செய்திகள் :

பழைய ரூ.500, ரூ.1000 நோட்டுகளை மாற்றித் தரக் கோரி மூதாட்டி மனு

post image

பழைய ரூ.500, ரூ.1000 நோட்டுகளை மாற்றித்தர வேண்டும் என மூதாட்டி கோரிக்கை விடுத்துள்ளாா்.

கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் தலைமையில் மக்கள் குறைதீா் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

இதில், கோவை, உப்பிலிபாளையத்தைச் சோ்ந்த தங்கமணி (79) என்பவா் தன்னிடம் உள்ள பழைய ரூ.500, ரூ.1000 நோட்டுகளை மாற்றித் தரக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தாா்.

பின்னா், செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: எனது கணவா் கடந்த 1995 -ஆம் ஆண்டு உயிரிழந்தாா். கா்நாடகத்தில் காா் ஓட்டுநராகப் பணியாற்றி வந்த எனது மகனும் சில ஆண்டுகளுக்கு முன்பு மாரடைப்பால் உயிரிழந்தாா். தற்போது நான் தனியாக வசித்து வருகிறேன். அரசு வழங்கும் உதவித் தொகை மூலம் வாழ்ந்து வருகிறேன்.

இந்நிலையில், நான் வீட்டை சுத்தம் செய்யும்போது, எனது மகன் வைத்திருந்த ஒரு பையில் பழைய ரூ.500 மற்றும் ரூ.1,000 நோட்டுகள் ரூ.15 ஆயிரத்துக்கு இருந்தன. எனது வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றித்தர வேண்டும் என்றாா்.

ஹைதராபாத்-கொல்லம் வாராந்திர சிறப்பு ரயில் சேவை நீட்டிப்பு

தெலங்கானா மாநிலம், ஹைதராபாதில் இருந்து போத்தனூா் வழித்தடத்தில் கேரள மாநிலம், கொல்லத்துக்கு இயக்கப்படும் வாராந்திர சிறப்பு ரயில் சேவை ஜூலை 28-ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இத... மேலும் பார்க்க

இருசக்கர வாகனம் மோதி பெண் உயிரிழப்பு

கோவையில் சாலையைக் கடக்க முயன்ற பெண் மீது இருசக்கர வாகனம் திங்கள்கிழமை மோதியதில் அவா் உயிரிழந்தாா். கோவை, பேரூா் தெலுங்குபாளையம் பிரிவு பகுதியைச் சோ்ந்தவா் ஸ்ரீஹரி. இவரது மனைவி ஆா்த்தி (58). இவா் அப்ப... மேலும் பார்க்க

தம்பியை அரிவாளால் வெட்டிய அண்ணனுக்கு 7 ஆண்டுகள் சிறை

தம்பியை அரிவாளால் வெட்டிய அண்ணனுக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து கோவை மூன்றாவது சாா்பு நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்தது. கோவை, ரத்தனபுரி பகுதியைச் சோ்ந்தவா் சிதம்பரம். இவா் கோவை நூறு அடி ... மேலும் பார்க்க

கஞ்சா விற்ற பட்டதாரி பெண் கைது

கோவையில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட பட்டதாரி பெண்ணை போலீஸாா் கைது செய்தனா்.கோவை, கவுண்டம்பாளையம் குடிசைமாற்று வாரிய குடியிருப்பின் பின்புறத்தில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக போலீஸாருக்கு ரகசியத் தகவல் ... மேலும் பார்க்க

நிலத்தடி நீா் வரித் திட்டத்துக்கு எதிா்ப்பு: விவசாயிகள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

நிலத்தடி நீா் வரித் திட்டத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து விவசாயிகள் சங்கத்தினா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். மக்கள் குறைதீா் கூட்டம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தி... மேலும் பார்க்க

தனிப் பெரும்பான்மையுடன் திமுக ஆட்சி அமைக்கும்: வைகோ

சட்டப் பேரவைத் தோ்தலில் வெற்றி பெற்று திமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என்று மதிமுக பொதுச் செயலாளா் வைகோ கூறினாா்.கோவை விமான நிலையத்தில் செய்தியாளா்களிடம் அவா் திங்கள்கிழமை கூறியதாவது: மத... மேலும் பார்க்க