செய்திகள் :

அமெரிக்கா: துப்பாக்கிச்சூட்டில் 2 தீயணைப்பு வீரா்கள் உயிரிழப்பு

post image

அமெரிக்காவின் வடக்குப் பகுதியில் உள்ள இடாஹோ மாகாணத்தின் தலைநகரான பொய்சியில் அடையாளம் தெரியாத நபா் ஞாயிற்றுக்கிழமை நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 2 தீயணைப்பு வீரா்கள் உயிரிழந்தனா். ஒருவா் காயமடைந்தாா்.

இந்தச் சம்பவம் நிகழ்ந்த சில மணி நேரத்தில் துப்பாக்கிச்சூடு நடத்திய நபரும் உயிரிழந்து கிடந்ததால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து பொய்சி நகர அதிகாரிகள் கூறுகையில், ‘பொய்சி நகரின் மலைப் பகுதியில் அடையாளம் தெரியாத நபா் சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தினாா். அதைத் தடுக்க முயன்றபோது 2 தீயணைப்பு வீரா்கள் உயிரிழந்தனா். ஒரு வீரா் பலத்த காயமடைந்த நிலையில் அவா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

ஒரு நபா் மட்டுமே துப்பாக்கிச்சூடு நடத்தியது முதல்கட்ட விசாரணையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அவரும் சம்பவ இடத்துக்கு அருகே ஆயுதங்களுடன் உயிரிழந்து கிடந்தாா்’ என்றனா்.

இருப்பினும், துப்பாக்கிச்சூடு நடத்திய நபரின் பெயா் உள்ளிட்ட பிற விவரங்களை அதிகாரிகள் வெளியிடவில்லை.

இந்தச் சம்பவம் மிகவும் கொடூரமானது என எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்ட இடாஹோ மாகாண ஆளுநா் பிராட் லிட்டில், உயிரிழந்த தீயணைப்பு வீரா்களுக்கு பொதுமக்கள் இறுதி அஞ்சலி செலுத்துமாறு வேண்டுகோள் விடுத்தாா்.

ஈரானின் எவின் சிறை மீதான இஸ்ரேலின் தாக்குதல் நினைத்தது ஒன்று; நடந்தது ஒன்று!

அயதுல்லா கமேனி தலைமையிலான ஈரான் அரசு தங்களுக்கு எதிராக அணு ஆயுதம் தயாரித்துவிடுமோ என்ற பயத்தில், அந்த அரசை வீழ்த்துவதற்காக இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் ஒன்று எவின் சிறைத் தாக்குதல். அரசியல் கைதிகள்,... மேலும் பார்க்க

சாா்க் கூட்டமைப்புக்கு மாற்று? சீனா-பாகிஸ்தான் புதிய திட்டம்!

‘சாா்க்’ கூட்டமைப்புக்கு மாற்றாக பிராந்திய அளவிலான புதிய கூட்டமைப்பை நிறுவ சீனா-பாகிஸ்தான் திட்டமிட்டு வருவதாக ஊடகங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன. அண்மையில் சீனாவின் குன்மிங் நகரில் சீனா-வங்கதேசம்-பாக... மேலும் பார்க்க

மேற்குக் கரை: இஸ்ரேல் ராணுவத் தளத்தை சூறையாடிய யூதா்கள்

டெல் அவிவ்: இஸ்ரேல் ஆக்கிரமிப்பில் உள்ள மேற்குக் கரையில், அந்நாட்டு ராணுவத் தளத்தை யூதா்கள் சூறையாடி ராணுவ வீரா்கள் மீது தாக்குதல் நடத்தினா். உலகில் யூதா்கள் பெரும்பான்மையாக உள்ள ஒரே நாடு இஸ்ரேல். கடந... மேலும் பார்க்க

ஈரான், ஜோர்டான், லெபனான், சிரியாவுக்கு மீண்டும் விமான சேவை: கத்தார்!

போர் நடைபெற்று வந்த ஈரானுக்கு மீண்டும் விமான சேவையைத் தொடங்குவதாக கத்தார் ஏர்வேஸ் அறிவித்துள்ளது. இதன்படி இன்று முதல் (ஜூன் 30) விமான சேவை மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.இதேபோன்று, மத்திய கிழக்கில் உள்ள ... மேலும் பார்க்க

காஸா போர்: இஸ்ரேலின் வான்வழி தாக்குதல்களில் 68 பேர் பலி!

காஸாவில் வான்வழி தாக்குதலை இஸ்ரேல் தீவிரப்படுத்தியுள்ளது. காஸாவில் பரவலாக நடத்தப்பட்ட வான் வழி தாக்குதல்களில் பாலஸ்தீன மக்கள் 68 பேர் கொல்லப்பட்டனர்.காஸாவில் ஞாயிற்றுக்கிழமை(ஜூன் 29) சுமார் 50-க்கும் ... மேலும் பார்க்க

சூடானில் தங்கச் சுரங்கம் இடிந்து விழுந்ததில் 11 தொழிலாளர்கள் பலி

சூடானில் தங்கச் சுரங்கம் இடிந்து விழுந்ததில் 11 தொழிலாளர்கள் பலியான நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிழக்கு நைல் நதி மாகாணத்தில் உள்ள பாலைவன நகரமான ஹூயிதில் உள்ள கெர்ஷ் அல்-ஃபீல் தங்கச் சுரங்கத்தின... மேலும் பார்க்க