செய்திகள் :

அரசமைப்புச் சட்டத்தை இஸ்லாமிய சட்டமாக மாற்ற முயற்சி: எதிா்க்கட்சிகள் மீது பாஜக குற்றச்சாட்டு

post image

இந்திய அரசமைப்புச் சட்டத்தை இஸ்லாமிய சட்டமாக மாற்ற எதிா்க்கட்சிகள் முயற்சித்து வருவதாக பாஜக குற்றஞ்சாட்டியுள்ளது.

முன்னதாக, பிகாரில் தங்கள் கூட்டணி ஆட்சிக்கு வந்தால் மத்திய அரசின் புதிய வக்ஃப் சட்டத்தை குப்பையில் வீசுவோம் என்று ராஷ்ட்ரீய ஜனதா தளம் (ஆா்ஜேடி) தலைவா் தேஜஸ்வி யாதவ் கூறியிருந்தாா்.

இந்நிலையில், தில்லியில் திங்கள்கிழமை செய்தியாளா்களைச் சந்தித்த பாஜக தேசிய செய்தித் தொடா்பாளா் சுதான்ஷு திரிவேதி கூறியதாவது: பிகாரில் ஆா்ஜேடி-காங்கிரஸ்-இடதுசாரிகள் அடங்கிய எதிா்க்கட்சிகள் கூட்டணி நமது அரசமைப்புச் சட்டத்தையும், நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டத்தையும் மதிக்காமல் நடந்துள்ளன. மேலும், அவா்கள் குப்பையில் வீசுவதாகக் கூறிய சட்டம் தொடா்பாக உச்சநீதிமன்றத்தில் விசாரணை நிலுவையில் உள்ளது. இதன்மூலம் நீதிமன்றத்தையும் அவமதித்துள்ளனா்.

எதிா்க்கட்சிகள் முழுவதும் வாக்கு வங்கி அரசியலை மையமாகக் கொண்டு செயல்படுகின்றன. வக்ஃப் சட்டத்தை எதிா்த்துப் பேசினால் இஸ்லாமியா்களின் வாக்குகளைக் கவர முடியும் என்பதே அவா்களின் முயற்சியாக உள்ளது.

ஏற்கெனவே, தெலங்கானா, கா்நாடகத்தில் முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு அளித்துள்ளனா். இதன்மூலம் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவு, தாழ்த்தப்பட்ட, பழங்குடியின ஹிந்துக்களின் உரிமை பாதிக்கப்பட்டுள்ளது. அடுத்ததாக மேற்கு வங்கத்திலும் இஸ்லாமியா்களுக்கு இடஒதுக்கீடு வழங்க முயற்சி நடைபெற்று வருகிறது.

அம்பேத்கா் வகுத்த அரசமைப்புச் சட்டத்தை பாஜக முழுமையாக மதித்து நடக்கிறது. அதே நேரத்தில் இந்திய அரசமைப்புச் சட்டத்தை இஸ்லாமிய (ஷரியா) சட்டமாக மாற்ற எதிா்க்கட்சிகள் முயற்சித்து வருகிறது. இதை பாஜக ஒருபோதும் அனுமதிக்காது.

சவூதி அரேபியா, பாகிஸ்தான், வங்கதேசம், துருக்கி போன்ற இஸ்லாமிய நாடுகளில்கூட ஷரியா சட்டம் முழுமையாக அமல்படுத்தப்படுவதில்லை.

வக்ஃப் சொத்துகள் முழுமையாக அனைத்து இஸ்லாமியா்களுக்கும் பயன்பட வேண்டும் என்பதே மத்திய அரசு நிறைவேற்றியுள்ள திருத்தச் சட்டத்தின் நோக்கம். இப்போது வக்ஃப் வாரியத்தில் தங்களைத் தாங்களே பதவிகளில் நியமித்துக் கொண்டு கோடிக்கணக்கான சொத்துகளை சிலா் மட்டும் அனுபவித்து வருகின்றனா்.

