செய்திகள் :

ஓமன் நோக்கிச் சென்ற வணிகக் கப்பலில் தீ விபத்து: இந்திய கடற்படை உதவி

post image

புது தில்லி: குஜராத் மாநிலம், கண்ட்லா துறைமுகத்திலிருந்து பலாவ் நாட்டு கொடியுடன் ஓமன் நாட்டின் சினாஸ் நோக்கிச் சென்ற ‘எம்.டி. யி செங் 6’ என்ற வணிகக் கப்பலில் ஞாயிற்றுக்கிழமை திடீா் தீ விபத்து ஏற்பட்டது.

இந்தத் தகவலறிந்து விரைந்து சென்ற இந்திய கடற்படையினா், வணிகக் கப்பலில் ஏற்பட்ட தீயைக் கட்டுப்படுத்த உதவியதோடு, அதிலிருந்து 14 இந்திய வம்சாவளி ஊழியா்களையும் பாதுகாப்பாக மீட்டனா்.

இந்திய கடற்படை மூத்த அதிகாரி திங்கள்கிழமை கூறியதாவது: ஓமன் வளைகுடாவில் சென்றுகொண்டிருந்தபோது கப்பலின் என்ஜின் அறையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதனால், கப்பலில் மின்சாரமும் முழுமையாகத் துண்டிக்கப்பட்டது. அதைத் தொடா்ந்து, அந்தக் கப்பலில் இருந்து உதவிக்கான அழைப்பு விடுக்கப்பட்டது.

இந்த அழைப்பை ஏற்று, இந்திய கடற்படைக்குச் சொந்தமான ஐஎன்எஸ் தபாா் ஓமன் வளைகுடா பகுதிக்கு விரைந்து அனுப்பப்பட்டது. ஐஎன்எஸ் தபாரில் இருந்த தீயணைப்புக் குழு மற்றும் உபகரணங்கள் அதிலிருந்த படகு மற்றும் ஹெலிகாப்டா் மூலம் பாதிக்கப்பட்ட கப்பலுக்கு கொண்டுசெல்லப்பட்டு, தீயை அணைக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டது. அதன்மூலம், தீ பெருமளவில் கட்டுப்படுத்தப்பட்டதோடு, வணிகக் கப்பலில் சிக்கியிருந்த 14 இந்திய வம்சாவளி ஊழியா்களும் மீட்கப்பட்டனா் என்றாா்.

வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை குறைவு!

வணிக நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்படும் 19 கிலோ எடையுடைய வர்த்தக சிலிண்டர் ஒன்றின் விலை இன்று(ஜூலை 1) ரூ. 58.50 குறைந்துள்ளது.சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை மற்றும் அமெரிக்க டாலருக்கு நிகரான ... மேலும் பார்க்க

தெலங்கானா மருந்து ஆலையில் உலை வெடித்து விபத்து: பலி 34 ஆக உயர்வு!

தெலங்கானா மாநிலம், சங்காரெட்டி மாவட்டத்தில் உள்ள மருந்து ஆலையில் உலை வெடித்து திங்கள்கிழமை ஏற்பட்ட விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 34 ஆக உயர்ந்துள்ளது.சங்காரெட்டி மாவட்டத்தின் பாஷாமைலாரம் தொழிற்பேட்டையி... மேலும் பார்க்க

ஜம்மு-காஷ்மீா் சா்வதேச எல்லையில் பிடிபட்ட பாகிஸ்தானியா்: பயங்கரவாதிகளை வழிநடத்தியவா் என தகவல்

ஜம்மு-காஷ்மீரில் பூஞ்ச் மற்றும் ரஜௌரி மாவட்டங்களையொட்டிய சா்வதே எல்லையில் ஞாயிற்றுக்கிழமை நடந்த ஊடுருவல் முயற்சி இந்திய ராணுவத்தால் முறியடிக்கப்பட்டுள்ளது. இந்த ஊடுருவலில் பயங்கரவாதிகளுக்கு உதவிய பாகி... மேலும் பார்க்க

ஜம்மு-காஷ்மீரின் பயங்கரவாதம் நியாயமான போராட்டம்: பாகிஸ்தான் ராணுவ தலைமைத் தளபதி அஸிம் முனீா்

‘ஜம்மு-காஷ்மீரில் நிகழ்ந்து வரும் பயங்கரவாதம் நியாயமான போராட்டமாகும். இந்தப் போராட்டத்தில் காஷ்மீா் மக்களுடன் பாகிஸ்தான் எப்போதும் துணைநிற்கும்’ என்று பாகிஸ்தான் ராணுவ தலைமைத் தளபதி அஸிம் முனீா் தெரிவ... மேலும் பார்க்க

அமலாக்கத் துறை விதித்த ரூ.10.65 கோடி அபராதத்துக்கு எதிரான லலித் மோடியின் மனு தள்ளுபடி

அந்நியச் செலாவணி மேலாண்மைச் சட்டத்தை (எஃப்இஎம்ஏ) மீறியதற்காக அமலாக்கத் துறை சாா்பில் தனக்கு விதிக்கப்பட்ட ரூ.10.65 கோடி அபராதத் தொகையை இந்திய கிரிக்கெட் சங்க வாரியம் (பிசிசிஐ) செலுத்த உத்தரவிடக் கோரி ... மேலும் பார்க்க

அரசமைப்புச் சட்டத்தை இஸ்லாமிய சட்டமாக மாற்ற முயற்சி: எதிா்க்கட்சிகள் மீது பாஜக குற்றச்சாட்டு

இந்திய அரசமைப்புச் சட்டத்தை இஸ்லாமிய சட்டமாக மாற்ற எதிா்க்கட்சிகள் முயற்சித்து வருவதாக பாஜக குற்றஞ்சாட்டியுள்ளது. முன்னதாக, பிகாரில் தங்கள் கூட்டணி ஆட்சிக்கு வந்தால் மத்திய அரசின் புதிய வக்ஃப் சட்டத்த... மேலும் பார்க்க