செய்திகள் :

பழனி : திருமண மண்டபம் கட்ட வெளியான அரசாணைக்கு உயர் நீதிமன்றம் இடைக்கால தடை - நடந்தது என்ன?

post image

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில் நிதியில் திருமண மண்டபம் கட்டுவதற்கு தமிழக அரசு வெளியிட்ட அரசாணைக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

மதுரையைச் சேர்ந்த இந்து சமயப் பிரசாரகர் ராம ரவிக்குமார் என்பவர், "இந்து சமய அறக்கொடைகள் சட்டத்தில் பிரிவு 66-ல் கோயிலின் உபரிநிதியை இந்து ஆகம விதிகளைக் கற்றுக் கொடுக்கவும் நலிவடைந்த கோவில்களை மேன்மை அடைய செய்யும் பணிகளுக்குப் பயன்படுத்த வேண்டும் என்று சொல்லியுள்ளது.

ஆனால் அதற்கு மாறாக தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்த பிறகுப் பல கோயிலில் உள்ள உபரி நிதிகளை எடுத்து ஆங்காங்கே திருமண மண்டபங்கள் கட்டுவது வணிக வளாகங்கள் கட்டுவது ரிசார்ட்டுகள் கட்டுவதற்குப் பயன்படுத்த நினைக்கின்றனர்.

பழநி முருகன் கோயில்
பழனி முருகன் கோயில்

தமிழக சட்டமன்றம் வெளியிட்டுள்ள அரசாணையின்படி பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலுக்குச் சொந்தமான ரெட்டியார்சத்திரம் கொத்தபுள்ளி என்ற கிராமத்தில் 9 கோடி 80 லட்சம் செலவில் கல்யாண மண்டபம் கட்ட இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அவர்களின் துறை ரீதியான அனுமதி வழங்கப்பட்டு, ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் ஐ. பெரியசாமி, பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் அறங்காவலர் குழுத் தலைவர் சுப்பிரமணியம் உள்ளிட்ட பலர் முன்னிலையில் பூமி பூஜை போடப்பட்டது

மண்டபம் கட்டுவதற்கு பூமி பூஜை போட்ட போது

இதற்கு முன்னதாக சென்னை உயர் நீதிமன்றம் திருக்கோயில் நிதியை தவறாக செலவு செய்யக் கூடாது எனவும், திருக்கோயில்களில் நிதி இருக்கிறது என்பதற்காக திருமண மண்டபம் கட்டுவது, வணிக வளாகங்கள் கட்டுவது போன்றவை தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்தி விடும் என்று அதற்கு தடை போட்டது.

அந்த தடையை நீக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு இந்து சமய அறநிலைத்துறை மேல்முறையீடு செய்து மனு தாக்கல் செய்த போது, சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பின் தலையிட முடியாது என்று இந்துசமய அறநிலையத்துறையின் மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது .

ராம ரவிக்குமார்

மேற்படி உத்தரவுகளின் படி தமிழக அரசின் அரசாணையை எதிர்த்து தாக்கல் செய்த மனு மதுரை உயர் நீதிமன்ற அமர்வு நீதிபதிகள் எஸ்.எம் சுப்பிரமணியம் மற்றும் மரியா கிளாட் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்த போது மனுவை பரிசீலனை செய்த உயர் நீதிமன்றம், "பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் நிதியிலிருந்து 9 கோடி 80 லட்சம் ரூபாயில் கல்யாண மண்டபம் கட்டும் தமிழக அரசின் அரசாணைக்கு இடைக்கால தடைவிதித்து’ வழக்கை ஒத்தி வைத்தது’ என்றார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY

'130 கோடி பேரை ரயில் பயணத்திலிருந்து வெளியேற்றியது பாஜக அரசு' - எம்.பி சு.வெங்கடேஷன் சொல்வது என்ன?

எம்.பி சு.வெங்கடேஷன் இரயில் கட்டண உயர்வை விமர்சித்து தனது எக்ஸ் தளப்பக்கத்தில் பதிவு ஒன்றைப் பதிவிட்டிருக்கிறார்.அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், “ இன்று முதல் கட்டண உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இது க... மேலும் பார்க்க

Tatkal Ticket, பான் கார்டு, ஆதார் கார்டு, கிரெடிட் கார்டு... இன்று முதல் அமலாகும் விதிகள் என்னென்ன?

பான் கார்டு, அதார் கார்டு என மத்திய அரசில் இன்று முதல் அமலாக உள்ள 6 விஷயங்களைப் பார்க்கலாம்... வாங்க...1. ஒவ்வொரு ஆண்டும், வருமான வரி தாக்கலின் கடைசித் தேதி ஜூலை 31 ஆக இருக்கும். ஆனால், இந்த ஆண்டு வரு... மேலும் பார்க்க

"ரூ.100 கோடி பிராஜெக்ட்; விபத்துக்காகவே ஒரு சாலை..." - மரங்களை நடுவே அப்படியே விட்டு போடப்பட்ட சாலை!

பீகாரில் ரூ. 100 கோடி மதிப்பிலான சாலை விரிவாக்க திட்டத்தின் ஒருபகுதியாக மாவட்ட நிர்வாகம், தலைநகர் பாட்னாவிலிருந்து 50 கி.மீ தொலைவிலுள்ள ஜெகனாபாத்தில் சாலையின் நடுவே உள்ள விபத்து ஏற்படும் வகையில் இருக்... மேலும் பார்க்க

நீலகிரி: சுடுகாடு கேட்ட நபர், `வீடு கட்டிக்கொடுக்கும் திட்டம் இல்லை'- அதிகாரிகள் குதர்க்கமான‌ பதில்!

நீலகிரி மாவட்டம், குந்தா தாலுகாவிற்கு உட்பட்ட மஞ்சூரை அடுத்து தொட்டக்கொம்பை, பாரதிநகர், சேரனூர் உள்ளிட்ட பல கிராமங்கள் உள்ளன. ஏழை எளிய மக்கள் வாழ்ந்து வரும் இந்த பகுதியில் முறையான மயானம் கிடையாது என்ப... மேலும் பார்க்க

கடலூர்: `அலட்சிய சிகிச்சை... முறையிட்டால் மிரட்டல்!' - அரசு மருத்துவரிடம் விசாரணை!

கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் அமைந்துள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு சிறு காயங்களுடன் சிறுவன் ஒருவர் அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். சிறுவனை பரிசோதித்து, மருத்துவர் வழங... மேலும் பார்க்க