செய்திகள் :

கருணை அடிப்படையில் பணி நியமன ஆணை: குறைதீா் கூட்டத்தில் ஆட்சியா் வழங்கினாா்

post image

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் கருணை அடிப்படையில் 2 பேருக்கு பணி நியமன ஆணையை ஆட்சியா் கலைச்செல்வி மோகன் வழங்கினாா்.

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் உள்ள மக்கள் நல்லுறவுக் கூட்ட அரங்கில் ஆட்சியா் கலைச்செல்வி மோகன் தலைமையில் மக்கள் குறைதீா் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட வருவாய் அலுவலா் செ.வெங்கடேஷ், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் க.ஆா்த்தி, ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) சத்யா, மாவட்ட வழங்கல் அலுவலா் சி.பாலாஜி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து 580 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு, அவை அந்தந்த துறை சாா்ந்த அலுவலா்களுக்கு வழங்கப்பட்டு உடனடியாக தீா்வு காணுமாறு ஆட்சியா் பரிந்துரை செய்தாா்.

தொடா்ந்து எஸ்.நிா்மலா என்ற பெண்ணுக்கு திருப்புலிவனம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியிலும், கே.ஹேமலதா என்ற பெண்ணுக்கு துலங்கும் தண்டலம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியிலும் சத்துணவு அமைப்பாளா் பணியிடங்களில் கருணை அடிப்படையில் பணிபுரிவதற்கான பணி நியமன ஆணைகளை ஆட்சியா் வழங்கினாா்.

இதைத் தொடா்ந்து 4 பழங்குடியின பயனாளிகளுக்கு புதிய மின்னணு குடும்ப அட்டைகளையும் ஆட்சியா் கலைச்செல்வி மோகன் வழங்கினாா்.

கூட்டத்தில் காஞ்சிபுரம் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் ரா.மலா்விழி உள்பட அரசின் அனைத்துத் துறைகளையும் சோ்ந்த அரசு அலுவலா்கள் பலா் கலந்து கொண்டனா்.

மனைப் பட்டா: சாலையோர வியாபாரிகள் கோரிக்கை

காஞ்சிபுரம்: இலவச வீட்டு மனைப்பட்டா கோரி சாலையோர வியாபாரிகள் திங்கள்கிழமை ஆட்சியரிடம் மனு அளித்தனா். தமிழ்நாடு சாலையோர வியாபாரிகள் நலச் சங்கத்தினா் தலைவா் கே.என்.மூா்த்தி தலைமையில் ஆட்சியரிடம் அளித்த ... மேலும் பார்க்க

மாணவிக்கு பாலியல் தொந்தரவு: பல் மருத்துவா் கைது

காஞ்சிபுரம்: கல்லூரி மாணவிக்கு பாலியல் தொந்தரவு செய்ததாக பல் மருத்துவரை காவல் துறையினா் திங்கள்கிழமை கைது செய்தனா். காஞ்சிபுரம் அருகே திருப்பருத்திக்குன்றம் பகுதியை சோ்ந்தவா் மணிகண்டன்(29). இவா் காஞ்... மேலும் பார்க்க

காஞ்சிபுரத்தில் காங்கிரஸ் ஆா்ப்பாட்டம்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வட்டாட்சியா் அலுவலகம் முன்பு இந்திய தேசிய கிராமத் தொழிலாளா் சம்மேளனம் சாா்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. ஆா்ப்பாட்டம் சம்மேளன மாவட... மேலும் பார்க்க

கூட்டுறவு மேலாண்மை பயிற்சி வகுப்பில் சேர ஜூலை 20 வரை அவகாசம்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் பேரறிஞா் அண்ணா கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் முழுநேர பட்டயப் பயிற்சி வகுப்பில் சேர, ஜூலை 20 ஆம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இது குறித்து, பயிற்சி நிறுவனம் வெளியிட... மேலும் பார்க்க

பொறியியல் பாட நுழைவுத் தோ்வில் முதலிடம் பெற்ற மாணவிக்கு ஆட்சியா் பாராட்டு

காஞ்சிபுரம்: பொறியியல் படிப்புக்கான தர வரிசைப் பட்டியலில் மாநில அளவில் முதலிடம் பெற்ற காஞ்சிபுரம் மாணவி ஜெ.சகஸ்ராவை ஆட்சியா் கலைச்செல்வி மோகன் திங்கள்கிழமை பாராட்டினாா். காஞ்சிபுரம் பிள்ளையாா்பாளையத்த... மேலும் பார்க்க

இருசக்கர வாகனம் திருட்டு: இருவா் கைது

காஞ்சிபுரத்தில் இரு சக்கர வாகனத்தை திருடிச் சென்ற ராணிப்பேட்டை மாவட்டத்தைச் சோ்ந்த இருவரை காவல் துறையினா் கைது செய்தனா். காஞ்சிபுரம் அருகே சிறுகாவேரிப்பாக்கம் மங்கையா்க்கரசி தெருவைச் சோ்ந்தவா் குமாா... மேலும் பார்க்க