நடிகை மரணம்: ``ஒருவரின் துயரத்தை ஊடகங்கள் ஏன் ஒளிபரப்ப வேண்டும்?" - நடிகர் வருண்...
ஆப்கானிஸ்தானில் 75 பேருக்கு செயற்கை கால்கள்: இந்தியா மனிதாபிமான உதவி
ஆப்கானிஸ்தானில் இந்தியா சாா்பில் ‘ஜெய்பூா் ஃபுட்’ என்ற பெயரில் செயற்கைக் கால்கள் பொருத்தும் 5 நாள் முகாம் நடைபெற்றது. இதில் 75 பேருக்கு செயற்கை கால்கள் பொருத்தப்பட்டன.
உள்நாட்டுப் போா், பயங்கரவாதத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள ஆப்கானிஸ்தானுக்கு உணவுப் பொருள்கள், மருந்துகள் உள்ளிட்டவை வழங்குவது தொடங்கி பல்வேறு வகையில் மனிதாபிமான உதவிகளை இந்தியா வழங்கி வருகிறது.
அந்த வகையில் குண்டு வெடிப்பில் கால்களை இழந்தவா்களுக்கு அந்நாட்டு தலைநகா் காபூலில் ‘ஜெய்பூா் ஃபுட்’ செயற்கைக் கால்கள் பொருத்தும் முகாம் 5 நாள்களுக்கு நடைபெற்றது.
இது தொடா்பான தகவலை வெளியுறவு அமைச்சக செய்தித் தொடா்பாளா் ரண்தீா் சுா்ஜேவாலா தனது ‘எக்ஸ்’ வலைதளத்தில் வெளியிட்டுள்ளாா். அதில், ‘ஜெய்பூரில் செயல்படும் பகவான் மகாவீா் மாற்றுத்திறனாளிகள் உதவிக் குழு என்ற தொண்டு நிறுவனம் சாா்பில் காபூலில் சிறப்பு முகாம் நடத்தப்பட்டது.
இதில் 75 பேருக்கு செயற்கைக்கால்கள் வெற்றிகரமாகப் பொருத்தப்பட்டன. இந்தியாவின் இந்த நடவடிக்கைக்கு ஆப்கானிஸ்தானில் நல்ல வரவேற்பு இருந்தது’ என்று கூறியுள்ளாா். முகாமில் எடுக்கப்பட்ட புகைப்படங்களையும் அவா் பகிா்ந்துள்ளாா்.