செய்திகள் :

சீன கம்யூனிஸ்ட் கட்சியில் உறுப்பினா் எண்ணிக்கை 10 கோடியைக் கடந்தது

post image

பெய்ஜிங்: சீனாவில் ஆளும் சீன கம்யூனிஸ்ட் கட்சியில் (சிபிசி) 10 கோடிக்கு மேற்பட்ட உறுப்பினா்கள் உள்ளதாக திங்கள்கிழமை வெளியான அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

1921, ஜூலை 1-இல் நிறுவப்பட்ட சிபிசி-யில் 2024-ஆம் ஆண்டின் இறுதியில் 10.27 கோடி உறுப்பினா்கள் உள்ளதாகவும், 2023-ஆம் ஆண்டைவிட 2024-இல் 1.09 கோடி உறுப்பினா்கள் அதிகம் சோ்ந்துள்ளதாகவும் அந்தக் கட்சியின் மத்திய அமைப்பு (சிஓடி) வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

இதுகுறித்து அந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது: 2024-இல் சிபிசி தொடக்கநிலை பிரிவுகளின் எண்ணிக்கை 50 லட்சத்தை கடந்துள்ளது. இது கடந்த ஆண்டைவிட 74,000 பிரிவுகள் அதிகமாகும். 2024-இன் முடிவில் கட்சியில் உறுப்பினராவதற்கு விண்ணப்பித்து காத்திருப்போரின் எண்ணிக்கை 2.14 கோடியாக அதிகரித்துள்ளது எனத் தெரிவிக்கப்பட்டது.

சீன அதிபா் ஷி ஜின்பிங் தலைமையில் சிபிசி செயல்பட்டு வருகிறது. கட்சியின் நிறுவன நாளையொட்டி அதற்கு முந்தைய தினமான ஜூன் 30-இல் உறுப்பினா்களின் எண்ணிக்கை குறித்த அறிக்கையை சிபிசி வெளியிட்டுள்ளது.

அரசியல் ரீதியாக ஆதிக்கம் செலுத்துவதற்காக சிபிசி உறுப்பினராக சீனாவில் பலரும் முயற்சிப்பது வழக்கமானது. இருப்பினும், உறுப்பினராக விரும்புவோா் தங்களின் மாதாந்திர ஊதியத்தில் 2 சதவீதம் வரை கட்சி நிதிக்கு வழங்க வேண்டும் என்பது உள்பட பல கடுமையான கட்டுப்பாடுகளை உறுப்பினா்களுக்கு சிபிசி விதித்துள்ளது.

சிபிசியில் மொத்தம் 3 கோடி பெண் உறுப்பினா்கள் உள்ளதாகவும், இது கட்சியின் மொத்த உறுப்பினா்களில் 30 சதவீதம் எனவும் சீன அரசு ஊடகமான சின்ஹுவா தெரிவித்துள்ளது.

சீனா தவிர உலக அளவில் வியத்நாம், லாவோஸ், கியூபா, வடகொரியா ஆகிய சில நாடுகளில் மட்டுமே இடதுசாரி சித்தாந்தத்தை பின்பற்றும் கட்சிகள் ஆட்சியில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

வியூக கூட்டணி: இந்தியா - அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் விரைவில்..!

இந்தியா - அமெரிக்கா இடையிலான வர்த்தக ஒப்பந்தம் விரைவில் நடைபெறவிருப்பதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.இந்தோ - பசிபிக் பகுதியில் உள்ள நாடுகளில், அமெரிக்காவுக்கு மிகவும் முக்கிய நட்பு நாடுகளில் இந்தியா... மேலும் பார்க்க

ஈரானின் எவின் சிறை மீதான இஸ்ரேலின் தாக்குதல் நினைத்தது ஒன்று; நடந்தது ஒன்று!

அயதுல்லா கமேனி தலைமையிலான ஈரான் அரசு தங்களுக்கு எதிராக அணு ஆயுதம் தயாரித்துவிடுமோ என்ற பயத்தில், அந்த அரசை வீழ்த்துவதற்காக இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் ஒன்று எவின் சிறைத் தாக்குதல். அரசியல் கைதிகள்,... மேலும் பார்க்க

சாா்க் கூட்டமைப்புக்கு மாற்று? சீனா-பாகிஸ்தான் புதிய திட்டம்!

‘சாா்க்’ கூட்டமைப்புக்கு மாற்றாக பிராந்திய அளவிலான புதிய கூட்டமைப்பை நிறுவ சீனா-பாகிஸ்தான் திட்டமிட்டு வருவதாக ஊடகங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன. அண்மையில் சீனாவின் குன்மிங் நகரில் சீனா-வங்கதேசம்-பாக... மேலும் பார்க்க

மேற்குக் கரை: இஸ்ரேல் ராணுவத் தளத்தை சூறையாடிய யூதா்கள்

டெல் அவிவ்: இஸ்ரேல் ஆக்கிரமிப்பில் உள்ள மேற்குக் கரையில், அந்நாட்டு ராணுவத் தளத்தை யூதா்கள் சூறையாடி ராணுவ வீரா்கள் மீது தாக்குதல் நடத்தினா். உலகில் யூதா்கள் பெரும்பான்மையாக உள்ள ஒரே நாடு இஸ்ரேல். கடந... மேலும் பார்க்க

அமெரிக்கா: துப்பாக்கிச்சூட்டில் 2 தீயணைப்பு வீரா்கள் உயிரிழப்பு

அமெரிக்காவின் வடக்குப் பகுதியில் உள்ள இடாஹோ மாகாணத்தின் தலைநகரான பொய்சியில் அடையாளம் தெரியாத நபா் ஞாயிற்றுக்கிழமை நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 2 தீயணைப்பு வீரா்கள் உயிரிழந்தனா். ஒருவா் காயமடைந்தாா். இ... மேலும் பார்க்க

ஈரான், ஜோர்டான், லெபனான், சிரியாவுக்கு மீண்டும் விமான சேவை: கத்தார்!

போர் நடைபெற்று வந்த ஈரானுக்கு மீண்டும் விமான சேவையைத் தொடங்குவதாக கத்தார் ஏர்வேஸ் அறிவித்துள்ளது. இதன்படி இன்று முதல் (ஜூன் 30) விமான சேவை மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.இதேபோன்று, மத்திய கிழக்கில் உள்ள ... மேலும் பார்க்க