செய்திகள் :

வியூக கூட்டணி: இந்தியா - அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் விரைவில்..!

post image

இந்தியா - அமெரிக்கா இடையிலான வர்த்தக ஒப்பந்தம் விரைவில் நடைபெறவிருப்பதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

இந்தோ - பசிபிக் பகுதியில் உள்ள நாடுகளில், அமெரிக்காவுக்கு மிகவும் முக்கிய நட்பு நாடுகளில் இந்தியா முக்கியமான நாடு என்பதை வெள்ளை மாளிகை மீண்டும் உறுதிபடுத்தியுள்ளது. இது புதுதில்லி - வாஷிங்டன் இடையிலான வர்த்தக ஒப்பந்தத்துக்கு துவக்கமாக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது.

கடந்த 27 ஆம் தேதி நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், “நாங்கள் எல்லோருடனும் வர்த்தக ஒப்பந்தங்களைச் செய்யப் போவதில்லை. ஆனால், நாங்கள் சில நாடுகளுடன் ஒப்பந்தங்களைச் செய்து கொள்கிறோம்.

ஒருவேளை இந்தியாவுடன் மிகப் பெரிய வர்த்தகம் மேற்கொள்ளப்படலாம்” எனத் தெரிவித்திருந்தார். அதைத் தற்போது வெள்ளை மாளிகை உறுதிசெய்துள்ளது.

குவாட் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக மத்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் அமெரிக்காவிற்குச் சென்றுள்ளார். இந்த நிலையில், இந்தியா - அமெரிக்கா இடையிலான வர்த்தக ஒப்பந்தம் தொடர்பான கருத்துகள் வெளியாகியிருக்கின்றன.

வெள்ளை மாளிகையில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் பேசிய செய்தித் தொடர்பாளர் கரோலின் லீவிட், “அமெரிக்கா-இந்தியா வர்த்தக ஒப்பந்தம் மிகவும் அருகில் உள்ளதாகவும், இறுதி அறிவிப்புகள் விரைவில் வெளிவரும்.

ஆசிய பசிபிக் பகுதியில் இந்தியா நட்பு நாடாக உள்ளது. மேலும் பிரதமர் மோடியுடன் அதிபர் டிரம்ப்புக்கு மிகச் சிறந்த உறவு உள்ளது. அவர் அந்த உறவை தொடர்ந்து கொண்டிருப்பார்” என்று கூறினார்.

Very strategic ally: White House says India-US trade deal announcement soon

Speaking at a press conference in the White House, Karoline Leavitt said the US-India trade deal is very close and final announcements will come soon.

இதையும் படிக்க... தெலங்கானா ரசாயன ஆலை விபத்து: பலி 34 ஆக உயர்வு!

சீன கம்யூனிஸ்ட் கட்சியில் உறுப்பினா் எண்ணிக்கை 10 கோடியைக் கடந்தது

பெய்ஜிங்: சீனாவில் ஆளும் சீன கம்யூனிஸ்ட் கட்சியில் (சிபிசி) 10 கோடிக்கு மேற்பட்ட உறுப்பினா்கள் உள்ளதாக திங்கள்கிழமை வெளியான அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. 1921, ஜூலை 1-இல் நிறுவப்பட்ட சிபிசி-யில் 2024... மேலும் பார்க்க

ஈரானின் எவின் சிறை மீதான இஸ்ரேலின் தாக்குதல் நினைத்தது ஒன்று; நடந்தது ஒன்று!

அயதுல்லா கமேனி தலைமையிலான ஈரான் அரசு தங்களுக்கு எதிராக அணு ஆயுதம் தயாரித்துவிடுமோ என்ற பயத்தில், அந்த அரசை வீழ்த்துவதற்காக இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் ஒன்று எவின் சிறைத் தாக்குதல். அரசியல் கைதிகள்,... மேலும் பார்க்க

சாா்க் கூட்டமைப்புக்கு மாற்று? சீனா-பாகிஸ்தான் புதிய திட்டம்!

‘சாா்க்’ கூட்டமைப்புக்கு மாற்றாக பிராந்திய அளவிலான புதிய கூட்டமைப்பை நிறுவ சீனா-பாகிஸ்தான் திட்டமிட்டு வருவதாக ஊடகங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன. அண்மையில் சீனாவின் குன்மிங் நகரில் சீனா-வங்கதேசம்-பாக... மேலும் பார்க்க

மேற்குக் கரை: இஸ்ரேல் ராணுவத் தளத்தை சூறையாடிய யூதா்கள்

டெல் அவிவ்: இஸ்ரேல் ஆக்கிரமிப்பில் உள்ள மேற்குக் கரையில், அந்நாட்டு ராணுவத் தளத்தை யூதா்கள் சூறையாடி ராணுவ வீரா்கள் மீது தாக்குதல் நடத்தினா். உலகில் யூதா்கள் பெரும்பான்மையாக உள்ள ஒரே நாடு இஸ்ரேல். கடந... மேலும் பார்க்க

அமெரிக்கா: துப்பாக்கிச்சூட்டில் 2 தீயணைப்பு வீரா்கள் உயிரிழப்பு

அமெரிக்காவின் வடக்குப் பகுதியில் உள்ள இடாஹோ மாகாணத்தின் தலைநகரான பொய்சியில் அடையாளம் தெரியாத நபா் ஞாயிற்றுக்கிழமை நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 2 தீயணைப்பு வீரா்கள் உயிரிழந்தனா். ஒருவா் காயமடைந்தாா். இ... மேலும் பார்க்க

ஈரான், ஜோர்டான், லெபனான், சிரியாவுக்கு மீண்டும் விமான சேவை: கத்தார்!

போர் நடைபெற்று வந்த ஈரானுக்கு மீண்டும் விமான சேவையைத் தொடங்குவதாக கத்தார் ஏர்வேஸ் அறிவித்துள்ளது. இதன்படி இன்று முதல் (ஜூன் 30) விமான சேவை மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.இதேபோன்று, மத்திய கிழக்கில் உள்ள ... மேலும் பார்க்க