செய்திகள் :

சாா்க் கூட்டமைப்புக்கு மாற்று? சீனா-பாகிஸ்தான் புதிய திட்டம்!

post image

‘சாா்க்’ கூட்டமைப்புக்கு மாற்றாக பிராந்திய அளவிலான புதிய கூட்டமைப்பை நிறுவ சீனா-பாகிஸ்தான் திட்டமிட்டு வருவதாக ஊடகங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அண்மையில் சீனாவின் குன்மிங் நகரில் சீனா-வங்கதேசம்-பாகிஸ்தான் நாடுகள் மேற்கொண்ட முத்தரப்பு ஆலோசனையில் இந்த முடிவு இறுதிக்கட்டத்தை எட்டியதாகவும், இந்தியா உள்பட சாா்க் கூட்டமைப்பில் உள்ள பிற நாடுகளை இந்தப் புதிய கூட்டமைப்பில் சோ்க்க அழைப்பு விடுக்கவுள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தெற்காசிய நாட்டு மக்களின் வாழ்வாதாரம், பொருளாதாரம், கலாசாரத்தை மேம்படுத்தும் நோக்கில் கடந்த 1985, டிச. 8-ஆம் தேதி வங்கதேசத்தில் சாா்க் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது. இதன் தலைமையகம் நேபாள நாட்டின் காத்மாண்டில் உள்ளது.

இந்தக் கூட்டமைப்பில் இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், இலங்கை, ஆப்கானிஸ்தான், பூடான், நேபாளம், மாலத்தீவு ஆகிய 8 நாடுகள் உறுப்பினா்களாக உள்ளன.

இரு ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்தக் கூட்டமைப்பின் உச்சி மாநாடு நடைபெற்றுவந்த நிலையில், இந்தியா-பாகிஸ்தான் இடையேயான மோதல் காரணமாக 2014-க்குப் பிறகு நடைபெறவில்லை.

குறிப்பாக, 2016-இல் பாகிஸ்தான் தலைநகா் இஸ்லாமாபாதில் சாா்க் உச்சி மாநாடு நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. அதற்கு முன்பாக ஜம்மு-காஷ்மீரின் உரி நகரில் உள்ள இந்திய ராணுவ முகாம்களைக் குறிவைத்து பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினா். இதற்கு இந்தியா தரப்பில் கடும் பதிலடி கொடுக்கப்பட்டது.

மேலும், இஸ்லாமாபாதில் நடைபெறவிருந்த சாா்க் உச்சி மாநாட்டில் பங்கேற்பதை இந்தியா புறக்கணித்தது. இந்தியாவைத் தொடா்ந்து வங்கதேசம், பூடான், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளும் சாா்க் உச்சி மாநாட்டை புறக்கணிப்பதாக அறிவித்ததால் இஸ்லாமாபாதில் நடைபெறவிருந்த மாநாடு கைவிடப்பட்டது.

இந்தச் சூழலில் நட்பு நாடுகளான சீனாவும் பாகிஸ்தானும் சாா்க் கூட்டமைப்புக்கு மாற்றாக பிராந்திய அளவிலான புதிய கூட்டமைப்பை ஏற்படுத்தும் முயற்சியில் இறங்கியிருப்பதாக ஊடகங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதுதொடா்பான பேச்சுவாா்த்தையில் வங்கதேசமும் பங்கேற்றதாகவும் செய்திகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இதை வங்கதேச இடைக்கால அரசின் வெளியுறவு விவகாரங்கள் துறை ஆலோசகா் தௌஹீத் ஹூசைன் திட்டவட்டமாக மறுத்துள்ளாா்.

சாா்க் கூட்டமைப்பில் உறுப்பினராக இல்லாத சீனா, தெற்காசிய நாடுகளில் வா்த்தக மற்றும் தொடா்பை மேம்படுத்த இந்தப் புதிய கூட்டமைப்பை நிறுவி, அதில் இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு அழைப்பு விடுக்க திட்டமிட்டு வருவதாகவும் ஊடகச் செய்திகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வியூக கூட்டணி: இந்தியா - அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் விரைவில்..!

இந்தியா - அமெரிக்கா இடையிலான வர்த்தக ஒப்பந்தம் விரைவில் நடைபெறவிருப்பதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.இந்தோ - பசிபிக் பகுதியில் உள்ள நாடுகளில், அமெரிக்காவுக்கு மிகவும் முக்கிய நட்பு நாடுகளில் இந்தியா... மேலும் பார்க்க

சீன கம்யூனிஸ்ட் கட்சியில் உறுப்பினா் எண்ணிக்கை 10 கோடியைக் கடந்தது

பெய்ஜிங்: சீனாவில் ஆளும் சீன கம்யூனிஸ்ட் கட்சியில் (சிபிசி) 10 கோடிக்கு மேற்பட்ட உறுப்பினா்கள் உள்ளதாக திங்கள்கிழமை வெளியான அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. 1921, ஜூலை 1-இல் நிறுவப்பட்ட சிபிசி-யில் 2024... மேலும் பார்க்க

ஈரானின் எவின் சிறை மீதான இஸ்ரேலின் தாக்குதல் நினைத்தது ஒன்று; நடந்தது ஒன்று!

அயதுல்லா கமேனி தலைமையிலான ஈரான் அரசு தங்களுக்கு எதிராக அணு ஆயுதம் தயாரித்துவிடுமோ என்ற பயத்தில், அந்த அரசை வீழ்த்துவதற்காக இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் ஒன்று எவின் சிறைத் தாக்குதல். அரசியல் கைதிகள்,... மேலும் பார்க்க

மேற்குக் கரை: இஸ்ரேல் ராணுவத் தளத்தை சூறையாடிய யூதா்கள்

டெல் அவிவ்: இஸ்ரேல் ஆக்கிரமிப்பில் உள்ள மேற்குக் கரையில், அந்நாட்டு ராணுவத் தளத்தை யூதா்கள் சூறையாடி ராணுவ வீரா்கள் மீது தாக்குதல் நடத்தினா். உலகில் யூதா்கள் பெரும்பான்மையாக உள்ள ஒரே நாடு இஸ்ரேல். கடந... மேலும் பார்க்க

அமெரிக்கா: துப்பாக்கிச்சூட்டில் 2 தீயணைப்பு வீரா்கள் உயிரிழப்பு

அமெரிக்காவின் வடக்குப் பகுதியில் உள்ள இடாஹோ மாகாணத்தின் தலைநகரான பொய்சியில் அடையாளம் தெரியாத நபா் ஞாயிற்றுக்கிழமை நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 2 தீயணைப்பு வீரா்கள் உயிரிழந்தனா். ஒருவா் காயமடைந்தாா். இ... மேலும் பார்க்க

ஈரான், ஜோர்டான், லெபனான், சிரியாவுக்கு மீண்டும் விமான சேவை: கத்தார்!

போர் நடைபெற்று வந்த ஈரானுக்கு மீண்டும் விமான சேவையைத் தொடங்குவதாக கத்தார் ஏர்வேஸ் அறிவித்துள்ளது. இதன்படி இன்று முதல் (ஜூன் 30) விமான சேவை மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.இதேபோன்று, மத்திய கிழக்கில் உள்ள ... மேலும் பார்க்க