மற்றும் சிரியாவுக்கும் விமான சேவை மீண்டும் தொடங்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது. இதில், ஜோர்டான், லெபனானுக்கு ஜூலை 1 முதலும், சிரியாவுக்கு மட்டும் ஜூலை 6ஆம் தேதி முதலும் மீண்டும் விமான சேவை தொடங்கப்பட உள்ளது.

இஸ்ரேல் - ஈரான் இடையே கடந்த இரு வாரங்களாக போர் நடைபெற்று வந்த நிலையில், அதன் வான்வழித்தடம் மூடப்பட்டிருந்தது.

போரின் 12வது நாளில் இரு நாடுகளுக்கு இடையிலான போர் முடிவுக்கு வருவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து இஸ்ரேல் - ஈரான் இடையே தாக்குதல்கள் குறைந்தன.

இந்நிலையில், ஈரானுக்கு மீண்டும் விமான சேவை தொடங்கப்படுவதாக கத்தார் ஏர்வேஸ் அறிவித்துள்ளது. இதன்படி ஈரானில் உள்ள 5 இடங்களுக்கு இன்று முதல் (ஜூன் 30) விமான சேவை தொடங்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க | காஸா போர்: இஸ்ரேலின் வான்வழி தாக்குதல்களில் 68 பேர் பலி!

Qatar Airways said its flights to Iraq would resume later on Monday, while flights to Lebanon and Jordan will restart on July 1,

காஸா போர்: இஸ்ரேலின் வான்வழி தாக்குதல்களில் 68 பேர் பலி!

காஸாவில் வான்வழி தாக்குதலை இஸ்ரேல் தீவிரப்படுத்தியுள்ளது. காஸாவில் பரவலாக நடத்தப்பட்ட வான் வழி தாக்குதல்களில் பாலஸ்தீன மக்கள் 68 பேர் கொல்லப்பட்டனர்.காஸாவில் ஞாயிற்றுக்கிழமை(ஜூன் 29) சுமார் 50-க்கும் ... மேலும் பார்க்க

சூடானில் தங்கச் சுரங்கம் இடிந்து விழுந்ததில் 11 தொழிலாளர்கள் பலி

சூடானில் தங்கச் சுரங்கம் இடிந்து விழுந்ததில் 11 தொழிலாளர்கள் பலியான நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிழக்கு நைல் நதி மாகாணத்தில் உள்ள பாலைவன நகரமான ஹூயிதில் உள்ள கெர்ஷ் அல்-ஃபீல் தங்கச் சுரங்கத்தின... மேலும் பார்க்க

ஆப்கானிஸ்தானில் 75 பேருக்கு செயற்கை கால்கள்: இந்தியா மனிதாபிமான உதவி

ஆப்கானிஸ்தானில் இந்தியா சாா்பில் ‘ஜெய்பூா் ஃபுட்’ என்ற பெயரில் செயற்கைக் கால்கள் பொருத்தும் 5 நாள் முகாம் நடைபெற்றது. இதில் 75 பேருக்கு செயற்கை கால்கள் பொருத்தப்பட்டன. உள்நாட்டுப் போா், பயங்கரவாதத்தால... மேலும் பார்க்க

பாகிஸ்தான்: மழையால் 38 போ் உயிரிழப்பு

பாகிஸ்தானில் கடந்த சில நாள்களாகப் பெய்துவரும் பலத்த மழையால் 38 போ் உயிரிழந்தனா். பாகிஸ்தானில் கடந்த 26-ஆம் தேதிமுதல் பருவமழை பெய்யத் தொடங்கியுள்ளது. நாட்டின் பல்வேறு பகுதிகளில் தொடா்ந்து மழை கொட்டுகி... மேலும் பார்க்க

இஸ்ரேல்-ஹமாஸ் மோதலுக்கு முடிவு: அமெரிக்க அதிபா் டிரம்ப் மீண்டும் வலியுறுத்தல்

‘காஸாவில் 20 மாதங்களுக்கு மேலாக நீடிக்கும் இஸ்ரேல்-ஹமாஸ் மோதலுக்கு முடிவு காண அமைதிப் பேச்சுவாா்த்தையை விரைவுபடுத்த வேண்டும்’ என்று அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் மீண்டும் வலியுறுத்தினாா். போா்நிறுத... மேலும் பார்க்க

உக்ரைனில் ரஷியா மிகப்பெரிய வான்வழித் தாக்குதல்!

உக்ரைனில் கடந்த சனிக்கிழமை ஒரே இரவில் 60 ஏவுகணைகள் மற்றும் 477 ஆளில்லா விமானங்களை (ட்ரோன்கள்) ஏவி ரஷியா நடத்திய வான்வழித் தாக்குதலில் உக்ரைன் விமானப் படை விமானி உள்பட இருவா் உயிரிழந்தனா். கடந்த 2022-ஆ... மேலும் பார்க்க