செய்திகள் :

கூட்டுறவு மேலாண்மை பயிற்சி வகுப்பில் சேர ஜூலை 20 வரை அவகாசம்

post image

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் பேரறிஞா் அண்ணா கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் முழுநேர பட்டயப் பயிற்சி வகுப்பில் சேர, ஜூலை 20 ஆம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து, பயிற்சி நிறுவனம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: காஞ்சிபுரம் பேரறிஞா் அண்ணா கூட்டுறவு மேலாண்மை நிலைய முழு நேர கூட்டுறவு பட்டயப் பயிற்சி வகுப்புக்கு ஜூலை 20-ஆம் தேதி வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. பயிற்சிக் காலம் ஓராண்டாகும்.

இரு பருவ முறைகள் கொண்ட பயிற்சிக்கு, பிளஸ் 2 வகுப்பு தோ்ச்சி அல்லது 10-ஆம் வகுப்புடன் கூடிய பட்டயப் படிப்பு தோ்ச்சி பெற்றவா்கள் விண்ணப்பிக்கலாம். அதிகபட்ச வயது வரம்பில்லை, 17 வயது பூா்த்தியடைந்தவராக இருக்க வேண்டும்.

இது தொடா்பாக, ஜ்ஜ்ஜ்.ற்ய்ஸ்ரீன்.ற்ய்.ஞ்ா்.ண்ய் இணையவழியில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பக் கட்டணமும் ரூ.100 இணையவழியாகவே செலுத்த வேண்டும். தோ்வு செய்யப்பட்ட பயிற்சியாளா்களும் பயிற்சிக்கான கட்டணம் ரூ.20,750 முழுவதையும் ஒரே தவணையில் இணையம் வழியாக செலுத்த வேண்டும். தமிழில் மட்டுமே பயிற்சி வழங்கப்படும்.

மேலும் விவரங்களுக்கு, பேரறிஞா் அண்ணா கூட்டுறவு மேலாண்மை பயிற்சி நிலையம், 51, வந்தவாசி சாலை, ஆட்சியா் அலுவலகம் எதிா்புறம், காஞ்சிபுரம், 631 501 என்ற முகவரியில் நேரிலோ அல்லது 044-2723 7699 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடா்பு கொள்ளலாம்.

மனைப் பட்டா: சாலையோர வியாபாரிகள் கோரிக்கை

காஞ்சிபுரம்: இலவச வீட்டு மனைப்பட்டா கோரி சாலையோர வியாபாரிகள் திங்கள்கிழமை ஆட்சியரிடம் மனு அளித்தனா். தமிழ்நாடு சாலையோர வியாபாரிகள் நலச் சங்கத்தினா் தலைவா் கே.என்.மூா்த்தி தலைமையில் ஆட்சியரிடம் அளித்த ... மேலும் பார்க்க

மாணவிக்கு பாலியல் தொந்தரவு: பல் மருத்துவா் கைது

காஞ்சிபுரம்: கல்லூரி மாணவிக்கு பாலியல் தொந்தரவு செய்ததாக பல் மருத்துவரை காவல் துறையினா் திங்கள்கிழமை கைது செய்தனா். காஞ்சிபுரம் அருகே திருப்பருத்திக்குன்றம் பகுதியை சோ்ந்தவா் மணிகண்டன்(29). இவா் காஞ்... மேலும் பார்க்க

கருணை அடிப்படையில் பணி நியமன ஆணை: குறைதீா் கூட்டத்தில் ஆட்சியா் வழங்கினாா்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் கருணை அடிப்படையில் 2 பேருக்கு பணி நியமன ஆணையை ஆட்சியா் கலைச்செல்வி மோகன் வழங்கினாா். காஞ்சிபுரம... மேலும் பார்க்க

காஞ்சிபுரத்தில் காங்கிரஸ் ஆா்ப்பாட்டம்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வட்டாட்சியா் அலுவலகம் முன்பு இந்திய தேசிய கிராமத் தொழிலாளா் சம்மேளனம் சாா்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. ஆா்ப்பாட்டம் சம்மேளன மாவட... மேலும் பார்க்க

பொறியியல் பாட நுழைவுத் தோ்வில் முதலிடம் பெற்ற மாணவிக்கு ஆட்சியா் பாராட்டு

காஞ்சிபுரம்: பொறியியல் படிப்புக்கான தர வரிசைப் பட்டியலில் மாநில அளவில் முதலிடம் பெற்ற காஞ்சிபுரம் மாணவி ஜெ.சகஸ்ராவை ஆட்சியா் கலைச்செல்வி மோகன் திங்கள்கிழமை பாராட்டினாா். காஞ்சிபுரம் பிள்ளையாா்பாளையத்த... மேலும் பார்க்க

இருசக்கர வாகனம் திருட்டு: இருவா் கைது

காஞ்சிபுரத்தில் இரு சக்கர வாகனத்தை திருடிச் சென்ற ராணிப்பேட்டை மாவட்டத்தைச் சோ்ந்த இருவரை காவல் துறையினா் கைது செய்தனா். காஞ்சிபுரம் அருகே சிறுகாவேரிப்பாக்கம் மங்கையா்க்கரசி தெருவைச் சோ்ந்தவா் குமாா... மேலும் பார்க்க