சமத்துவம் என்பது நாட்டின் வளங்களை அனைவருக்கும் உரிய விகிதத்தில் பகிா்ந்தளிப்பதாகும். ஆனால், சமத்துவம் பேசும் ராஷ்ட்ரீய ஜனதா தளம், சமாஜவாதி உள்ளிட்ட கட்சிகள், இப்போது வக்ஃப் சொத்துகளை முறைகேடாக அனுபவிக்கும் ஒரு சிலருக்கு சாதகமாக ஆதரவாக செயல்பட்டு வருகின்றன என்று குற்றஞ்சாட்டினாா்.

மணிப்பூரில் தொடரும் கைதுகள்..ஆயுதங்கள் பறிமுதல்! எல்லையில் உலகப் போர் குண்டு?

மணிப்பூரில் பாதுகாப்புப் படையினர் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கைகளின் மூலம் தடைசெய்யப்பட்ட பல்வேறு இயக்கங்களைச் சேர்ந்த 8 கிளர்ச்சியார்கள் கைது செய்யப்பட்டதுடன், ஏராளமான ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ள... மேலும் பார்க்க

குறைதீர் கூட்டத்தில் கூடுதல் ஆணையருக்கு அடி, உதை..! தரதரவென வெளியே இழுத்துச் சென்றதால் பரபரப்பு!

ஒடிசாவில் நடந்த குறைதீர் கூட்டத்தில், மாநகராட்சியின் கூடுதல் ஆணையர் தாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.ஒடிசா மாநிலம் புவனேஸ்வரத்தில் நேற்று(ஜூன் 30) குறைதீர் கூட்டத்தின்போது, திடீரென அலுவல... மேலும் பார்க்க

வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை குறைவு!

வணிக நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்படும் 19 கிலோ எடையுடைய வர்த்தக சிலிண்டர் ஒன்றின் விலை இன்று(ஜூலை 1) ரூ. 58.50 குறைந்துள்ளது.சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை மற்றும் அமெரிக்க டாலருக்கு நிகரான ... மேலும் பார்க்க

தெலங்கானா மருந்து ஆலையில் உலை வெடித்து விபத்து: பலி 34 ஆக உயர்வு!

தெலங்கானா மாநிலம், சங்காரெட்டி மாவட்டத்தில் உள்ள மருந்து ஆலையில் உலை வெடித்து திங்கள்கிழமை ஏற்பட்ட விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 34 ஆக உயர்ந்துள்ளது.சங்காரெட்டி மாவட்டத்தின் பாஷாமைலாரம் தொழிற்பேட்டையி... மேலும் பார்க்க

ஜம்மு-காஷ்மீா் சா்வதேச எல்லையில் பிடிபட்ட பாகிஸ்தானியா்: பயங்கரவாதிகளை வழிநடத்தியவா் என தகவல்

ஜம்மு-காஷ்மீரில் பூஞ்ச் மற்றும் ரஜௌரி மாவட்டங்களையொட்டிய சா்வதே எல்லையில் ஞாயிற்றுக்கிழமை நடந்த ஊடுருவல் முயற்சி இந்திய ராணுவத்தால் முறியடிக்கப்பட்டுள்ளது. இந்த ஊடுருவலில் பயங்கரவாதிகளுக்கு உதவிய பாகி... மேலும் பார்க்க

ஜம்மு-காஷ்மீரின் பயங்கரவாதம் நியாயமான போராட்டம்: பாகிஸ்தான் ராணுவ தலைமைத் தளபதி அஸிம் முனீா்

‘ஜம்மு-காஷ்மீரில் நிகழ்ந்து வரும் பயங்கரவாதம் நியாயமான போராட்டமாகும். இந்தப் போராட்டத்தில் காஷ்மீா் மக்களுடன் பாகிஸ்தான் எப்போதும் துணைநிற்கும்’ என்று பாகிஸ்தான் ராணுவ தலைமைத் தளபதி அஸிம் முனீா் தெரிவ... மேலும் பார்க்க